நெல்லை, ஆக. 5- பெரியார் 1000 தேர்வுகள் நடத்து வது தொடர்பான ஆலோ சனைக் கூட்டம் திருநெல் வேலி மாவட்டத் தலை வர் இரா. காசி தலைமை யில் நடைபெற்றது. தேர்வு நடத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறை கள் மற்றும் பள்ளிகளை அணுகுவது சம்பந்தமாக மாவட்டச் செயலாளர் இரா. வேல் முருகன் எடுத்துக் கூறி விளக்கம் அளித்தார். நிகழ்ச்சியில் சேரன்மகாதேவி பெரியார் அரசு மேல்நிலைப் பள் ளியில் தேர்வு நடத்துவதற் கான படிவத்தை ஒன்றி யச் செயலாளர் கோ.சேகர் மற்றும் ரவி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். மாவட்டத் துணைத் தலைவர் ச.இராசேந்தி ரன், ப.க.மாவட்டத் தலை வர் செ.சந்திர சேகரன், திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொறுப்பாளர் பேராசிரியர் பாபு ஆகி யோர் கலந்து கொண்டனர்.
Friday, August 5, 2022
நெல்லை மாவட்டத்தில் பெரியார் 1000
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment