சென்னை,ஆக.19 தமிழ்நாடு சட்ட கல்லூரிகளில் மூன்று ஆண்டு எல்.எல்.பி. சட்ட படிப்பில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவுக்கு செப். 19 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலையின் கீழ் செயல்படும் சட்ட கல்லூரிகளில் மூன்று ஆண்டு எல்.எல்.பி. படிப்பில் சேர மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடத்தப் படுகிறது.சீர்மிகு சட்டக் கல்லூரி 14 அரசு கல்லூரிகள் மற்றும் திண்டிவனம் தனியார் சரஸ்வதி சட்ட கல்லூரி ஆகியவற்றில் உள்ள 1761 இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.
இதற்கான விண்ணப்பப்பதிவு ஆக. 4ஆம் தேதி துவங்கியது. சட்டப் பல்கலையின்www.tndalu.ac.in என்ற இணையதளத்தில் ஆக. 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலை யில் விண்ணப்ப பதிவுக்கான கால அவகாசம் செப். 19 வரை நீட்டிக்கப்படுவதாக அம்பேத்கர் சட்ட பல்கலை நேற்று (18.8.2022) அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment