யூகலிப்டஸ் மரங்களை நடக்கூடாது: தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 27, 2022

யூகலிப்டஸ் மரங்களை நடக்கூடாது: தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஜூலை 26  இனி வரும் காலங்களில் யூகலிப்டஸ் மரங்களை நடக்கூடாது என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தமிழ்நாடு வனப்பகுதிகளை ஆக்கிரமித்துள்ள வெளிநாட்டு மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் என்.சதீஷ்குமார் மற்றும் டி.பரத சக்கரவத்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு வனப்பகுதிகளில் உள்ள அந்நிய மரங்களை அகற்றுவது தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் சார்பில் அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டது.

அதில் 10 ஆண்டுக்குள் தமிழ்நாடு வனப்பகுதிகளில் உள்ள அனைத்து வெளிநாட்டு மரங்களும் அகற்றப்படும் எனவும், இதற்காக  மாவட்ட அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மரங்களை அகற்றும் பணிக்கான நிதியை ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகவர் மற்றும் கிராமப்புற வளர்ச்சி மற்றும் விவசாயத்துக்கான தேசிய வங்கி எனப்படும் நபார்டு வங்கி ஆகியோரிடம் பெற உள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை ஆய்வு செய்த  நீதிபதிகள், வனங்களை காப்பது தொடர்பாக அறிக்கைகளை மட்டுமே தாக்கல் செய்யும் தமிழ்நாடு அரசு ஆக்கப்பூர்வமாக செயல்படவில்லை. இதற்காக 10 ஆண்டுகள் காத்திருக்க முடியாது. வெளிநாட்டு மரங்களை அகற்றும் பணியை தனியாரிடம் ஒப்படைத்தால் பணிகளை விரைந்து முடிக்க முடியும். வெளிநாட்டு மரங்களை அகற்ற கொள்கை முடிவெடுத்துள்ள தமிழ்நாடு அரசே, யூகலிப்டஸ் மரங்களை ஏன் நடுகிறது. இனி வரும் காலங்களில் யூகலிப்டஸ் மரங்களை அரசு நடக்கூடாது என  தமிழ்நாடு  அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 16ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.


No comments:

Post a Comment