‘விடுதலை'பற்றி புரட்சிக்கவிஞர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 26, 2022

‘விடுதலை'பற்றி புரட்சிக்கவிஞர்

‘‘முக்கியமாகத் தமிழ்ப் பெருமக்களுக்கு நான் சில வேண்டுகோள்விட ஆசைப்படுகிறேன். முதலாவதாக, பெரியார் கொள்கை ஒன்றுதான் நாட்டிற்கு ஏற்றது. உண்மையாக மக்களின் நன்மைக்குப் பாடுபடுவது, காரணம் இக்கட்சி தேர்தல் கட்சியல்ல, ஓட்டுக் கேட்கும் கட்சியல்ல. எனவே ஆங்காங்கு கழகம் இல்லாத ஊர்களில் கழகம் அமைக்கவேண்டும். எல்லாத் தமிழர்களும், தமிழர்களுக்குப் பிறந்த தமிழர்களும் தி.க.வில் உறுப்பினராக வேண்டும்.

இரண்டாவதாக ‘விடுதலை' பத்திரிகையை ஒவ்வொருவரும் அவசியம் வாங்கிப் படிக்க வேண்டும். மற்றப் பார்ப்பன ஏடுகளை மறந்து கூட எவரும் வாங்கக்கூடாது. அவை நமக்கு துரோகம் இழைப்பவையாகும். தமிழர்களுக்காக, தமிழர்களின் கல்வி உத்தியோக நியமனத்துக்காகப் பாடுபடும் ஏடு ‘விடுதலை' ஒன்றுதான். எனவே விடுதலையை அனைவரும் ஆதரிக்க வேண்டும்.

மூன்றாவதாக ‘குடியரசு', ‘விடுதலை' மற்றும் பகுத்தறிவு வெளியீடுகளான பார்ப்பனப் பித்தலாட்டங்களை விளக்கும் நூல்களும் மற்றும் பல நூல்களும் மலிவு விலையில் விற்கப்படுகின்றன. அதனை வாங்கி யாவரும் படிப்பதோடு மற்றவர்களையும் படிக்கச் செய்ய வேண்டும்.

- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

(10.5.1958இலால்குடியில் நடைபெற்ற 

வட்ட ஜாதி ஒழிப்பு மாநாட்டில் ஆற்றிய உரையிலிருந்து)

('விடுதலை', 18.5.1958,

தோழர்களே! புரட்சிக்கவிஞர்மீது ‘விடுதலை’ ஏற்படுத்திய தாக்கத்தைப் பார்த்தீர்களா?

‘‘பார்ப்பனர் அல்லாதாரே ‘விடுதலை’யைப் படியுங்கள்.

பார்ப்பன ஏடுகளை வாங்காதீர்கள்!'' என்கிறார் புரட்சிக்கவிஞர்.

தோழர்களே!

தமிழர் இல்லமெல்லாம் செல்லுங்கள் - ‘விடுதலை’யால் ஏற்பட்ட, ஏற்படுகின்ற நல்விளைவினை எடுத்துக் கூறுங்கள்!

‘விடுதலை’ இல்லை என்றால் கெடுதலையே!

பரவட்டும்

கிடைக்கட்டும் புதிய விடுதலை!


No comments:

Post a Comment