சென்னை, ஜூலை 21- மூளைச்சாவு அடைந்த மாணவர் ஒருவர் உடல் உறுப்பு கொடை அளித்து சென்னையில் 5 பேருக்கு புது வாழ்வு கொடுத்துள்ளார்.
சென்னை, மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் ராஜா, 19 வயது கல்லூரி மாணவரான இவர் கடந்த 4ஆம் தேதி வண்ட லூர் அருகே விபத்து ஒன்றில் படுகாயம் அடைந் தார். இந்த நிலையில் அவரது குடும்பத்தினர் அவரை மேல் சிகிச்சைக்காக குரோம்பேட்டை ரேலா மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். மருத்துவமனையில் நரம்பியல் நிபுணர்கள் சிறப்பான மருத்துவ சிகிச்சை அளித்தும் கார்த்திக் ராஜா உயிரை காப்பாற்ற முடியவில்லை.அவரது மூளை செயலிழந்து விட்ட நிலையில், அவரது மற்ற முக்கிய உறுப்புகள் நன்றாக வேலை செய்தன. அதனைத் தொடர்ந்து மருத்துவமனை யின் மருத்துவ நிபுணர்கள் அவரது நிலை குறித்து பெற்றோரிடம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் பல ருக்கு புதிய வாழ்வு கிடைக்கும் என்பதை மனதில் கொண்டு குடும்பத்தினர் அவரது உடல் உறுப்புகளை கொடையளிக்க முன் வந்தனர். மூளைச்சாவு அடைந்த கார்த்திக் ராஜா உடல் உறுப்புகளை எடுக்க ரேலா மருத்துவமனை தமிழ்நாடு அரசு அதிகாரிகளிடம் அனுமதி கோரியது, உடனடியாக அதை மேற்கொள்ள சட்டப்பூர்வ அங்கீகாரத்தை அரசு வழங்கியது. இது குறித்து கார்த்திக் ராஜாவின் சகோதரி ராஜா ஜோதி கூறுகையில், "இதைத்தான் எனது சகோ தரரும் விரும்பியிருப்பார் என்று எனக்குத் தெரியும். எனது சகோதரர் பல்வேறு உதவிகளை மற்றவர்க ளுக்கு செய்வதில் மிகுந்த ஆர்வம் உடையவர். எனது சகோதரர் இன்று உயிருடன் இல்லை, ஆனால் அவர் 5 வெவ்வேறு உடல்களில் 5 குடும்பங்களுடன் வாழ்கி றார் என்பது உண்மை. என் சகோதரனின் உறுப்புகள் இந்த 5 உயிர்களைக் காப்பாற்றியதில் நான் பெருமைப் படுகிறேன்" என்றார்.
No comments:
Post a Comment