ஒரே நாடு ஒரே மொழி என்போர் நாட்டின் எதிரிகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 31, 2022

ஒரே நாடு ஒரே மொழி என்போர் நாட்டின் எதிரிகள்

"மலையாள மனோரமா" இதழின் கருத்தரங்கில் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலியில் உரை

சென்னை, ஜூலை 31 கேரள மாநி­லம் - திருச்­சூ­ரில், “மலை­யாள மனோ­ரமா” நியூஸ் சார்­பில் “இந்­தியா 75” என்ற தலைப்­பில் காணொ­லிக் காட்சி வாயிலாக நடை­பெற்ற கருத்­த­ரங்­கில், தமி­ழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள், சென்னை முகாம் அலு­வ­ல­கத்­ தி­லி­ருந்து கலந்து கொண்டு ஆற்­றிய உரை­யில், ஆளு­நர்­கள் மூல­மாக மாநி­லங்­க­ளில் இரட்டை ஆட்சி நடத்­தப் பார்க்­கி­றது ஒன்றிய பா.ஜ.க. தலைமை!” எனக் கடு­மை­யா­கச் சாடி­னார்.

மேலும் முதலமைச்சர் அவர்­கள் தமது உரை­யில், “வலி­மை­யான மாநி­லங்­களே இந்­தி­யா­வின் பலம்!” என்று குறிப்­பிட்­டார்.          

முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின்  நேற்று (30.7.2022) முகாம் அலு­வ­ல­கத்திலிருந்து காணொ­லிக் காட்சி வாயி­லாக கேரள மாநி­லம், திருச்­சூ­ரில் மலை­யாள மனோ­ரமா நியூஸ் சார்­பில் நடை­பெற்ற ‘இந்­தியா - 75’ என்ற தலைப்­பி­லான கருத்­த­ரங்­கில்  கலந்­து­கொண்டு ஆற்­றிய உரை வரு­மாறு:-

பஹு­மா­னப்­பட்ட கேரள முக்­கிய மந்திரியும் - என்டெ ப்ரியப்­பட்ட சகா­வு­மான 

பின­ராயி விஜ­யன் அவர்­களே!

(கேரள மாநி­லத்­தின் முத­ல­மைச்­ச­ரும்  - எனது அன்­புக்­கும் மரி­யா­தைக்­கும் உரிய தோழ­ரு­மான மாண்­பு­மிகு பின­ராயி விஜ­யன் அவர்­களே!)

மலை­யாள மனோ­ர­ம­யுடே நியூஸ் எடிட்­டர் - ஜானி லூக்­கோஸ் அவர்­களே!

(மலை­யாள மனோ­ரமா இத­ழின் செய்தி ஆசி­ரி­யர் ஜானி லூகோஸ் அவர்­களே!)

“தி வீக்” மேக­சின் மாத்­யம ப்ரவர்த்­த­கர் - லட்­சுமி சுப்­பி­ர­ம­ணி­யம் அவர்­களே,

(தி வீக் செய்­தி­யா­ளர் லட்­சுமி சுப்­பிர மணி­யம் அவர்­களே!)

மலை­யாள மனோ­ர­மா­வில் பணி செய்­யுன்ன -மாத்­யம ப்ரவத்­த­கரே!

(மலை­யாள மனோ­ரமா இத­ழின் ஊட­க­வி­ய­லா­ளர்­களே!)

விவித விஷ­யங்­களெ குறிச்சு - சம்­சா­ரிக்­கான் எத்­திட்­டுள்­ள­வரே!

(இந்­தக் கருத்­த­ரங்­கில் பல்­வேறு தலைப்­பு­க­ளில் உரை­யாற்ற இருக்­கும் கருத்­தா­ளர்­களே!)

நிங்­கள் எல்­லா­வர்க்­கும் என்டே வணக்­கம்!

(அனை­வர்க்­கும் வணக்­கம்!)

மலை­யாள மனோ­ர­ம­யுடே “இந்­தியா 75” எந்ந, ஈ பரி­பா­டி­யில் பங்­கெ­டுத்து நிங்­களை எல்­லாம் காணான் கழிஞ்­ச­தில், எனிக்கு சந்­தோ­ஷ­முண்டு!

(மலை­யாள மனோ­ரமா இத­ழின் சார்­பில் நடை­பெ­றும் ‘இந்­தியா - 75 ஆண்­டு­கள்’ என்ற தலைப்­பி­லான கருத்­த­ரங்­கில் கலந்து கொண்டு உங்­களை எல்­லாம் காணொலி மூல­மா­கச் சந்­திப்­ப­தில் மகிழ்ச்சி அடை கிறேன்.)

எனிக்கு திருச்­சூ­ருக்கு நேரிட்டு வராம் ஆயி­ருன்னு!

(திருச்­சூ­ருக்கு நான் நேரில் வந்­தி­ருக்க வேண்­டும்.)

ரெண்டு ஆழ்ச்ச முன்பு, எனிக்கு கோவிட் வந்­ந­தி­னால், சில ஆரோக்ய புத்­தி­முட்­டுக்­கள் உண்டு.

(இரண்டு வாரங்­க­ளுக்கு முன் கரோனா தொற்­றால் நான்  பாதிக்­கப் பட்­ட­தால் உடல் சோர்வு உள்­ளது)

டாக்­டர்­மார் யாத்­ரா­னு­மதி நல்­காத தினால், எனிக்கு அவிடே வரான் கழிஞ்­ஞில்லா.

(வெளி­யூர்ப் பய­ணங்­களை ஓரிரு வாரங்­க­ளுக்­குத் தவிர்க்க மருத்­து­வர்­கள் சொல்­லிய கார­ணத்­தால் அங்கு நேரில் வர இய­ல­வில்லை.)

ஏப்­ரல் மாசத்­தில் சி.பி.அய்.எம் Conference-இல் பங்­கெ­டுக்­கான் ஞான் கண்ணூ ரில் வந்­நி­ருன்னு.

(கடந்த ஏப்­ரல் மாதம் கண்­ணூ­ரில் நடந்த மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யின் அகில இந்­திய மாநாட்­டில் கலந்து கொள்­வ­தற்­காக நான் வந்­தி­ருந்­தேன்.)

அந்நு, கேரள சர்க்­கா­ரும், ஜனங்­க­ளும் எனிக்கு தந்ந ஸ்வீக­ர­ணம் மறக்­கான் ஆவுன்­ன­தல்லா.

(அப்­போது எனக்கு கேரள மாநில அர­சும், மக்­க­ளும் அளித்த வர­வேற்பை நான் இன்­னும் மறக்க முடி­ய­வில்லை.)

ஞான் சம்­சா­ரிச்சி கழிஞ்­ஞப்­போள் முழங்­கிய, ‘ரெட் சல்­யூட்! ரெட் சல்­யூட்!’ எந்ந அபி­வாத்­தி­யங்­கள் இன்­னும் எனிக்கு கேள்க்­காம்.

(நான் பேசி முடித்­த­தும் - ‘ரெட் சல்­யூட் - ரெட் சல்­யூட்’ என்று சொல்லி எனக்கு அந்த மாநாடே வாழ்த்து தெரி­வித்த காட்சி நெஞ்­சில் நிழ­லாடி வரு­கி­றது.)

என்னெ, அவ­ரில் ஓரா­ளாயி கண்டு கொண்­டாணு மலை­யா­ளி­கள் ஸ்வீக­ரிச்­சது.

(என்­னை­யும் தங்­க­ளில் ஒரு­வ­ராக நினைத்து கேரள மாநில மக்­கள் வர­வேற்பு கொடுத்­தார்­கள்.)

என்டெ கூட செல்­பி­யும் எடுத்து.

(செல்பி எடுத்­துக் கொண்­டார்­கள்.)

ஈ நல்ல ஓர்­மை­க­ளோடு ஒப்­பம், திருச்­சூ­ருக்கு வர­ணும்னு ஆக்­ர­ஹம் உண்­டா­யி­ருந்நு.

பக்ஷே வரான் சாதிச்­சில்லா.

(அத்­த­கைய மகிழ்ச்­சி­யான நினைவு களு­டன் திருச்­சூ­ருக்கு வர நினைத்­தேன், வர முடி­ய­வில்லை.)

பல்­வேறு சோத­னை­களை சந்­தித்த செய்தி நிறு­வ­னம்!

மலை­யாள மனோ­ரமா இத­ழா­னது 1890-ஆம் ஆண்டு தொடங்­கப்­பட்­டது. இன்று இந்­தியா முழு­மைக்­கும் அதி­க­மான வாச­கர் களைக் கொண்ட இத­ழாக இருக்­கி­றது. மலை­யாள மனோ­ரமா செய்தி நிறு­வ­னம் மிகப்­பெ­ரிய நிறு­வ­ன­மாக வளர்ந்­துள்­ளது. வெறும் செய்தி நிறு­வ­ன­மாக மட்­டு­மல்லாமல் தனக்­கென ஒரு கொள்கை - கோட்­பாடு கொண்ட நிறு­வ­ன­மாக இருந்­த­தால் பல்­வேறு சோத­னை­க­ளைச் சந்­தித்த செய்தி நிறு­வ­னம் இது. அத்­த­கைய துணிச்­சல் தான் இந்­த­ள­வுக்கு இந்த நிறு­வ­னத்தை வளர்த்­துள்­ளது.

கேர­ளா­வைப் பொறுத்­த­வ­ரை­யில், மலை­யாள மனோ­ரமா என்­பது பெரும்பா லான­வர் குடும்­பத்­தில் ஓர் அங்­கம் என்று சொல்­லத்­தக்க நிலையை அடைந்­துள்ளது. அத்­த­கைய பெரு­மை­மிகு நிறு­வ­னத்­தின் சார்­பில் நடை­பெ­றும் கருத்­த­ரங்­கில் நான் கலந்து கொள்­வ­தில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்­தியா விடு­தலை பெற்று 75 ஆண்டு கள் ஆவ­தை­யொட்டி, India 75 - The state of affairs – Federalism, Freedom and Forward  - என்ற இந்­தக் கருத்­த­ரங்­கம் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

இந்தியாவின் வளர்ச்சிக்கு காரணம்

கூட்­டாட்­சிக் கருத்­தி­ய­லும் - விடு தலை­யால் பெற்ற உரி­மை­க­ளும் - அனைத்து வித­மான வளர்ச்­சிக்­கான முற்­போக்­குச் சிந்­த­னை­க­ளும் இணைந்­து­தான் இந்தி யாவை இந்­த­ள­வுக்கு வளர்த்­துள்­ளன.

இந்­தி­யா­வின் வேற்­று­மை­களை மதிக்­கக் கூடி­ய­வ­ராக 

இந்­தி­யா­வின் முதல் பிர­த­மர் ஜவ­கர்­லால் நேரு அவர்­கள் இருந்­தார்­கள். பல்­வேறு மொழி பேசும் மக்­கள் ஒற்­று­மை­யாக வாழ மொழி­வாரி மாகா­ணங்­களை உரு­வாக்­கிக் கொடுத்­தார் பிர­த­மர் நேரு. இந்தி பேசாத மக்­கள் விரும்­பும் வரை இந்தி அவர்­கள் மீது திணிக்­கப்­பட மாட்­டாது என்று உறுதி அளித்­தார் பிர­த­மர் நேரு.

மதச்­சார்­பற்ற மனி­தர் நேரு!

அய்ந்­தாண்­டுத் திட்­டங்­க­ளைக் கொண்டு வந்து அனைத்து மாநி லங்க ளுக்­கும் பல்­வேறு திட்­டங்­களை உரு­வாக்­கிக் கொடுத்­தார்.

வறுமை ஒழிப்­புத் திட்­டங்க ளைச் செயல்­ப­டுத்­தி­னார்.

அனைத்து மாநி­லங்­க­ளி­லும் பொதுத் துறை நிறு­வ­னங்­களை உரு­வாக்­கித் தந்­தார்.

மதச்­சார்­பற்ற மனி­த­ராக அவர் இருந்­தார்.

சகோ­த­ரத்­து­வத்தை வலி­யு­றுத்­தி­னார்.

நாடா­ளு­மன்ற ஜன­நா­ய­கத்­துக்கு முக்கி யத்­து­வம் கொடுத்­தார்.

அனைத்­துத் தரப்­பும் விவா­தம் செய்­யும் கள­மாக நாடா­ளு­மன்­றத்தை நடத்­திக் காட்­டி­னார்.

கூட்­டாட்சி நெறி­மு­றை­களை அவர் அடிக்­கடி பேசி­னார்.

இந்­தியா முழு­வ­தும் இருந்த பல்­வேறு மாநில முத­ல­மைச்­சர்­க­ளோடு அடிக்­கடி பேச்­சு­வார்த்தை நடத்­தி­னார். கடி­தங்­கள் எழு­தி­னார்.

முத­ல­மைச்­சர்­க­ளுக்கு அவர் எழு­திய கடி­தங்­களே பல்­வேறு தொகுப்­பு­க­ளாக வெளி­யாகி இருக்­கி­றது.

இத்­த­கைய கார­ணங்­க­ளால்­தான் இந்தி யாவா­னது 75 ஆண்­டு­கள் வலி­மை­யோடு நின்று கொண்டு இருக்­கி­றது.

இந்­தியா என்­பது ஒற்றை அரசு அல்ல!

இன்­னும் பல நூறு ஆண்­டு­க­ளுக்கு இந்­தியா வலி­மை­யாக இருக்க வேண்டு மானால் இதே கருத்­தி­யல்­களை மேலும் மேலும் வலி­மைப்­ப­டுத்த வேண்­டும்.

* Federalism (கூட்­டாட்சி) 

* State Autonomy (மாநி­லத் தன்­னாட்சி)

* Secularism (மதச்­சார்­பின்மை)

* Equality (சமத்­து­வம்)

* Fraternity (சகோ­த­ரத்­து­வம்)

* Socialism  (சம­தர்­மம்)

* Social Justice (சமூ­க­நீதி)

நம்­மள், ஈ மூல்­யங்­களெ பலப்­ப­டுத்தணும்!

(இவற்றை நாம் வலி­மைப்­ப­டுத்த வேண்­டும்.)

(இவை அனைத்­தை­யும் காப்­பாற்று வது­தான் இந்­தி­யா­வைக் காப்­பாற்­று­வது ஆகும்.)

75-ஆம் ஆண்டு சுதந்­திர தினத்­தைக் கொண்­டா­டு­வது என்­பது வெறும் கொண்­டாட்­ட­மாக இருக்­கக் கூடாது. இன்­னும் பல நூறு ஆண்­டு­க­ளுக்கு இந்­தியா வலி­மை­யோடு இருப்­ப­தற்­கான திட்­ட­மி­டு­த­ லாக நமது சிந்­த­னை­கள் அமைய வேண்­டும்.

இந்­தியா என்­னால், அதிர்த்­தி­கள் அல்லா!

(இந்­தியா என்­பதை வெறும்  நிலப் ப­ரப்­பின் எல்­லை­க­ளாக நாம் கரு­தக் கூடாது.)

இவி­டத்தே ஜனங்­க­ளாணு!

(இந்­தியா என்­பது இங்கு வாழும் மக்­கள்­தான்.)

India is not just a single government!

(இந்­தியா என்­பது ஒற்றை அரசு அல்ல!)

ஒரு­பாடு சம்ஸ்­தான சர்க்­கா­ரு­க­ளுடெ கூடிச்­சே­ர­லாணு இந்­தியா!

(பல்­வேறு மாநில அர­சு­க­ளின் ஒன்­றி­யம்­தான் இந்­திய அரசு.)

ஒன்­றி­யம் -  யூனி­யன் எந்­நது தெட்­டாய பிர­யோ­கம் அல்லா! 

(ஒன்­றி­யம் - யூனி­யன் என்­பது தவ­றான சொல் அல்ல)

Constitution-லும் ஈ வாக்கு உண்டு!

(அர­ச­மைப்­புச் சட்­டம் இந்­தி­யாவை வரை­ய­றுக்­கப் பயன்­ப­டுத்­தும் சொல் யூனி­யன்­தான்.)

இந்­தி­யா­வைக் காக்­கான், இந்­தி­யா­வில் உள்ள எல்லா 

சம்ஸ்­தா­னங்­க­ளை­யும் காக்­க­ணும்!

(இந்­தி­யா­வைக் காப்­பாற்ற வேண்­டு­மா­னால் இந்­திய 

ஒன்­றி­யத்­துக்­குள் உள்­ள­டங்­கி­யுள்ள அனைத்து மாநி­லங்­க­ளை­யும் காப்­பாற்ற வேண்­டும்.)

மாநிலங்களின் ஒன்றியம்

எல்லா சம்ஸ்­தா­னங்­க­ளை­யும் காத்­தால் மாத்­ரமே, 

இந்­தி­யாவை காக்­கான் கழியு.

(மாநி­லங்­கள் காப்­பாற்­றப்­பட்­டால்­தான் இந்­தியா காப்­பாற்­றப்­ப­டும்.)

‘Uniformity is different from Unity’, as stated by - the great icon of Tamil Nadu Perarignar Anna.

(தமிழ்­நாட்­டின் மாபெ­ரும் அடை­யா­ள­மான அறி­ஞர் அண்ணா கூறி­யது போல, ஒரே போல ஆக்­கு­வது என்­பது ஒற்­று­மை­யில் இருந்து வேறு­பட்­டது.)

You cannot achieve UNITY, by bringing UNIFORMITY!  

(ஒற்­றைத்­தன்­மை­யைத் திணிப்­ப­தன் மூலம் ஒற்­று­மை­யைக் கொண்­டு­வர முடி­யாது)

பிரி­யப்­பட்ட மலை­யா­ளி­களே!

மலை­யா­ளத்­தில் பிர­முக எழுத்­துக்­கா­ர­னாய - ‘சிஹா­புத்­தின் பொய்த்­தும்­க­டவு’ ‘Truecopy Think’ website-இல் எழு­திய ஒரு லேக­னத்­திண்டெ தமிழ் விவர்த்­த­னம் ஞான் வாயிச்சு.

(அன்­புக்­கு­ரிய மலை­யா­ளி­களே, பிர­பல மலை­யாள எழுத்­தா­ளர் சிஹா­புத்­தின் பொய்த்­தும்­க­டவு ‘Truecopy Think’ தளத்­தில் எழு­திய ஒரு கட்­டு­ரை­யின் தமிழ் மொழி­பெ­யர்ப்பை நான் அண்­மை­யில் வாசித்­தேன்.)

அது  திமுக முகப்­பத்­ர­மாய முர­சொ­லி­யில் பப்­ளிஷ் செய்­தி­ருந்நு. 

(அது தி.மு.க.வின் நாளே­டான முர­சொ­லி­யில் வெளி­யி­டப்­பட்­டி­ருந்­தது.)

“புதிய சாஸ்­திர கண்­டு­பி­டித்­தங்­க­ளுக்­குப் போலும், தன­தாய தமிழ் வாக்­கு­கள் உண்டு.

(புதிய அறி­வி­யல் கண்­டு­பி­டிப்­பு­க­ளுக்­குக் கூட தமி­ழில் இணை­யான சொற்­கள் உண்டு)

பக்ஷே, மலை­யா­ள­திண்டே பல நாட்­டு­மொ­ழி­க­ளி­லும் உள்ள, நல்ல வாக்­கு­கள் இப்­போள் கேள்க்­கான் இல்லா” என்னு அத்­தே­ஹம் வேத­னை­யோடு எழு­திட்­டுண்டு.

(ஆனால், மலை­யா­ளத்­தில் பல வட்­டார வழக்­கு­க­ளி­லும் உள்ள அழ­கிய சொற்­கள் அழிந்து வரு­கின்றன என வேத­னை­யோடு அவர் அக்­கட்­டு­ரை­யில் எழு­தி­ யி­ருந்­தார்.)

மலை­யா­ள­மும் தமி­ழும் தம்­மி­லுள்ள ஆழ­மே­றிய 

பந்­தத்தெ குறிச்­சும் அத்­தே­ஹம் பற­யுந்நு.

(மலை­யா­ளத்­துக்­கும் தமி­ழுக்­கும் இடை­யே­யான 

ஆழ­மான உற­வைக் குறித்­தும் அவர் குறிப்­பி­டு­கி­றார்.)

அதோ­டொப்­பம், அந்­நிய பாஷ வாக்­கு­க­ளுடெ ‘கடந்நு வர­வினே’ தமிழ்

எங்­ஙனே தடுத்து எந்­நும் அத்­தே­ஹம், ஆ லேக­னத்­தில் பற­யுந்நு.

(அதோடு, பிற­மொ­ழிச் சொற்­க­ளின் ஆக்­கி­ர­மிப்­பைத் தமிழ் எவ்­வாறு தடுத்து நிறுத்­தி­யது என்­றும் அவர் அக்­கட்­டு­ரை­யில் குறிப்­பி­டு­கி­றார்.)

மலை­யா­ளி­கள் எல்­லா­வ­ரும் ஆ லேக­னம் வாயிக்­க­ணும் என்­னாணு என்டே ஆக்­ர­ஹம்.

(மலை­யா­ளி­கள் எல்­லா­ரும் அக்­கட்­டு­ரை­யைப் படிக்க வேண்­டும் என நான் விரும்­பு­கி­றேன்.)

ஒற்றை மொழி தேசிய மொழி ஆக முடி­யாது!

இந்­தி­யா­வுக்கு One National Language சாத்­தி­ய­மல்லா!

(இந்­தி­யா­வில் ஒற்றை மொழி தேசிய மொழி ஆக 

முடி­யாது.)

கார­ணம், இந்­தி­யா­வில் ஒரு­பாடு பாஷை­கள் உண்டு! 

(ஏனென்­றால் இந்­தி­யா­வில் எத்­த­னையோ மொழி­கள் இருக்­கின்­றன.)

எல்­லா­வர்க்­கும் ஒரு மதம் எந்­நது அங்­கீ­க­ரிக்­கான் ஆவில்லா!

(இந்­தி­யா­வுக்கு ஒற்றை மதம், அனை­வர்க்­கு­மான மத­மாக இருக்க முடி­யாது.)

ஒரே மொழி மட்டும் இருக்க முடியாது

கார­ணம், இவிடே ஜனங்­கள் ஒரு­பாடு மதங்­கள் 

அனு­வர்த்­திக்­குன்னு.

(ஏனென்­றால், இந்­தி­யா­வில் பல்­வேறு மத வழி­பாட்டு முறை­கள் இருக்­கின்­றன.)

இந்­தி­யா­வில் ஒற்றை சம்ஸ்­கா­ரம் அல்ல உள்­ளது.

(இந்­தி­யா­வில் ஒற்­றைப் பண்­பாடு இல்லை.)

ஊனு, துணி தொடங்கி எல்­லாத்­தி­லும் வித்­தி­யா­சங்­கள் உண்டு.

(உணவு, உடை அனைத்­தி­லும் ஆயி­ரம் வேறு­பா­டு­கள்.)

எங்­கி­லும், நம்­மளெ சேர்த்து நிறுத்­துந்­நது ஸ்னேஹ­வும், சாஹோ­தர்­ய­வும் ஆணு.

(இவ்­வ­ளவு வேற்­று­மை­களை வைத்­துக் கொண்­டும் ஒன்­றாக வாழ - நமக்­குள் இருப்­பது அன்­பும் மனி­த­நே­ய­மும் மட்­டும்­தான்.)

ஏக மதம், ஏக பாஷா, ஏக சம்ஸ்­கா­ரம் என்­னிவ அடிச்சு ஏல்ப்­பிக்­குந்­ந­வர் நம்­முடே ஒரும தகர்க்­குந்நு.

(ஒற்றை மொழியை - ஒற்றை மதத்தை - ஒற்­றைப் பண்­பாட்­டைத் திணிக்க நினைப்­ப­வர்­கள் இந்­தி­யா­வின் ஒற்­று­மையை சிதைக்க நினைக்­கி­றார்­கள்.)

நம்­முடெ ஒரும தகர்க்­கான் நோக்­குந்­ந­வர் இந்­தி­யா­வுடெ சத்­ருக்­கள் ஆணு!

இந்­தி­யக்­கா­ருடெ சத்­ருக்­கள் ஆணு!

(இந்­திய ஒற்­று­மை­யைச் சிதைக்க நினைப்­ப­வர்­கள் இந்­தி­யா­வின் எதி­ரி­கள்.

இந்­திய மக்­க­ளின் எதி­ரி­கள்.)

இத்­த­ரம் துஷ்ட சக்­தி­க­ளுக்கு நம்­மள் இவிடே ஒரிக்­க­லும் இடம் கொடுக்­க­ருது!

(இந்­தத் தீய சக்­தி­க­ளுக்கு நாம் ஒரு­போ­தும் இட­ம­ளிக்­கக் கூடாது.)

உறப்­புள்ள சம்ஸ்­தா­னங்­க­ளாணு, Federalisa-த்திண்டெ அடித்­தரா!

(வலு­வான மாநி­லங்­கள்­தான் கூட்­டாட்­சி­யின் அடிப்­படை.)

வலி­மை­யான - அதி­கா­ரம் பொருந்­திய - தன்­னி­றைவு பெற்­ற­வை­யாக மாநி­லங்­கள் இருப்­பது இந்­தி­யா­வுக்கு வலி­மை­தானே தவிர, அது பல­வீ­ன­மல்ல!

வலி­மை­யான -  வச­தி­யான - தொழில் வளர்ச்சி அடைந்த மாநி­லங்­க­ளால் இந்­தி­யா­வுக்­குப் பயன்­தானே தவிர, குறைவு ஏற்­ப­டாது! இந்­தி­யா­வின் மொத்த உள்­நாட்டு 

உற்­பத்­தி­யில் தமிழ்­நாட்­டின் பங்கு 9.22 விழுக்­கா­டாக இருப்­ப­தால் 

தமிழ்­நாட்­டுக்கு மட்­டு­மல்ல, இந்­தியா முழு­மைக்­கும்­தானே நன்மை கிடைக்­கி­றது?

மாநி­லங்­கள் தன்­னாட்சி 

கொண்­ட­வை­க­ளாக இருக்க வேண்­டும்!

ஒன்­றிய அர­சின் மொத்த வரி வரு­வா­யில் தமிழ்­நாட்­டின் பங்கு 6 விழுக்­காடு.

தமிழ்­நாட்­டின் பங்கு என்­பது இந்­தி­யா­வுக்­குத்­தானே நன்மை?

மாநில அர­சு­கள் மிகச்­சி­றப்­பாக மாநி­லங்­களை வழி­ந­டத்­து­வ­தால் ஒன்­றிய அரசு பலம் அடை­யுமே தவிர, பல­வீ­னம் அடை­யாது! இன்­னும் சொன்­னால், மக்­க­ளோடு நேர­டி­யாக தொடர்­பில் இருப்­பவை மாநில அர­சு­கள்­தான்! மக்­க­ளின் அனைத்து அன்­றா­டத் தேவை­க­ளை­யும் பார்த்­துப் பார்த்து நிறை­வேற்ற வேண்­டிய கடமை மாநில அர­சுக்­குத்­தான் இருக்­கி­றது. எனவே, மாநில அர­சு­க­ளைத் தன்­னி­றைவு பெற்ற அர­சு­க­ளாக வைத்­தி­ருந்­தால்­தான் இந்­தியா மகிழ்ச்­சி­யாக இருக்­கும். அதற்கு மாநி­லங்­கள் தன்­னாட்சி உரிமை கொண்­ட­வை­யாக இருக்க வேண்­டும்.

நாடா­ளு­மன்­றத்­தில் பேசக் கூட உரிமை இல்லை!

இந்­திய அர­சா­னது கூட்­டாட்­சிக் கோட்­பாட்டை மதித்­துச் செயல்­பட வேண்­டும். ஆனால், அதற்கு மாறாக பல நிகழ்ச்­சி­கள் நடக்­கின்­றன.

இந்­தி­யாவை ‘ஏக­ஷிலா சம்ஸ்­கா­ர­மாயி’ மாற்­றுந்­நது நமக்கு ஒரிக்­க­லும் அங்­கீ­க­ரிக்­கான் ஆவில்லா!

(ஒற்­றைத் தன்மை கொண்­ட­தாக இந்­தி­யாவை மாற்­றும் முயற்­சியை நாம் ஏற்க முடி­யாது.)

இதினே, நம்­மள் ஒரு­மிச்சி, சக்­த­மாயி எதிர்க்­க­ணும்!

(அதனை வலி­மை­யாக, உறு­தி­யாக, ஒன்­றி­ணைந்து எதிர்க்க வேண்­டும்.)

பல்­வேறு சிந்­த­னை­கள் மோதும் கள­மாக இருக்க வேண்­டிய நாடா­ளு­மன்­றங்­க­ளில்- பேசு­வ­தற்­கான உரிமை நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கே மறுக்­கப்­ப­டு­கி­றது. திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் உறுப்­பி­னர்­கள் உள்­பட 27 பேர் இடைநீக்கம் செய்­யப்­பட்­டுள்­ளார்­கள். கருத்­தைச் சொல்­வ­தற்­கான கள­மான நாடா­ளு­மன்­றத்­தில்­கூட பேச உரிமை இல்லை.

இது­தான் இந்­திய மக்­க­ளாட்­சி­யின் இன்­றைய நிலை!

GST has robbed states, of their fiscal autonomy. GST compensation amount is not released on time. And not fully also.

(சரக்கு மற்­றும் சேவை வரி மூல­மாக மாநி­லங்­க­ளின் நிதி உரிமை பறிக்­கப்­பட்டு விட்­டது. இழப்­பீ­டாக தரப்­ப­டும் நிதி உரிய நேரத்­தில் தரப்­ப­டு­வது இல்லை. முழு­மை­யா­க­வும் தரு­வது இல்லை.)

Entrance Exams like NEET deny education to the oppressed.

(நீட் போன்ற நுழை­வுத் தேர்­வு­க­ளால் எளி­யோ­ருக்­குக் கல்வி உரிமை மறுக்­கப்­ப­டு­கி­றது.) National Education Policy 2020 is a barrier to education.

(புதிய கல்­விக் கொள்கை என்­பது கல்­வி­யைப் பல்­வேறு படி­நி­லை­க­ளில் தடுப்பு போட்டு மறிக்­கும் கொள்­கை­யாக உள்­ளது.)

The policies of Union Govt are Anti-people. (ஒன்­றிய அர­சின் பல்­வேறு சட்­டங்­கள், மக்­கள் விரோ­தச் சட்­டங்­க­ளாக இருக்­கின்­றன.)

BJP attempts to run parallel governments, through its Governors.

(ஆளு­நர்­க­ளின் மூல­மாக இரட்டை ஆட்சி நடத்­தப் பார்க்­கி­றது பாஜக தலைமை.)

We have to govern our states, even as we face, all these hurdles.

(இவை அனைத்­துக்­கும் இடை­யில்­தான் மாநி­லங்­க­ளில் ஆட்சி நடத்­தி­யாக வேண்­டும்.

அர­சி­யல் நடத்­தி­யாக வேண்­டும்.)

And we have to fulfill the needs and expectations of people as well.

(மக்­கள் தேவை­களை, எதிர்­பார்ப்­பு­களை நிறைவு செய்­தாக வேண்­டும்.)

But I am still hopeful!

(அதற்­காக நான் நம்­பிக்கை இழக்­க­வில்லை.)

கல்வி உரிமை மறுக்­கப்­ப­டு­கி­றது!

இந்­தி­யா­வின் மிக நீண்ட வர­லா­றும் -  இந்­திய மக்­க­ளின் சகோ­தர உணர்­வும் - இந்­தி­யாவை நிச்­ச­யம் காக்­கும் என்று நான் நம்­பு­கி­றேன்.

மலை­யாள மனோ­ரமா போலுள்ள மாத்­ய­மங்­கள், தங்­க­ளுடே மற்ற கட­மை­க­ளோடு ஒப்­பம், இந்­தி­யாவை சம்­ர­க்ஷிக்­கான் வேண்­டி­யும் ப்ரவர்த்­திக்­க­ணும்! அது நிங்­கள் மறக்­கான் பாடில்லா!

(மலை­யாள மனோ­ரமா போன்ற இதழ்­க­ளுக்கு - தங்­க­ளது ஊட­கப் பணி­யைத் தாண்டி இந்­தி­யா­வைக் காக்­கும் பணி இருக்­கி­றது என்­பதை மறந்­து­வி­டா­தீர்­கள்.)ள

ஈ 75 கொல்­லங்­க­ளாயி இந்­தி­யாவை நயிக்­குன்ன மூல்­யங்­களை காக்­கான், ஜனா­தி­பத்ய சக்­தி­க­ளோ­டொப்­பம் மாத்­ய­மங்­க­ளும் பங்­கு­சே­ர­ணும்.

(75 ஆண்­டு­கள் இந்­தி­யா­வைக் காத்த அர­சி­யல் நெறி­க­ளைக் காக்க ஜன­நா­யக சக்­தி­க­ளோடு இணைந்து ஊட­கங்­க­ளும் கருத்­துப் பிரச்­சா­ரத்தை தொடர வேண்­டும்.)

75 ஆண்­டு­க­ளுக்கு முன்­னால் மாநில முத­ல­மைச்­சர்­க­ளுக்கு அன்­றைய பிர­த­மர் நேரு கடி­தம் எழு­தி­ய­போது, “மிக நீண்­ட­கால நன்­மை­யாக இருந்­தா­லும், குறு­கிய கால நன்­மை­யாக இருந்­தா­லும் இந்­தி­யா­வுக்கு ஜன­நா­ய­கமே பொருத்­த­மா­னது! இந்­தி­யா­வுக்கு மட்­டு­மல்ல எந்த நாட்­டுக்­கும் ஜன­நா­ய­கமே பொருத்­த­மா­னது” என்று சொன்­னார்.

அத்­த­கைய ஜன­நா­யக விழு­மி­யங்­கள் கொண்ட நமது இந்­தி­யாவை எந்­நா­ளும் பாது­காக்க நம்மை அர்ப்­ப­ணிப்­போம்!

எண்டெ பிரி­யப்­பட்ட மலை­யாள உடன்­பி­றப்­பு­கள் எல்­லா­வர்க்­கும் நன்னி! வணக்­கம்!

(எனது அன்­புக்­கு­ரிய மலை­யாளி உடன்­பி­றப்­பு­கள் எல்­லோ­ருக்­கும் நன்றி! வணக்­கம்!)

இவ்­வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் உரை­யாற்­றி­னார்.

No comments:

Post a Comment