''ஆக்கப்பூர்வமாக எதையும் செய்ய முடியாது பி.ஜே.பி.யால்!'' காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 10, 2022

''ஆக்கப்பூர்வமாக எதையும் செய்ய முடியாது பி.ஜே.பி.யால்!'' காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

சென்னை, ஜூலை 10 பா.ஜ.க.வினர் வாய் சொல் வீரர்கள்.அவர்களால் எதையும் ஆக்கபூர்வமாக செய்ய முடியாது. எதிர்மறை விமர்சனங்களை மட்டுமே செய்வார்கள் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியிருக்கிறார்.

காலியாக உள்ள ஊரக உள்ளாட்சிகளின் பதவிகளுக்கு தமிழ்நாடு முழுவதும் நேற்று (9.7.2022) இடைத் தேர்தல் நடைபெற்றது. இதில் கீரப்பாளையம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடியில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் 

கே.எஸ்.அழகிரி வாக்களித்தார். பின்னர் செய்தியாளர் களிடம் அவர் கூறியது:

தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் பலத்தைப் பார்த்து அஞ்சி, பாஜக, ஆர்எஸ்எஸ் மற்றும் பிற்போக்கு சக்திகள், எங்களுக்கு எதிராக செயல்பட்டு எங்களை பலவீனப்படுத்தலாம் என்று நினைக்கிறார்கள். தமிழ்நாட்டில் சிறந்த ஆட்சி நடைபெறுகிறது. அதற்கு நாங்கள் துணையாக இருக்கிறோம். ஓராண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறார்கள்.

பாஜகவினர் வாய் சொல் வீரர்கள். அவர்களால் எதை யும் ஆக்கபூர்வமாக செய்ய முடியாது. எதிர்மறை விமர் சனங்களை மட்டுமே செய்வார்கள்.மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி 7 ஆண்டுகள் ஆகின் றன. அது என்ன ஆனது? செயல்படுகிற அரசை செயல் படவிடாமல் செய்வதும், செயல்படாத அரசை தூக்கிப் பிடிப்பதும்தான் பாஜகவின் கொள்கையாக இருக்கிறது.

‘வந்தே மாதரம்' ரயில் திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு ஒரு ரயில்கூட இல்லை. இதற்காக அண்ணாமலை போராட வேண்டும். இதற்கான தன்னுடைய நடைப்பயணத்தை கோபாலபுரத்தில் இருந்து தொடங்கி, டில்லிக்குச் சென்று மோடி வீட்டின் முன்பாக போராட வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment