சென்னை, ஆக.23 அங்கன்வாடியில் படிக்கும், 1.58 லட்சம் குழந்தைகளுக்கு, இலவச சீருடை வழங்க, 4.14 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அங்கன்வாடி மய்யங் களில், ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 63 குழந்தைகள் படிக்கின்றனர்.இவர் களில், 80 ஆயிரத்து 10 பேர் சிறுவர்கள்; 78 ஆயிரத்து 53 பேர் சிறுமியர். இவர்களுக்கு தலா இரண்டு சீருடைகள், இலவச மாக வழங்கப்பட உள்ளன. இதற்காக, அரசு சார்பில், 4.14 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியில், 3 லட்சத்து 16 ஆயிரத்து 126 சீருடை களை தயார் செய்து வழங்க, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில், ஒப் பந்தம் விடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment