ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்படும் தொல் பொருட்கள் : முதுமக்கள் வாழ்ந்த இடம் கொங்கராயக்குறிச்சியா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 25, 2022

ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்படும் தொல் பொருட்கள் : முதுமக்கள் வாழ்ந்த இடம் கொங்கராயக்குறிச்சியா?

தூத்துக்குடி, ஜூலை.25 ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்படும் தொல் பொருட்கள் மூலம் அறி யப்படும் முது மக்கள் வாழ்ந்த இடம் கொங்கராயக் குறிச்சியா? என்ற சந்தேகம் எழுந் துள்ளதால், அதனை முறையாக ஆய்வு செய்ய வேண்டும் என தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.

சிறீவைகுண்டம் அருகே தாமிர பரணிக்கரையில் கொங்கராயக்குறிச்சி அமைந்துள்ளது. இவ்வூரில் முற்கால பாண்டியன் மாறன்சடையனால் 9-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வலம்புரி விநாயகர் கோயில் உள்ளது. மண்ணில் புதைந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு வீரபாண்டீஸ்வரர் கோயில் வெளிப்பட்டது. இந்த கோயில் 11-ஆம் நூற்றாண்டில் ஜடாவர்மன் சிறீ வல்லப பாண்டியனால் கட்டப்பட்டது. இதனை தென் சீர்காழி என்று அழைக் கின்றனர். மேலும், இங்குள்ள பைர வருக்கு சட்டநாதர் என்று பெயர் உள்ளது.

இந்த கோயில்கள் இரண்டும் மண் ணுக்குள் புதைந்தே காணப்படுகின்றன. அதிலும் பழைய வெயிலுகந்தம்மன் மற்றும் மாலை அம்மன் கோயில்கள் முழுவதும் மண்ணுக்குள் புதைந்து கோயிலின் விமானங்கள் மட்டுமே வெளியே தெரியும்படி உள்ளன. ஆற்று வெள் ளத்தில் அழிந்து போன இந்த ஊரில் தான் 19-ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவ பிரசங்கியார் ரேணியஸ் அடிகளார் கிறிஸ்தவ ஆலயம் மற்றும் கிறிஸ்தவ குடியிருப்புகளை உருவாக்கியுள்ளார். வீரபாண்டீஸ்வரர் கோயிலை போன்று இவ்வூரில் மேலும் பல கோயில்களும் மண்ணுக்குள் புதைந்துள்ளன. இவை குறித்த தகவல்களை வெளியே கொண்டு வர தமிழ்நாடு மற்றும் ஒன்றிய தொல் லியல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொல்லியல் ஆர்வ லர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொல்லியல் ஆர்வலர் முத்தாலங் குறிச்சி காமராசு கூறியதாவது:

கொங்கராயக்குறிச்சியின் வரலாறு 9-ஆம் நூற்றாண்டுடன் நிறைவடையவில்லை. உலக நாகரீகத்தின் தொட்டில் என்று அழைக்கப்படும் ஆதிச்சநல்லூர் வரலாற்றுடன் இணைகிறது. ஆதிச்ச நல்லூரில் 1899 முதல் 1905-ஆம் ஆண்டு வரை அகழாய்வு மேற்கொண்ட அலெக்சாண்டர் இரியா தனதுஆய்வு அறிக்கையில், ‘தாமிரபரணி ஆற்றின் வடகரையில் ஆதிச்சநல்லூருக்கு எதிரே அமைந்துள்ள கொங்கராயக் குறிச்சி கிராமத்தில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட செங்கல் கட்டுமானம் ஒன்றை கண்டதாகவும், ஆதிச்சநல்லூர் தாழிக்காட்டில் புதைக்கப்பட்ட மனிதர்களின் வாழ்விடம் கொங்கராயக் குறிச்சியாக இருந்திருக்க வேண்டும்’ என்றும் தெரிவித்துள்ளார். இவ்வூரின் பழம்பெயர் முதுகோனூர் என்பதை அங்கு உள்ள வட்டெழுத்து கல்வெட் டுகள் வாயிலாக அறிய முடிகிறது. கொங்கராயகுறிச்சியில் இருந்த பூர்வ குடிகளே ஆதிச்சநல்லூர் தாழிக் காட்டில் புதையுண்டு உள்ளனர் என்பதை உணர்த்தும் விதமாக, கொங்க ராயக்குறிச்சி மக்களிடம் இன்று வரை வாய்மொழி கதைகள் வழக்கத்தில் உள் ளது. எனவே, ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் புதைக்கப்பட்ட முது மக்களின் வாழ்விடங்களை கண்டறிய வேண்டும் என்றால் கொங்கராயக் குறிச்சி கிராமத் தில் தொல்லியல்துறை அகழாய்வு மேற்கொள்ள வேண்டும், என்றார்.


No comments:

Post a Comment