ஹிந்துக்கள் மூவர்ணக்கொடியை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் அது கெட்ட சகுனத்தின் அடையாளம் - கூறியது ஆர்.எஸ்.எஸ். - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 13, 2022

ஹிந்துக்கள் மூவர்ணக்கொடியை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் அது கெட்ட சகுனத்தின் அடையாளம் - கூறியது ஆர்.எஸ்.எஸ்.

ஆர்.எஸ்.எஸ். நாக்பூர் தலைமையகத் தில் கடந்த 50 ஆண்டுகளாக தேசியக் கொடி ஏற்றப்படவில்லை என்ற சர்ச்சை மீண்டும் எழுந்துள்ளது. இதற்கு மத்தியில் ஆர்.எஸ்.எஸ். தேசியக் கொடி உறவு குறித்து பார்க்கலாம்.

நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகளில் தேசியக் கொடி ஏற்றும் ஹர் கர் திரங்கா தேசிய பரப்புரையை, ஒன்றிய பாஜக தலைமை யிலான அரசு முன்னெடுத்துள்ளது. இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் தேசிய கொடி உறவு குறித்த விவாதங்கள் மீண்டும் எழுந்துள்ளன.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆக.3ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்தில் கடந்த 52 ஆண்டுகளாக ஏன் தேசியக் கொடியை ஏற்றவில்லை எனக் கேள்வியெழுப் பினார். மறுதினமே ஏஅய்எம்அய்எம் கட்சியின் நிறுவனத் தலைவர் அசாதுதீன் ஓவைசி, “ஆர்.எஸ்.எஸ். சுதந்திர இந்தியா வையும், தேசிய கொடியையும் நிராகரித்து விட்டது” என ட்வீட் செய்தார்.

இதற்கு பதில் அளித்துள்ள பாஜக தலைவர்கள், ‘ஆர்.எஸ்.எஸ்.-இன் ஒவ் வொரு இழைகளிலும் தேசப்பக்தி நிறைந் துள்ளது. சுதந்திர தின கொண்டாட்டங் களை அரசியலாக்க கூடாது” எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஹர் கர் திரங்கா பரப்புரை  சண்டை எப்படி வந்தது?

ஒன்றிய பாஜக அரசாங்கம் ஹர் கர் திரங்கா பரப்புரையின் ஒரு பகுதியாக, அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டது. மேலும் சமூக வலைதளங்களிலும் மூவர் ணக் கொடியை முகப்பு ஒளிப்படமாக மாற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தது.

தொடர்ந்து தலைவர்கள் முகப்பு ஒளிப்படத்தை மூவர்ணக் கொடியாக மாற்றிக்கொண்டனர். இதை உள்நோக்கம் கொண்டது என எதிர்க்கட்சிகள் கேள்வி யெழுப்பின. இது தொடர்பாக இந்தியில் ட்வீட் செய்த ஜெய்ராம் ரமேஷ், “நாங்கள் எங்கள் தலைவர் நேரு பிடித்த தேசியக் கொடியை முகப்பாக வைத்துள்ளோம். பிரதமரின் செய்தி அவர்களின் குடும்பத் தினருக்கு கூட சென்று சேரவில்லை என நினைக்கிறேன். ஆர்.எஸ்.எஸ். தலைவர் கள் பிரதமரின் பேச்சுக்கு கீழ்படிவார்களா? என்றார்.

இது குறித்து பேசிய ஆர்.எஸ்.எஸ். செய்தித் தொடர்பாளர் சுனில் அம்பேகர், “நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுக்க கொண்டாட்டங் களை ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் நடத்தி வருகின்றனர். சுதந்திர தின விழாவில் அரசியல் கூடாது” என்றார்.

ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தில் தேசியக் கொடி 50 ஆண்டுகள் இடை வெளி ஏன்?

நாக்பூர் ஆர்.எஸ்.எஸ். தலைமையகத் தில் இந்திய தேசியக் கொடி ஆங்கிலேய ரிடமிருந்து நாடு விடுதலை பெற்ற ஆகஸ்ட் 15, 1947 மற்றும் முதல் குடியரசுத் தினமான 26 ஜனவரி 1950 ஆம் ஆண்டில் ஏற்றப்பட்டது.

தொடர்ந்து 50 ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தில் தேசியக் கொடி ஏற்றப்படவில்லை.

அடுத்ததாக 2002ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி தேசியக் கொடி ஏற்றப்பட்டது. இதற்கு ஒரு காரணம் உண்டு 2001 ஆம் ஆண்டுக்கு  முன்னதாக 26 ஜனவரி 2001ஆம் ஆண்டு  சில அம் பேகரிய செயல்பாட்டாளர்கள் மூவர் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் வலுக்கட் டாயமாக தேசியக் கொடி ஏற்றினர். இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அப்போது மூவர் மீதும் வழக்கு பதியப் பட்டு கைதுசெய்யப்பட்டனர். இந்த விவ காரம் நாடு முழுவதும் பெரும் பிரச்சினை மற்றும் பேசும்பொருளானதும் அடுத்த ஆண்டு ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் தேசியகொடியை ஏற்றினர்.

ஆர்.எஸ்.எஸ். தலைவர்களும் தேசியக் கொடியும்!

டில்லி விஞ்ஞான் பவனில் ஆர்.எஸ். எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். பவனில் ஏன் தேசியக் கொடி ஏற்றப்படு வதில்லை எனக் கேள்வியெழுப்பப்பட் டது.

அதற்குப் பதிலளித்த சங்க நிர்வாகிகள் ஆர்.எஸ்.எஸ். தேசியக் கொடியோடு நெருங்கிய தொடர்பு கொண்டது என்றனர்.

"முன்னதாக 2015ஆம் ஆண்டு சென் னையில் நடந்த ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சி யில், தேசியக் கொடியில் காவி வர்ணம் மட்டுமே இருந்திருக்க வேண்டும்; மற்ற நிறங்கள் வகுப்புவாதத்தை பிரதிபலிக் கின்றன” என்று கூறப்பட்டது.

மறைந்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் எம்.எஸ். கோவால்கர் தன்னுடைய பஞ்ச் ஆஃப் தார்ட்ஸ் (Bunch of Thoughts)  என்ற புத்தகத்தில், “நாட்டில் ஏற்கனவே தேசியக் கொடி இருக்கும்போது தலைவர் கள் ஏன் வலுக்கட்டாயமாக ஒரு புதிய கொடியை உருவாக்கியுள்ளனர். இந்தக் கொடி எப்படி உருவானது?” எனவும் கேட்டிருந்தார்.  பிரெஞ்சு புரட்சியின் போது சமத்துவம், சகோதரத்துவம் மற் றும் சுதந்திரம் ஆகியவற்றை விவரிக்கும் வகையில் மூவர்ணங்கள் இணைக்கப்பட் டன. அமெரிக்காவும் சில மாற்றங்களுடன் இதனைப் பின்பற்றியது.

இது சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு ஒரு உத்வேகத்தை கொடுத்தது. இதை யறிந்த காங்கிரஸ் தலைவர்கள் மூவர்ணக் கொடியை கையில் எடுத்தனர். மேலும் மூவர்ணம் என்பது இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் ஆகியவற்றை பிரதிபலிப்பதாக இருக்கிறது என ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் புரளியைக் கிளப்பினர். இதனை அடுத்து காவி என்பது தியாகத்தையும், வெள்ளை என்பது தூய்மையையும், பச்சை என்பது வளர்ச்சியையும் குறிப்பதாக தெளிவுபடுத் தப்பட்டது.  முன்னதாக 1947ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ். பத்திரிகையில் "மூன்று வர்ணம் என்பது நாட்டிற்கு தீங்கு விளை விக்கும், மோசமான விளைவுகளை, உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எழுதப்பட்டது. மேலும் இந்தக் கொடியை இந்துக்கள் விரும்பமாட்டார்கள்” என வும் கூறப்பட்டது நினைவு கூரத்தக்கது.

No comments:

Post a Comment