ஆசிரியர் அறிக்கை அருமை! அருமை!! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 10, 2022

ஆசிரியர் அறிக்கை அருமை! அருமை!!

'தி.மு.க. என்ற எஃகு கோட் டையை பாஜக அசைக்க முடியாது' என்ற தலைப்பில் ஆசிரியர் அவர்கள் விடுத்த அறிக்கை, திராவிட இயக் கங்கள் விழிப்போடு இருக்கவேண் டும் என்ற எச்சரிக்கை மணியாகும்.

பாஜக ஆட்சி வந்தது முதல் எதிர்க்கட்சிகளை அழித்துஒழிக்கும் பணியில் அடாவடியோடு செயல் பட்டு வருகிறது. எந்த வித கொள்கை, கோட்பாடும் இல்லாமல் மத உணர்வை வைத்து அராஜகத்தில் பாஜக மிதக்கிறது. 

அரசியலில் எதிரி என்று இருந் தால் தான் அது அரசியல். எதிரியை அழிக்க எண்ணி செயல்படுவது மக் களாட்சியின் மாண்பை கெடுப்ப தாகும். 

வட மாநிலங்களில் எதிர்க்கட்சி களை ஆட்சி செய்ய விடாமல் கவிழ்த்து குறுக்கு வழியில் ஆட்சி யமைத்து, ஏதோ மக்கள் ஆதரவு போல பாஜக காட்டிக் கொள்கிறது. இது தந்திரமல்ல பித்தலாட்ட வேலை. 

பதவியைக் காட்டி, பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கும் பணியில் தான் பாஜக நாட்டிற்கே முன்னுதாரணமாக இருக்கிறது. நாற்பது ஆண்டுகள் பாஜக தான் என்று ஆணவத்தோடு அறிவிக் கிறார்கள். இத்தனை ஆண்டுகள் என்று பாஜகவுக்கு பட்டயம் எழுதித் தரவில்லை இந்திய குடிமக்கள். தேர்தல், வாக்குரிமை என்று இருக் கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 

பாஜக வளரவேண்டும் என்றால் எதிர்க்கட்சிகளை அழிக்க வேண்டும் என்பதற்காக அடாவடி அரசியல் செய்கிறது. 

 பகுத்தறிவு, மொழி உணர்வால் எழுச்சி, வளர்ச்சி, ஆட்சி என பெருமை மிகுந்த தமிழ்நாட்டில் பாஜகவின் செயல் ஒருபோதும் எடுபடாது. 

பித்தலாட்ட அரசியல் செய்யும் பாஜக, தமிழ்நாட்டில் நாங்களும் இருக்கிறோம் என சொல்ல முடி யாமல், திராவிடத்தை அழிப்போம் என்கிறார்கள். இப்படி நஞ்சை விதைத்த பாஜக இப்போது 

அ.தி.மு.க. வில் குழப்பத்தை உரு வாக்கி, பிளவை ஏற்படுத்தி, தான் உள்ளே நுழையலாம் என வஞ்சகத்தோடு செயல்படுகிறது. பாஜக வின் வலையில் அ. தி. மு. க விழாமல், பெரியார் கொள்கைதான் என்றும்  தி.மு.க. அ.தி.மு.க.தான் மாறி மாறி ஆட் சிக்கு வரும் என்றும் அ.தி.மு.க. கொள்கை, அதற்கு மாறாக செயல் பட மாட்டோம் என்று  சொன்ன 

எம்.ஜி.ஆர். அவர்களின் வழித் தோன்றல்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். 

போட்டியாக நினைத்து இதுவரை அரசியல் நாகரீகத்தை கடைப்பிடிக் கிறது தமிழ்நாடு. இப்படி ஒற்றுமை யாக உள்ள தமிழ் மண்ணில் பாஜக காலூன்றுவதற்காக அ. தி. மு. கவை  பயன்படுத்துகிறது. அதற்கு இடம் தராமல் இது பெரியார் பக்குவப் படுத்தியமண் என்பதை, விரோதி - துரோகியான பாஜக வுக்கு , அ.தி.மு.க உணர்த்த வேண்டும். அ.தி.மு.க தனித்தன்மையோடு திமுக வுக்கு மட்டுமே போட்டியாக இருக்கவேண் டும். ஒருபோதும் பாஜகவுக்கு இடம் தரகூடாது. பதவிக்காக கொள்கையை இழக்காமல் தமிழ் மண்ணின் பெருமை காக்க வேண்டும். 

தமிழ்நாட்டில் பாஜகவுக்கு எதி ராக களத்தில் தாய்க் கழகம் திராவிடர் கழகம் என்றும் முதலில் நிற்கும். இரட்டை குழல் துப்பாக்கிகளாக 

தி.க, தி.மு.க. என்றும் உறுதித் தன்மை யோடு பாஜக வை எதிர்க்கும். 

காலத்தின் தன்மை அறிந்து ஆசி ரியர் அவர்கள் விடுத்த அறிக்கை 

அ.தி.மு.க.வினர் உணர்ந்து செயல் படவேண்டும். அண்ணாவின் ஆட்காட்டி விரல் தத்துவம் 'நீ பிறரை குற்றம் சொன்னால் உன்னையே குறிக்கும்' என்பதாகும். இது பாஜக வுக்கே பொருந்தும் என்று 

அ.தி.மு.க. உணர்த்துவது அவசியம்.

பகையாளி யார்? பங்காளியார்? அதிமுக உணரட்டும் - ஆசிரியர் அறிக்கை அருமை! அருமை!!  

மு. சு. அன்புமணி

மதிச்சியம், மதுரை

No comments:

Post a Comment