என்று ஒழியும் இந்த மூடநம்பிக்கை! குழந்தை வரம் வேண்டி பெண்கள் மண் சோறு சாப்பிட்டு வழிபாடாம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 29, 2022

என்று ஒழியும் இந்த மூடநம்பிக்கை! குழந்தை வரம் வேண்டி பெண்கள் மண் சோறு சாப்பிட்டு வழிபாடாம்!

சேத்துப்பட்டு, ஜூலை 29 சேத்துப்பட்டு அருகே, குழந்தை வரம் வேண்டி பெண்கள், மண்டியிட்டு, மண் சோறு சாப்பிட்டு வழிபாடு நடத்தினர். திருவண்ணா மலை மாவட்டம், சேத்துப் பட்டு அடுத்த கோட்டுப் பாக்கம் கிராமத்தில் பரதேசி ஆறுமுக சுவாமிகளின், 186 ஆவது குருபூஜை விழா, ஆடி அமாவாசையன்று நடப்பது வழக்கமாம். 

அதன்படி நேற்று (28.7.2022) நடந்த விழாவில், குழந்தை பாக்கியம் இல்லாத ஏராளமான பெண்கள், குழந்தை பாக்கியம் வேண்டி கோவிலில் நடந்த சிறப்பு யாகத்தில் பங்கேற்றனர். பரதேசி ஆறுமுக சுவாமிக்கு படையலிட்ட பிரசாதத்தை சாதுக்கள் வழங்க, அதை பெண்கள் சேலை மடியில் பெற்று, அங்குள்ள குளக்கரையில் வைத்து, கைகளைப் பின்புறம் கட்டியவாறு மண்டியிட்டு, மண் சோறு சாப்பிட்டனர்.

இதில், 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். இங்கு வழிபாடு நடத்தி,  பணம், தானியம் உள்ளிட்ட பொருட்களை நேர்த்திக்கடனாக செலுத்தி வழிபட்டனர்.

விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்கவேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுகிறது?

இதற்கு என்ன பதில்?

No comments:

Post a Comment