மாணவி சிறீமதி மரணம்: குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை உறுதி அமைச்சர் எ.வ.வேலு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 18, 2022

மாணவி சிறீமதி மரணம்: குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை உறுதி அமைச்சர் எ.வ.வேலு

கள்ளக்குறிச்சி, ஜூலை, 18 மாணவி சிறீமதி மரணத்தில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு உறுதி தெரிவித்துள்ளார்.  தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சரும், கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான எ.வ.வேலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி சிறீமதி மரணத்துக்கு நீதி கேட்டு 3 நாட்களாக போராடியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை' என்று சட்டமன்ற எதிர்க்கட்சி தலை வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித் துள்ளார். ஒரு மாணவியின் மரணத்தை கூட அரசியலாக்கி, தன் உள்கட்சி மோதலை திசைதிருப்ப அவர் இப்படி கூறியிருப்பதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். சிறீமதி மரணத்தை பொறுத்தவரை, அந்த நிகழ்வு வெளிவந்தவுடன் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரும், காவல்துறை கண்காணிப்பாளரும் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வந்தார்கள். 

மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறியதுடன், காவல்துறை விசாரணை முடுக்கி விடப்பட்டிருந்தது. மாணவி மரணம் குறித்த விசாரணை தீவிரமாக நடந்து வந்த வேளையில், பெற்றோர் தரப்பில் சி.பி.சி.அய்.டி விசா ரணை கோரி வழக்கு தொடரப்பட்டு, அந்த வழக்கு விசாரணை நாளை (இன்று) நடைபெற இருக்கிறது.இதற் கிடையில் பிள்ளையை இழந்த பெற் றோரின் குடும்பத்தை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் நேரில் சந்தித்து ஆறுதல் சொல்லி, மாணவியின் மரணம் குறித்த விசாரணை பாரபட்ச மின்றி நடக்கும் என்று உறுதியும் அளித்துள்ளதை ஏனோ தன் கட்சியில் இருக்கும் குழப்பத்தில் மறந்து விட்டு, எந்த பதவியில் நாம் இருக்கிறோம்? என்பது தெரியாத குழப்பத்தில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. அரசின் மீது வசைபாடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாணவி சிறீமதி மரணம் குறித்த விசாரணை முடிவில் தவறு யார் மீது இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம், யாருக் கும் வேண்டாம். குறிப்பாக எடப்பாடி பழனிசாமிக்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். அமைதியாக நடை பெற்ற போராட்டத்தில் விசமிகளை அனுப்பி இந்த வன்முறையை தூண்டி விட்டவர்கள் யார்? என்பதையும் சேர்த்தே காவல்துறை விசாரித்து வரு கிறது. ஆகவே கலவரத்தில் ஈடுபட்ட வர்கள், தூண்டி விட்டவர்கள் அனை வரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, தக்க தண்டனை பெற்றுக்கொடுக்கப் படும் என்பதோடு, மாணவி சிறீமதி மரணத்தில் நடைபெறும் சி.பி.சி.அய்.டி விசாரணையின் அடிப்படையில் நிச்சய மாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இவ் வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment