காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாதுபற்றி விசாரணையெனில் வெளிநடப்பே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 20, 2022

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாதுபற்றி விசாரணையெனில் வெளிநடப்பே!

அமைச்சர் துரைமுருகன்

புதுடில்லி, ஜூலை 20 "காவரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதித்தால், அக்கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்வோம்" என்று தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று (19.7.2022) டில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: 

"மேகதாது அணை விவகாரம் தொடர் பான வழக்கு நாளை வரவிருக்கிறது. அது தொடர்பாக வழக்குரைஞர்களுடன் பேசுவதற்காக நான் வந்துள்ளேன். எங் களுடைய வாதத்தில் நியாயம் இருக்கிறது. நிச்சயமாக உச்சநீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க் கின்றோம்.

வரும் 22.7.2022 அன்று நடை பெறவுள்ள காவரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் விவாதப் பொருளாக வைக்கப்பட்டிருந்தாலும், கூடுமான வரையில் கண்டிப்பாக எதிர்ப்போம். மேகதாது குறித்து விவாதிக்கக்கூடாது என்று சொல்வோம்.

இதுகுறித்து ஒன்றிய அமைச்சர் கஜேந் திர சிங் செகாவத்தை சந்தித்து வலியுறுத்த இருக்கிறேன். அதையும் மீறி விவாதித்தால், நாங்கள் வெளிநடப்பு செய்வோம்" என்று அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment