கள்ளக்குறிச்சி விவகாரம் : வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டால் தனியார் பள்ளிகள்மீது கடும் நடவடிக்கை : பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 18, 2022

கள்ளக்குறிச்சி விவகாரம் : வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டால் தனியார் பள்ளிகள்மீது கடும் நடவடிக்கை : பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை

சென்னை, ஜூலை.18 தனியார் பள் ளிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

  இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் சிலர் கூறும்போது, ‘‘உள்ளூர் விடுமுறை விடும் அதிகாரம் மாவட்ட ஆட்சியர், முதன்மை கல்வி அதிகாரி ஆகியோருக்கு மட்டுமே உள்ளது.

பேரிடர் காலங்கள், ஊர் திரு விழாக்கள் போன்றவற்றை முன்னிட்டு இந்த உள்ளூர் விடுமுறை விடப்படுவது வழக்கம். ஆனால், தனியார் பள்ளிகள் சங்கங்களின் அறிவிப்பால் தாங் களாகவே பள்ளிகளுக்கு விடுமுறை விட்டுக்கொள்வது சட்ட விதிகளை மீறும் செயலாகும். அவ்வாறு தனியார் பள்ளிகள் இன்று மூடப்பட்டால் சம் பந்தப்பட்ட முதன்மை கல்வி அலுவ லர்கள் சட்ட விதிமுறைப்படி நடவ டிக்கை எடுப்பார்கள்’’என்று தெரிவித்தனர்.

No comments:

Post a Comment