இலவச சீருடை வழங்க ரூ.4.14 கோடி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 23, 2022

இலவச சீருடை வழங்க ரூ.4.14 கோடி

சென்னை, ஆக.23  அங்கன்வாடியில் படிக்கும், 1.58 லட்சம் குழந்தைகளுக்கு, இலவச சீருடை வழங்க, 4.14 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அங்கன்வாடி மய்யங் களில், ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 63 குழந்தைகள் படிக்கின்றனர்.இவர் களில், 80 ஆயிரத்து 10 பேர் சிறுவர்கள்; 78 ஆயிரத்து 53 பேர் சிறுமியர். இவர்களுக்கு தலா இரண்டு சீருடைகள், இலவச மாக வழங்கப்பட உள்ளன. இதற்காக, அரசு சார்பில், 4.14 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியில், 3 லட்சத்து 16 ஆயிரத்து 126 சீருடை களை தயார் செய்து வழங்க, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில், ஒப் பந்தம் விடப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment