கடவுள் சக்தியை பாரீர் கோயில் கோபுர கலசம் திருட்டு காவல்துறை விசாரணை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 18, 2022

கடவுள் சக்தியை பாரீர் கோயில் கோபுர கலசம் திருட்டு காவல்துறை விசாரணை

புழல் ஜூலை 18 சோழவரம் அருகே கோயிலில் கோபுர கலசத்தை திருடிச் சென்றவர்களை காவல்துறையினர் வலை வீசி தேடிவருகின்றனர். சோழவரம் அடுத்த சோத்துபெரும்பேடு கிராமத்தில் மிகவும் பழமையான சிறீலட்சுமி நாராயணன் பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சனிக்கிழமை மற்றும் முக்கிய நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இந்நிலையில், நேற்று (17.7.2022) காலை வழக்கம்போல் பக்தர்கள் கோயிலுக்கு வந்தனர். அப்போது, சில பக்தர்கள் கோபுர தரிசனம் செய்தபோது, கோபுரத்தில் ஒரு கலசம் காணாமல்போனதைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர்,  இதுபற்றி பக்தர்கள் கோயில் நிர்வாகத்திடம் தெரிவித்தனர். இதையடுத்து, அவர்கள்  சோழ வரம் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில், காவல் துறையினர் வழக் குப்பதிவு செய்து கோபுர கலசத்தை திருடி சென்றவர்களை தேடி வருகின்றனர். இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


No comments:

Post a Comment