திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய கல்லூரிகள் தொடக்கம் கிராமப்புற மாணவ - மாணவிகள் உயர்கல்வி பெற வாய்ப்பு: அமைச்சர் இ.பெரியசாமி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 3, 2022

திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய கல்லூரிகள் தொடக்கம் கிராமப்புற மாணவ - மாணவிகள் உயர்கல்வி பெற வாய்ப்பு: அமைச்சர் இ.பெரியசாமி

திண்டுக்கல், ஜூலை   3 திண்டுக்கல் மாவட் டம், செம்பட்டி அருகே கூட்டுறவுத்துறை சார்பில் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது.  

மாணவர் சேர்க்கையை தொடங்க விண்ணப்பங்கள் வழங்கும் நிகழ்ச்சி திண்டுக்கல் ஆட்சியர் ச.விசாகன் தலை மையில்  கல்லூரி வளாகத்தில் நடை பெற்றது.  இதில் அமைச்சர் இ.பெரியசாமி கலந்துகொண்டு, மாணவர் சேர்க்கைக்கான விண்ணப் பங்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அமைச் சர் இ.பெரியசாமி கூறியதாவது: '

'திண்டுக்கல் மாவட்டத்தில் கல்வி மேம்பாட்டுக்காக புதிய கல்லூரிகள் தொடங்க தமிழ்நாடு முதலமைச்சர் அனுமதி அளித்துள்ளார்.  இதை யடுத்து நான்கு கல்லூரிகள், பழநியில் ஒரு சித்தா கல்லூரி, கொடைக்கானலில் ஒரு கூட்டுறவு பயிற்சி மய்யம் என 6 கல்வி நிறுவனங்கள் தொடங்க அனுமதி பெறப்பட்டு, கல்லூரிகள் தொடங்கப்பட்டு வருகின்றன. கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடப்பு கல்வி யாண்டு முதல் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட் டுள்ளது, கல்லூரியில் முதலாம் ஆண்டில் பி.ஏ.(கூட்டுறவு, வரலாறு, பொருளியல். வணிகவியல்). பி.காம்., பி.பி.ஏ., ஆகிய பாடப்பிரிவுகள் தொடங்க அனுமதி அளிக் கப்பட்டுள்ளது.  இக்கல்லூரியில் ஆண்டுக்கு ரூ.1,465 கட்டணத்தில் உயர் கல்வி வழங்கப்படுகிறது, என நிர்ண யிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆத்தூர் பகுதியை சுற்றியுள்ள 600-க்கும் மேற்பட்ட கிராமப் புறங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் உயர்கல்வி பெறும் வாய்ப்பு ஏற்படுத்தப் பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நத்தம் பகுதியில் புதிய கல்லூரி கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டக் கல் லூரி கொண்டுவர தமிழ்நாடு முதல மைச் சரிடம் தெரிவித்து, நடவடிக்கை எடுக்கப் படும். கூட்டுறவுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் வெளிப் படைத் தன்மையுடன் நிரப்பப் படும். கூட் டுறவுத் துறையில் கடந்த 10 ஆண்டுகளில் தோராயமாக ரூ.780 கோடி மதிப்பிலான முறை கேடுகள் நடை பெற்றுள்ளன.  இது தொடர்பாக விசாரணை நடத்த சட்டக் குழு அமைக்கப் பட்டுள்ளது'' என்றார்.

No comments:

Post a Comment