ஒன்றிய அரசின் கியூட் தேர்வு குழப்பம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 17, 2022

ஒன்றிய அரசின் கியூட் தேர்வு குழப்பம்

போபால்,ஜூலை.17   நாடு முழுவ தும் உள்ள ஒன்றிய பல்கலைக்கழகங் களில் நடப்பு கல்வியாண்டு முதல், இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு  பொது நுழைவுத்தேர்வு நடத்தப் படும் என ஏற்கெனவே அறிவிக்கப் பட்டது. அதன்படி,, ஒன்றிய பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு (CUET UG 2022) தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி,  ஜூலை 15, ஜூலை 16, ஜூலை 19, ஜூலை 20,ஆகஸ்ட் 4, ஆகஸ்ட் 5, ஆகஸ்ட் 6,ஆகஸ்ட் 7, ஆகஸ்ட் 8 மற்றும் ஆகஸ்ட் 10 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்திருந்தது. இந்த தேர்வானது,  கணினி அடிப்படையில்  நடத்தப்படும் என்றும், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, குஜராத்தி, ஒடியா, பெங்காலி, அசாமி, பஞ்சாபி, ஆங் கிலம், ஹிந்தி மற்றும் உருது உள் ளிட்ட 13 மொழிகளில் இத்தேர்வு நடைபெறும் என அறிவித்துள்ள துடன், தேர்வானது   இந்தியா முழு வதும் 554 நகரங்களிலும், இந்தியா விற்கு வெளியே 13 நகரங்களில் நடத்தப்படும் என அறிவிக்கப் பட்டது.

அதன்படி, இந்த தேர்வில்  பங் கேற்க நாடு முழுவதும் இருந்து  14.9 லட்சம் மாணவர்கள் விண்ணப் பித்து இருந்தனர். இதற்காக, இந் தியா மற்றும் வெளிநாடுகள் உட்பட மொத்தம் 510 நகரங்களில் தேர்வு மய்யங்கள் அமைக்கப்பட்டு இருந் தன. தேர்வில் பங்கேற்கும் 98 சதவீதம் பேருக்கு அவர்கள் விரும்பி கேட்ட தேர்வு மய்யங்களே ஒதுக்கப்படும் என்று தேசிய தேர்வு முகமை   அறிவித்து இருந்தது. ஆனால், நேற்று தேர்வு நடத்தப்பட இருந்த நிலை யில், பல மாணவர்களுக்கு தேர்வு மய்யங்கள் மாற்றப்பட்ட விவரம் கடைசி நேரத்தில்தான் தெரிவிக்கப் பட்டது.

இதனால், மாணவர்கள் அந்த இடத்துக்கு சென்று சேர்வதில் தாமதம் ஏற்பட்டதால் தேர்வை தவற விட்டனர். இது பெரும் சர்ச்சையாகி இருக்கிறது. இது தொடர்பாக தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் விளக்கம் அளித் துள்ளனர். தேர்வு மையங்கள் மாற் றத்தால் தேர்வை தவற விட்டர் களுக்கு ஆகஸ்ட்டில் நடக்கும் 2ம் கட்ட தேர்வின் போது வாய்ப்பு அளிக்கப்படும்,’ என தெரிவித் துள்ளனர்.


No comments:

Post a Comment