கலைஞர் சொற்படி நடப்பதால் வென்றபடி இருக்கிறேன் திமுக தலைவர் பொறுப்பேற்ற 5ஆம் ஆண்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 28, 2022

கலைஞர் சொற்படி நடப்பதால் வென்றபடி இருக்கிறேன் திமுக தலைவர் பொறுப்பேற்ற 5ஆம் ஆண்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

சென்னை, ஆக. 28- திமுக தலைவர் பொறுப் பேற்று 4 ஆண்டுகள் நிறைவடைந்து இன்று (28.8.2022) அய்ந்தாம் ஆண்டு தொடங்கு வதையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத் தளப் பதிவு வருமாறு,

தகைசால் தந்தையே!

தன்னிகரற்ற தலைவரே!

முதல்வர்களில் மூத்தவரே! 

கலையுலக வேந்தரே!

எங்களின் உயிரே! உணர்வே!

தாங்கள் வகித்த தி.மு.க. தலைவர் பொறுப் பில் நான் அமர்ந்து நான்கு ஆண்டுகள் நிறை வடைந்து அய்ந்தாவது ஆண்டில் அடியெ டுத்து வைக்கிறேன்.

ஒவ்வொரு அடியும் - நீங்கள் அமைத்த படியில்தான் ஏறுகிறேன். உங்கள் சொற்படியே நடக்கிறேன். அதனால்தான் வென்றபடியே இருக்கிறேன்!

மேலும் வெல்ல மென்மேலும் வாழ்த் துங்கள்!

-இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment