20 ரூபாய்க்கு ரேசன் கடையில் தேசியக்கொடி விற்கும் பாஜகவினருக்கு தமிழ்நாட்டையும், திராவிட இயக்கங்களின் தேசப்பற்று குறித்தும் பேசத்தகுதி இல்லை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 13, 2022

20 ரூபாய்க்கு ரேசன் கடையில் தேசியக்கொடி விற்கும் பாஜகவினருக்கு தமிழ்நாட்டையும், திராவிட இயக்கங்களின் தேசப்பற்று குறித்தும் பேசத்தகுதி இல்லை

காந்தியாருக்கே விடுதலைப் போராட்ட உணர்வை ஊட்டிய தமிழ்நாடு. திராவிடக் கொள்கையின் வழிகாட்டலால் தனித்துவம் பெற்ற தமிழ்நாடு.

தற்போதைய தமிழ்நாட்டின் அரசியல் மனநிலையை வடிவமைத்ததில் இந்திய சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் நடந்த பல போராட்டங்கள் முக்கியப் பங்கை வகிக்கின்றன. சுதந்திரத்திற்கு முன்பாகவே துவங்கிய ஹிந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம், விடுதலைக்குப் பின் நடந்த குலக் கல்வி எதிர்ப்புப் போராட்டம், தமிழ்நாடு பெயர் மாற்றப் போராட்டம், 1965இல் நடந்த ஹிந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டம், ஜல்லிக்கட்டுப் போராட்டம் போன்றவை தமிழ்நாட்டு வரலாற்றில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியவை. தமிழ்நாட்டின் வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய சில போராட்டங் களையும் அவற்றின் பின்னணிகளையும் இங்கே பார்க்கலாம்.

1.ஹிந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்

தமிழ்நாட்டில் ஹிந்தித் திணிப்புக்கு எதிராக பல்வேறு தருணங்களில் போராட் டங்கள் நடந்திருக்கின்றன. அதில் 1938லும் 1965லும் நடந்த போராட்டங்கள் தமிழ்நாடு அரசியல் போக்குகளையே மாற்றியமைத் தன.

1937இல் சென்னை மாகாண சட்டமன் றத்திற்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் வெற்றிபெற்றது. 1937 ஜூலை 14ஆம் தேதி சி. ராஜகோபாலாச்சாரி மாகா ணப் பிரதமராகப் பதவியேற்றார். பதவி யேற்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் பாகவே, ஹிந்தி குறித்த தனது கருத்தை வெளியிட்டார் ராஜாஜி. சென்னையில் உள்ள தக்ஷிண பாரத ஹிந்தி பிரச்சார சபையில் பேசிய அவர், வட இந்தியர்களை தென்னிந்தியர்கள் தற்போதையதைவிட நன்றாகப் புரிந்துகொள்ள அரசியலிலும் தொழிலிலும் ஹிந்தியின் இடம் மிக முக்கியமானது என்றும் பள்ளிக்கூடங்களில் ஹிந்தியை கட்டாயப்பாடமாக்க வேண்டு மென்றும் குறிப்பிட்டார் அவர்.

அவரது பேச்சுக்கு பல தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்த நிலையில், 1938-1939ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நிதியமைச்சர் என்ற முறை யில் அவையில் தாக்கல் செய்து பேசிய ராஜாஜி, 125 பள்ளிக்கூடங்களில் ஹிந்துஸ் தானியைக் கற்பிக்க நிதி ஒதுக்கப்பட்டி ருப்பதாக அறிவித்தார். அதன்படி, ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்புவரை படிக் கும் எல்லா மாணவர்களும் கண்டிப்பாக ஹிந்துஸ்தானி படிக்க வேண்டும்.

எதிர்க்கட்சியான நீதிக் கட்சியைச் சேர்ந்த எம்.ஏ. முத்தைய்யா செட்டியார், ஹிந்தியைக் கண்டிப்பாக படிக்கச் செய்யக் கூடாது, விரும்பினால் படிக்கலாம் என்று விதியை மாற்ற வேண்டுமெனக் கூறினார். சட்டமன்றத்திற்கு உள்ளேயும் வெளியே யும் கடுமையான எதிர்ப்பு ஏற்பட்ட போதி லும், அரசு தனது நிலையில் உறுதியாக இருந்தது. ஹிந்தி ஆசிரியர்களுக்கென 20,000 ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

6 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு ஹிந்தியைக் கட்டாயமாக்கும் அரசாணை 1938 ஏப்ரல்   21ஆம் தேதி வெளியிடப்பட் டது. மொத்தமுள்ள 125 பள்ளிகளில் தமிழ் பேசும் பகுதிகளில் மட்டும் 60 பள்ளிகள் அமைந்திருந்தன. இதையடுத்து ஹிந்திக் கான போராட்டங்கள் வெடிக்க ஆரம்பித் தன. மதுரையில் மே மாதம் நடந்த ஹிந்தி எதிர்ப்பு மாநாட்டில், ஹிந்தி கற்பிக்கப்படும் 125 பள்ளிக்கூடங்களையும் புறக்கணிக்கும் படி கோரப்பட்டது. மே 1ஆம் தேதியன்று ஸ்டாலின் ஜெகதீசன் என்பவர் ராஜாஜியின் வீடு முன்பாக பட்டினிப் போராட்டத்தைத் துவங்கினார். ஹிந்தி எதிர்ப்புக்காக நடந்த முதல் பட்டினிப் போராட்டமாக இது அமைந்தது. ஜூன் ஒன்றாம் தேதி ஈழத்து சிவானந்த அடிகள் தலைமையில் ஒரு ஊர்வலம் பிரதமர் இல்லத்தை நோக்கிப் புறப்பட்டது.

சுதந்திரப் போராட்டத்திற்கு எதிராக ஆங்கிலேயர்களால் பயன்படுத்தப்பட்டு வந்த, "திருத்தப்பட்ட குற்றச்சட்டத்தின் ஏழாம் பிரிவு", ஹிந்தி எதிர்ப்புக்காரர்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது. இந்தப் பிரி வில் கைதுசெய்யப்படுவோருக்கு பிணை கிடைக்காது. இந்தச் சட்டத்தை பயன்படுத் துவதை காந்தியாரே கண்டித்தார். இதற்குப் பிறகு, ராஜாஜி கலந்துகொள்ளும் கூட்டங்களில் எல்லாம் கறுப்புக்கொடிகள் காட்டப்பட்டன. செருப்புகள் வீசப்பட்டன.

1938 நவம்பரில் நடந்த தமிழ்நாடு பெண்கள் மாநாட்டில் பேசிய பேச்சுக்காக தந்தை பெரியார் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்பட்டு, ஒன்றரை ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. ஆளுநர் தலையீட்டில் அது சாதாரண தண்டனையாக மாற்றப்பட்டது.

ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு கைதுசெய்யப்பட்ட நட ராஜன், உடல்நலக் குறைவால் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு 1939 ஜனவரி 15ஆம் தேதி உயிரிழந்தார். ஹிந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் முதல் உயிர் பலி இவருடையதுதான். அடுத்த இரண்டு மாதங்களுக்குள் மார்ச் 12ஆம் தேதி சிறையிலேயே உயிரிழந்தார் தாளமுத்து.

போராட்டங்கள் தொடர்ந்து நடந்த போதும் அரசு அசரவில்லை. 1939 ஏப்ரலில் மற்றொரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், மேலும் 100 பள்ளிக்கூடங்களில் ஹிந்தி கட்டாயப் பாடமாக்கப்பட்டது. இந்த நிலையில் இரண்டாம் உலகப் போர் வெடிக்கவே, மாகாணங்களில் இருந்த காங்கிரஸ் அரசுகள் பதவி விலகின. கட்டாய ஹிந்திப் பாடத்தை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கைகள் வந்தாலும், ஆங்கிலேய அரசு அதற்குச் செவிமெடுக்க வில்லை. ஆனால், மேலும் 100 பள்ளிக் கூடங்களில் ஹிந்தியை அறிமுகம் செய்யும் திட்டம் ரத்துசெய்யப்பட்டது.

1939 டிசம்பர் 31ஆம் தேதி காஞ்சிபுரத் தில் கூடிய ஹிந்தி எதிர்ப்புக் குழுவினர், ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு என புதிய முன்னணியை உருவாக்கினர். தலை வராக தந்தை பெரியாரும் செயலராக சி.என். அண்ணாதுரையும் நியமிக்கப்பட் டனர். ஹிந்திப் பாடத்தை நீக்கவேண்டும் இல்லாவிட்டால் போராட்டம் மீண்டும் துவங்குமென 1940 பிப்ரவரி 19ஆம் தேதி பெரியார் அறிவித்தார். இந்த நிலையில், ஹிந்தி கட்டாயப்பாடம் என்பது நீக்கப்படு வதாக பிப்ரவரி 21ஆம் தேதி ஆங்கில அரசு அறிவித்தது. இப்படியாக இரண் டாண்டு காலம் நடந்த போராட்டம் ஒரு முடிவுக்கு வந்தது. இந்த ஒட்டுமொத்தப் போராட்டத்திலும் சேர்த்து ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 1271 பேர் கைதுசெய்யப்பட்டனர். நடராஜன், தாள முத்து என இரண்டு பேர் உயிரிழந்தனர்.

2. 1948 ஹிந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மீண்டும் ஆட்சிக்குவந்த காங்கிரஸ் அரசு, மறுபடியும் ஹிந்தியை பள்ளிக்கூடங்களில் அறிமுகப்படுத்த முயன்றது. 1948 ஜூன் 20ஆம் தேதி இது தொடர்பாக ஒரு அறி விப்பு வெளியானது. இந்த முறையும் ஹிந்தி கட்டாயப்பாடமாக்கப்பட்டது. ஆனால், மெட்ராஸ் மாகாணத்தின் தெலுங்கு, மலையாளம், கன்னடம் பேசும் பகுதிகளில் கட்டாயப்பாடமாகவும் தமிழ் பேசும் பகுதிகளில் விருப்பப்பாடமாகவும் வைக் கப்பட்டது. ஆனால், காங்கிரஸ் தலைவர் கள் இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்த தால், தமிழ் பேசும் பகுதிகளிலும் ஹிந்தி கட்டாயப்பாடமாக்கப்பட்டது.

இதையடுத்து மீண்டும் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் துவங்குமென அறிவிக்கப் பட்டது. இந்தப் போராட்டத்தின் தளபதி யாக சி.என். அண்ணாதுரை நியமிக்கப் பட்டார். இதையடுத்து 1948 ஆகஸ்ட் 10ஆம் தேதியன்று போராட்டம் துவங் கியது. சென்னை முத்தியால்பேட்டை மேல் நிலைப் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார் அண்ணா. ஆகஸ்ட் 23ஆம் தேதி அப்போதைய 'கவர்னர் ஜெனரலான ராஜாஜி' சென் னைக்கு வரவிருந்த நிலையில், அவருக்குக் கறுப்புக் கொடி காட்டுவது குறித்து விவா திக்க அதற்கு முந்தைய நாள் கூடியிருந்த பெரியார், அண்ணா, கே.கே. நீலமேகம் உள்ளிட்டோர் கைதுசெய்யப்பட்டனர். இருந்தபோதும் ராஜாஜி சென்னை வந்த போது அவருக்குக் கறுப்புக் கொடி காட் டப்பட்டது.

இந்தப் போராட்டங்களில் ஹிந்தி ஆத ரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் மோதல்கள் நடந்தன. பல இடங்களில் காங்கிரஸ்காரர்கள், ஹிந்தி எதிர்ப்பாளர்கள் மீது தாக்குல் நடத்தினர். போராட்டங்கள் தீவிரமடைய பல இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக் கப்பட்டது. பலர் கைதுசெய்யப்பட்டனர். 1949 மார்ச்சில் முதலமைச்சர் பதவியிலி ருந்து ஓ.பி. ராமசாமி ரெட்டியார் விலகினார். இதற்குப் பின் வந்த அமைச்சரவை, ஹிந்தியைக் கட்டாயமாக்கும் முயற்சியைக் கைவிட்டது.

இதற்குப் பிறகு, 1950ஆம் ஆண்டு மே மாதம் மீண்டும் ஹிந்தியைக் கட்டாயப் பாடமாக்கவிருப்பதாக அறிவிப்பு வெளி யானது. ஆனால், மீண்டும் பெரும் போராட் டம் நடக்குமென்ற அறிவிப்பு வெளியா னதையடுத்து கட்டாய ஹிந்தி அறிவிப்பை ஜூலை 27ஆம்தேதி திரும்பப் பெற்றது தமிழ்நாடு அரசு.

3. மூன்றாவது ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம்

இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி இந்தியாவில் தேசிய மொழி என்பது கிடை யாது. 1965ஆம் ஆண்டுவரை ஹிந்தியும் ஆங்கிலமும் அலுவல் மொழிகளாக இருக்கும். 1965ஆம் ஆண்டிற்குப் பிறகு படிப்படியாக ஆங்கிலம் விலக்கிக் கொள் ளப்பட்டு, ஹிந்தியே ஒன்றிய அரசின் ஒரே அலுவல் மொழியாக இருக்கும் என முடிவெடுக்கப்பட்டது.

ஆனால், ஹிந்தி பேசாத மாநிலங்களில் ஹிந்திக்கு எதிர்ப்புத் தொடர்ந்த நிலையில், 1959இல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, ஹிந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும்வரை ஆங்கிலமும் தொடர்பு மொழியாக இருக் குமென வாக்குறுதியளித்தார். இந்திய அர சின் மொழிக் கொள்கையில் இந்த மாற் றங்களைச் செயல்படுத்த அலுவல் மொழிச் சட்டம் அமலுக்கு வந்தது. ஆனால், அதில் "ஆங்கிலமும் தொடரலாம்" என்று இருப் பதை "ஆங்கிலமும் தொடரும்" என்று மாற்ற வேண்டுமென அண்ணா கோரினார். அந்த மாற்றம் ஏற்கப்படவில்லை.

இந்த நிலையில் ஹிந்தி அலுவல் மொழியாக மாறும் 1965 ஜனவரி 26 நெருங்க நெருங்க தமிழ்நாட்டில் பதற்றம் அதிகரித் தது. தமிழ்நாடு மாணவர்கள் ஹிந்தி எதிர்ப்பு சங்கம் உருவாக்கப்பட்டது. பல மாணவர் மாநாடுகள் நடத்தப்பட்டன. கடந்த காலங்களில் ஹிந்தி ஆதரவாளராக இருந்த ராஜாஜி, இந்த முறை ஹிந்தியின் எதிர்ப்பாளர்களுடன் சேர்ந்துகொண்டார்.

ஜனவரி 25ஆம் நாள் துக்க தினமாகக் கொண்டாடப்பட்டது. மதுரையில் நடந்த ஊர்வலத்தில் துவங்கிய கலவரம் மாநிலத் தின் பிற பகுதிகளுக்கும் பரவியது. அடுத்த இரண்டு வாரங்கள் மாநிலம் முழுவதும் கலவரங்கள் தொடர்ந்து நடந்தன. ரயில் பெட்டிகள், ஹிந்தி பெயர்ப் பலகைகள் கொழுத்தப்பட்டன. துணை ராணுவம் வரவழைக்கப்பட்டது. அய்ந்து பேர் தீக்குளித்தும் மூன்று பேர் நஞ்சருந்தியும் தற்கொலை செய்துகொண்டனர். இரண்டு வார கால கலவரங்களில் சுமார் 70 பேர் இறந்ததாக அதிகாரபூர்வ அறிவிப்புகள் கூறின. ஆனால், உண்மையில் இறந்தவர் களின் எண்ணிக்கை 300-க்கும் அதிகமாக இருந்தது.

ஒன்றிய அமைச்சர்களாக இருந்த சி. சுப்பிரமணியன், அழகேசன் ஆகியோர் பதவிவிலகினர். பிப்ரவரி 11ஆம் தேதி வானொலியில் உரை நிகழ்த்திய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, நேருவின் உறுதி மொழி பின்பற்றப்படுமென வாக்குறுதி யளித்தார். எல்லா இடங்களிலும் ஹிந்தியு டன் ஆங்கிலமும் தொடருமென வாக்குறு தியளித்தார்.

இந்த வாக்குறுதியை அடுத்து நிலைமை கட்டுக்குள் வந்தது. மாணவர் சங்கங்கள் தங்கள் போராட்டத்தைக் காலவரையின் றித் தள்ளி வைப்பதாக பிப்ரவரி 12இல் அறிவித்தனர்.

