அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கிட ஆயத்தம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 22, 2022

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கிட ஆயத்தம்

சென்னை, ஜூலை 22  அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் வகையில் பட்டியலை கவனமுடன் இறுதிசெய்து அனுப்ப கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இணை இயக்குநர் வெ.ஜெயக் குமார் (தொழிற்கல்வி), அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்:

தமிழ்நாடு அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி நடப்பாண்டில் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்குவதற்கான உத்தேச தேவைபட்டியலை பிற்படுத்தப்பட்டோர் நலத் துறைக்கு கேட்டுக் கொண்டுள்ளது.

அதன் அடிப்படையில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்குநரிடம் எமிஸ் தளம் மூலம் கடந்த ஜூலை 11ஆம் தேதி நிலவரப்படி உத்தேசப் பட்டியல் பெறப்பட்டது. அதில் பிளஸ் 1 வகுப்பில் 4 லட்சத்து 23,300 மாணவர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் மிதிவண்டி பெற தகுதியான மாணவர்களின் விவரங்களை சரிபார்த்து ஆணை யரகத்துக்கு மின்னஞ்சல் மூலம் உறுதிசெய்ய வேண்டும். இதில் வேறுபாடு இருப்பின், அதுசார்ந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலக பணியாளர்கள் பொறுப்பேற்க நேரிடும். எனவே,கூடுதல் கவனத்துடன் செயல்படவேண்டும்.

இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment