தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: 17 காவல்துறையினர்மீது நடவடிக்கை நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 19, 2022

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: 17 காவல்துறையினர்மீது நடவடிக்கை நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கை

சென்னை, ஆக. 19தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு நிகழ்வு தொடர் பாக அமைக்கப்பட்ட அருணா ஜெகதீசன் தலைமையிலான விசா ரணை ஆணையம் 17 காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க பரிந் துரை செய்து  விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தது.  

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று குற்றம் சாட்டி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த அமைதி போராட்டம் 2018 மே 22ஆம் தேதி அன்று 100ஆவது நாளை எட்டிய நிலையில் யாரும் எதிர்பார்த் திராத கோர நிகழ்வு அரங்கேறியது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த பொதுமக்கள் சென்று கொண்டிருக்கையில் காவல் துறையினர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில் 12ஆம் வகுப்பு மாணவி ஸ்னோலின் உள்பட 13 பேர் கொல்லப்பட்டனர். 100க்கும் மேற் பட்டோர் படுகாயமடைந்தனர். அதன்பின்னர் ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டாலும், உயிர் தியாகம் செய்த பொதுமக்களுக்கு இன்னும் நீதி கிடைத்தபாடில்லை.

இதற்கிடையில் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் தமிழ்நாடு அரசு விசாரணை ஆணையம் அமைத்தது. இந்த ஆணையம் தொடர் விசாரணை நடத்தி தங்கள் அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்துள்ளது. அதில் பல்வேறு  விவரங்கள் தெரியவந்துள்ளன. அதில்,

* எந்தவிதமான அதிரடி நடவ டிக்கையும் எடுக்க வேண்டிய சூழல் ஏற்படாத நிலையிலும் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதற்காக எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும்  கையாளவில்லை. 

* வன்முறை நிகழ்வுகளை தடுக்கவே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக காவல்துறையினர் தரப்பு விளக்கம் அளித்திருந்தது. ஆனால் அதற்கான எந்த முகாந்திரமும் இல்லை. 

* துப்பாக்கி குண்டுகள் எந்த திசையில் இருந்து வருகிறது என தெரி யாமல் போராட்டக்காரர்கள் சிதறி ஓடியுள்ளனர். அதாவது குருவி களை சுடுவது போல் சுட்டு தள்ளி யுள்ளனர். 

* அதிலும் தொலைதூரத்தில் இருந்து குறி பார்த்து சுடக்கூடிய துப் பாக்கிகளை பயன்படுத்தி இருக் கின்றனர். 

* தப்பியோடிய போராட்டக் காரர்களில் துப்பாக்கிச் சூட்டில் உயிரி ழந்த 13 பேரில் 6 பேர் பின்னந்தலையில் சுடப்பட்டு இறந்துள்ளனர். 

* இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் எந்தவொரு காவல்துறையினருக்கும் படுகாயங்கள் ஏற்படவில்லை. 

* தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விஷயத்தில் மாவட்ட ஆட்சியர் அலட் சியமாக நடந்திருக்கிறார். எந்தவித யோசனையும் செய்யாமல் முடிவெடுத் துள்ளார். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 * மொத்தம் 17 காவல்துறையினர் மீது குற்றவியல் மற்றும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

 * தென் மண்டல காவல்துறை தலைவர் ஷைலேஷ் குமார் யாதவ் (தற்போது காவல்துறை நலத்துறை ஏடிஜிபி-யாக இருக்கிறார்)

 * காவல்துறை துணைத் தலைவர்  (திருநெல்வேலி சரகம்) கபில் குமார் சி.சிர்கார் (தற்போது சென்னை மாநக ரின் கூடுதல் ஆணையராக இருக்கிறார்) 

* தூத்துக்குடி காவல்துறை கண்காணிப்பாளர் பி.மகேந்திரன் (தற்போது சென்னை மாநகர துணை ஆணையராக (நிர்வாகம்) இருக்கிறார்) 

* காவல்துறை துணைக் கண்காணிப் பாளர் லிங்க திருமாறன் 

* மூன்று காவல் ஆய்வாளர்கள் 

* இரண்டு துணை காவல் ஆய்வா ளர்கள் 

* ஒரு ஹெட் தலைமைக் காவலர்.

* 7 காவலர்கள் என 17 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

காவல்துறை தலைமையின் அப்பட்டமான தோல்வி 

துப்பாக்கி குண்டு எங்கிருந்து வருகிறது என்பது தெரியாமலேயே போராட்டக்காரர்கள் சிதறி ஓடினர். ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த போராட்டக்காரர்களை, பூங்காவில் ஒளிந்துகொண்டு  காவலர்கள் சுட்டுள் ளனர். அப்போதைய ஆட்சியர் வெங் கடேசன் தனது பொறுப்புகளை தட்டிக் கழித்துவிட்டு கோவில்பட்டியில் இருந்துள்ளார்.

 எவ்வித யோசனையும் இல்லாமல் முடிவுகளை எடுத்துள்ளார். காவ லர்கள் தங்களது வரம்புகளை மீறி செயல்பட்டுள்ளனர்  தூத்துக்குடி துப் பாக்கிச்சூட்டில் காவலர் சுடலைக் கண்ணு மட்டும் 17 ரவுண்ட் சுட்டுள் ளார். ஒரே காவலரை 4 இடங்களில் வைத்து சுட வைத்ததன் மூலம், அவரை கூலிப்படையினரைப் போல் உயர திகாரிகள் பயன்படுத்தியுள்ளனர்


No comments:

Post a Comment