முந்தைய ஹிந்தி எதிர்ப்புப் போராட் டங்களைப் போல அல்லாமல், இந்த ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் தேர்தல் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இது வெறும் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டமாக இல்லாமல் காங்கிரஸ் எதிர்ப்பு போராட் டமாக மாறியது. காங்கிரஸ்காரர்கள் அனை வருமே ஹிந்தியின் ஆதரவாளர்களாகப் பார்க்கப்பட்டனர். 1967ஆம் ஆண்டுத் தேர்தலில் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் தலைவரான பெ. சீனி வாசன், மேனாள் முதலமைச்சர் காமராஜ ரையே தோற்கடித்தார். தமிழ்நாட்டில் காங் கிரசை வீழ்த்தி, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைவதற்கும் இந்தப் போராட்டம் காரணமாக அமைந்தது.

புதிதாகப் பதவியேற்ற தி.மு.க. அரசு, பள்ளிக்கூடங்களில் இருந்த மும்மொழிக் கொள்கையை மாற்றி இரு மொழிக் கொள்கையை அறிவித்தது. அதற்குப் பிறகு, ஹிந்தி திணிப்பு தொடர்பாக எந்த ஒரு சிறிய அறிவிப்பும் பெரிய எதிர்விளை வுகளை தமிழ்நாட்டில் ஏற்படுத்தியது. ஹிந்தி என்ற சொல், தமிழ்நாட்டு அரசியல் மனநிலையில் பெரும் தாக்கத்தை ஏற் படுத்தும் சொல்லாக மாறியது.


4. குலக் கல்வி எதிர்ப்புப் போராட்டம்

தமிழ்நாட்டின் கல்வி வரலாற்றிலும் சுதந்திரத்திற்குப் பிந்தைய தமிழ்நாட்டின் வரலாற்றிலும் மிக முக்கியமான போராட்ட மாக அமைந்தது குலக் கல்வி எதிர்ப்புப் போராட்டம். சி. ராஜகோபாலாச்சாரியார் தலைமையிலான சென்னை மாநில அரசு அறிமுகப்படுத்திய 'சீர்திருத்திய தொடக் கக்கல்வித் திட்டத்திற்கு' எதிராகவே இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

1952 ஏப்ரலில் சென்னை மாநில முதலமைச்சராக பதவியேற்றார் ராஜாஜி. பதவியேற்று ஓராண்டில், 1953ல் "சீர்திருத் திய தொடக்கக் கல்வித் திட்டம்" என்ற பெயரில் ஒரு கல்வித் திட்டத்தை அறிமுகப் படுத்தினார் ராஜாஜி. கிராமப்புற தொடக்கப் பள்ளி மாணவர்கள் அரை நாளை பள்ளிப் படிப்பிலும் அரை நாளை தம் தந்தையின் பாரம்பரிய தொழிலைப் பயில்வதிலும் ஈடுபடுவார்கள் என்றது அந்தத் திட்டம். 1953 ஜூன் மாதம் துவங்கும் கல்வியாண் டிலிருந்து இந்தத் திட்டம் அமலுக்கு வரு மென அறிவிக்கப்பட்டது. கல்வி அமைச்சர் எம்.வி. கிருஷ்ணாராவ், கல்வித் துறைச் செயலர் கே.எம். உன்னிதன் ஆகியோரி டம்கூட கலந்தாலோசிக்காமல் இந்தத் திட்டம் குறித்த அறிக்கை ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டது. கட்சிக்குள்ளும் யாரிட மும் கலந்தாலோசிக்கவில்லை.

இந்தத் திட்டத்திற்கு உடனடியாக எதிர்ப்புக் கிளம்பியது. ஆசிரியர்கள், கல்வி யாளர்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட் டோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்தத் திட்டத்தால் ஆசிரியர்களின் வேலைச் சுமை அதிகரித்ததால், அவர்கள் கடுமையாக எதிர்த்தனர். பெரியார், அறிஞர் அண்ணா  உள்ளிட்டோர் இந்தத் திட்டத்தை குலக் கல்வித் திட்டம் என்று குறிப்பிட்டு, கடுமையாக எதிர்த்தனர்.  ஜாதி அமைப்பைக் காப்பாற்றுவதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கம் என்று அவர்கள் குற்றம்சாட்டினர். இருந்தபோதும் ராஜாஜி ஓய்ந்துவிடவில்லை. இந்தத் திட்டம் குறித்து அவரும் அவருடைய அமைச்ச ரவை சகாக்களும் மாநிலம் முழுவதும் பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய் தனர். இந்தத் திட்டத்திற்கு எதிராக 1953 ஜூலையில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டு, ஒரு ஓட்டில் தோல்வியடைந்தது.

திராவிட இயக்கங்கள் மாநிலம் முழு வதும் நடத்திய மறியல்கள், பேரணிகள், எதிர்ப்புக்கூட்டங்கள் தொடர்பாக ஏறத்தாழ இரண்டாயிரம் பேர் கைதாயினர். சில இடங்களில் இந்தப் போராட்டங்களுக்கு எதிராக துப்பாக்கிச் சூடு நடந்தபோது அதில் பலர் காயமடைந்ததோடு,  உயிர்ப் பலிகளும் ஆனது

கட்சிக்குள்ளும் எதிர்ப்புகள் வலுத்த நிலையிலும்கூட திட்டத்தை மாற்றிக்கொள் ளவோ, பின்வாங்கவோ ராஜாஜி தயாராக இருக்கவில்லை. முடிவில், அவர் பதவி விலகியதோடு இந்த விவகாரம் முடிவுக்கு வந்தது. அவருக்கு அடுத்து முதலமைச்ச ராகப் பதவியேற்ற காமராஜர், இந்தத் திட் டத்தை கிடப்பில்போட்டார். அத்தோடு இந்த விவகாரம் தொடர்பான போராட் டங்கள் முடிவுக்கு வந்தன.

ஆனால், இதற்குப் பிறகு எப்போ தெல்லாம் பள்ளிக்கூடத்தில் தொழிற்கல்வி குறித்த பேச்சு எழுகிறதோ, அப்போதெல் லாம் அதனைக் குலக் கல்வியோடு ஒப் பிடுவது தமிழ்நாட்டில் வழக்கமாகியிருக் கிறது. அதற்கான எதிர்ப்புகளும் கடுமை யாக இருக்கின்றன.

5. சட்ட எரிப்புப் போராட்டம்

ஜாதியையும் மதத்தையும் காப்பாற்றும் இந்திய அரசமைப்புச் சட்டத்தை எரிப்பது என்ற பெரியாரின் போராட்டம், அய்ம்பது களின் பிற்பகுதியில் மிகப் பெரிய சல சலப்பை ஏற்படுத்திய ஒரு போராட்டமாக அமைந்தது.

1957ஆம் ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி தஞ்சாவூரில் கூடிய திராவிடர் கழக மாநாட் டில், நவம்பர் 26ஆம் தேதி அரச மைப்புச் சட்டத்தைக் கொளுத்துவதென்று தீர்மா னிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்டதி லிருந்து போராட்டம் நடந்த 26ஆம் தேதி வரை யிலான 23 நாட்களும் தமிழ்நாட்டில் மிக வும் கொந்தளிப்பான நாட்களாக அமைந் தன. அரசமைப்புச் சட்டத்தையே கொளுத் துவது என்ற பெரியாரின் இந்த அறிவிப்பு அரசுக்கும் மக்களுக்கும் பெரும் அதிர்ச்சி யாகவே அமைந்தது.

அந்தத் தருணத்தில் சென்னை மாகாண பொதுத் தேர்தல் முடிவடைந்து, காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று முதலமைச்சராக காம ராஜர் பதவியேற்றிருந்தார். அந்தத் தேர் தலில் காமராஜருக்கு பெரியார் ஆதரவு தெரிவித்து பிரச்சாரமும் செய்திருந்தார். ஆனால், அவர் பதவியேற்று ஆறு மாதங் களுக்குள் இந்தப் போராட்டத்தை அறி வித்ததால் தர்மசங்கடமான நிலை ஏற் பட்டது. ஆனால், தனி மனிதர்களைவிட ஜாதி ஒழிப்பே முக்கியம் என்றார் பெரியார்.

ஆனால், இந்தப் போராட்டத்திற்கு முன்பாக பல்வேறு இடங்களில் பெரியார் பேசிய பேச்சுகள் மிகக் கடுமையான வையாக இருந்தன. வன்முறையின் தொனி யும் அதில் இருந்தது. இதனால், தஞ்சாவூர் மாநாட்டிற்குப் பிறகு, பெரியார் மீது இ.பி.கோ. 302ஆவது பிரிவு உட்பல பல கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன.

இதையடுத்து, தேசிய கவுரவ அவமதிப் புத் தடைச் சட்டம் 1957 என்ற சட்டத்தை தமிழ்நாடு அரசு கொண்டுவந்தது. சட்ட எரிப்பை தி.மு.க. பொதுச் செயலாளர் சி.என். அண்ணாதுரை ஏற்கவில்லையென் றாலும், ஆதரிக்கவும் இல்லை. அது தொடர் பாக சட்டப்பேரவையில் பேசிய அறிஞர் அண்ணா, "சட்டத்தை எரிக்கும் போராட் டத்திற்காக தனிச் சட்டம் கொண்டுவரும் அரசு, ஜாதி வெறியை அடக்க என்ன சட் டத்தைக் கொண்டுவந்திருக்கிறது என்று கேள்வியெழுப்பினார். தேசியச் சின்னங் களை அவமானப்படுத்துபவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அளிக்கும்வகையில் உருவாக்கப்பட்டி ருந்த அந்தச் சட்டம் நிறைவேறியது.

இதையடுத்து, ஆண்டுக்கணக்கில் சிறையில் இருக்கத் தயாராக இருக்கும்படி தொண்டர்களிடம் கூறிய பெரியார், கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டால் என்ன கூற வேண்டும் என்பதையும் வெளியிட்டார். குற்றவாளி என்று கருதப்பட்டால் அதற்கான தண்ட னையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கி றேன் என்று அதில் கூறப்பட்டிருந்தது. சிறை செல்லத் தயாராக இருப்பவர் மட்டும் போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்றார் பெரியார்.

இந்த நிலையில், போராட்டத்திற்கு முதல் நாள் பெரியார் கைதுசெய்யப்பட்டார். அதற்கு அடுத்த நாள் சட்டத்தைக் கொளுத் தியதாக நான்காயிரத்திற்கும் மேற்பட்டவர் கள் கைதுசெய்யப்பட்டனர். அவர்களுக்கு வெவ்வேறு கால அளவிலான தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், சிறையில் உணவு உள்ளிட்டவை மோசமாக இருந்த நிலையில், சுமார் 15 பேர் சிறையிலேயே இறந்துபோயினர்.

இதற்கிடையில், முன்னெச்சரிக்கை நட வடிக்கையாக கைதான பெரியார் மூன்றா வது நாளே விடுதலையானார். ஆனால், வன்முறை தொடர்பான பேச்சுக்காக அவருக்கு 3 ஆறு மாத தண்டனையை ஒரே நேரத்தில் அனுபவிக்க வேண்டுமென விதிக்கப்பட்டது. ஆறு மாத தண்டனை முடிந்து ஜூன் மாதம் விடுதலையானார் பெரியார். அவர் வெளியில் வந்த கால கட்டத்திலும் சுமார் 1,500 பேர் சிறையில் இருந்தனர்.

தமிழ்நாட்டில் நடந்த மற்றப் போராட் டங்களைப் போல இந்தப் போராட்டத்திற்கு நேரடி பலனோ, மாற்றமோ இல்லை. ஆனால், இந்திய அரசமைப்புச் சட்டம் குறித்த தீவிரமான விமர்சனப் பார்வையை தமிழ்நாட்டில் உருவாக்குவதில் இந்தப் போராட்டம் முக்கியமானதாக அமைந்தது.

6. தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்கான போராட்டம்

மெட்ராஸ் மாகாணம் என்ற மாநிலத் திற்கு தமிழ்நாடு என்ற பெயரைச் சூட்ட வேண்டுமென்ற போராட்டம், ஒரு நீண்ட போராட்டமாக அமைந்தது. இந்தியா சுதந்திரமடைந்த தருணத்தில் தமிழ் நாட்டை உள்ளடக்கிய சென்னை மாகாணம் கீழே கன்னியாகுமரியிலிருந்து ஒடிசா வரை பரவியிருந்தது.

ஆனால், மொழிவாரியாக மாநிலங்க ளைப் பிரிக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்து 1953இல் ஆந்திரப் பிரதேசம் பிரிந்த பிறகு, மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்படுமென்பது எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. ஆகவே, அந்தத் தரு ணத்திலேயே சென்னை மாநிலத்திற்கு தமிழ்நாடு என்ற பெயரைச் சூட்ட வேண்டு மென்ற கோரிக்கை வலுப்பெற ஆரம் பித்தது.

தந்தை பெரியார், சி.பா. ஆதித்தனார், ம.பொ.சி. ஆகியோர் இது குறித்து பேசிவந்த நிலையில், தமிழ்நாடு பெயர் தீர்மானம் ஒன்று 1955 நவம்பர் 24ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் முன்மொழியப்பட்டது. ஆனால், மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயரி லேயே மாநிலம் பன்னாட்டு அளவில் அறியப்படுவதால், இப்போது பெயர் மாற்றத் தேவையில்லை என அப்போதைய காங்கிரஸ் அரசு கூறியது. தீர்மானம் விவா தத்திற்கே எடுத்துக்கொள்ளப்படாமல் தள்ளுபடிசெய்யப்பட்டது.

இந்த நிலையில்தான் 1956 ஜூலை 27ஆம் தேதியன்று காங்கிரசைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரரான சங்கரலிங் கனார் விருதுநகரில் மாரியம்மன் திடலில் தனது பட்டினிப் போராட்டத்தைத் தொடங் கினார். அவர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அந்தப் போராட்டத்தைத் தொடங்கினாலும் முதன்மைக் கோரிக்கை மாநிலப் பெயர் மாற்றக் கோரிக்கையாகவே இருந்தது. அவரது பட்டினிப் போராட் டத்தைக் கைவிடும்படி அரசும் பல அர சியல் கட்சிகளும் வலியுறுத்திய நிலையி லும் அவர் பட்டினிப்  போராட்டத்தைக் கைவிடவில்லை. இதையடுத்து அக்டோபர் 13ஆம் தேதி அவர் உயிரிழந்தார்.

இதற்குப் பிறகு ம.பொ. சிவஞானத்தின் 'தமிழரசுக் கழகம்' இந்த விவகாரத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் சென்றது. இந்த நிலையில், 1960 ஆகஸ்ட் 19ஆம் தேதி மீண்டும் பெயர் மாற்றத் தீர்மானம் பிரஜா சோஷலிஸ்ட் கட்சியின் உறுப்பினர் பி.எஸ். சின்னசாமியால் சென்னை மாகாண சட்ட மன்றத்தில் கொண்டுவரப்பட்டது. அப் போது பேசிய நிதியமைச்சர் சி. சுப்பிர மணியம், தமிழ்நாட்டிற்குள் வேண்டுமா னால், தமிழ்நாடு என்ற பெயரைப் பயன் படுத்தலாம். அதற்கு மேல் ஏதும் செய்ய முடியாது என்றார். இதனை எதிர்த்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்புச் செய்தன.

இந்திய நாடாளுமன்றத்திலும் இதற் கான தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதனைக் கொண்டுவந்தவர் பூபேஷ் குப்தா. அதில் கலந்துகொண்டு தி.மு.க. பொதுச் செயலாளர் சி.என். அண்ணாதுரை பேசிய பேச்சு மிகுந்த கவனத்தைப் பெற்றது.

இதற்குப் பிறகு 1967இல் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியமைத்த பிறகு, ஜூலை 18ஆம் தேதி தமிழ்நாடு பெயர் மாற்றத் தீர்மானம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதற்கு 1968 நவம்பர் 23ஆம் தேதி குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைத்தது.

இந்தப் போராட்டத்தைப் பொறுத்த வரை, மிகப் பெரிய அளவிலான வெகு மக்கள் போராட்டமாக உருவெடுக்க வில்லை என்பது உண்மைதான் என்றாலும், இது தொடர்பான கூட்டங்கள், எழுத்துகள் மக்களின் மனநிலையைப் பிரதிபலிப்ப தாகவே அமைந்தன.

அண்மைக் காலத்தில் ஜல்லிக்கட்டு போராட்டமும் தமிழர்களிடையே மாபெரும் வெற்றிப் போராட்டமாக அமைந்தது என் பது குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment