சென்னை, ஜூலை 12 சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தில் 20-க்கும் மேற்பட்ட ஓட்டுநர் பணியிடங்கள் காலியாக இருந்த தால் இந்த காலிப் பணியிடங்களை நிரப்பு வதற்கான நடவடிக்கைகள் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டன. இதற்காக ஏராள மானோர் விண்ணப்பித்தனர்.
இதற்கான விண்ணப்பங்களை பரி சீலித்து நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. இதில் தகுதி பெற்றவர்களின் அடிப்படையில் பட்டியல் இறுதி செய்யப்பட்டது. முதல் 10 இடங்களை மட்டுமே நிரப்ப அரசின் ஒப்புதல் கிடைத்தது. அதற்கான பணி நியமன நடவடிக்கைகளும் தொடங்கப் பட்டன. அதன்படி சென்னை பெருநகர வளர்ச்சி குழும அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஒரு பெண் உள்பட 10 பேருக்கு அமைச்சர் முத்துசாமி பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இதில் சென்னை கொடுங்கையூரை சேர்ந்த இந்து பிரியா (வயது 34) என்ற பெண் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் முதல் பெண் ஓட்டுநராக நியமிக்கப்பட் டுள்ளார். .
இவர் சென்னையில் கட்டடம் கட்டு வதில் விதிமீறல்களை கண்காணிக்கும் குழுவில் இருப்பார்.
அனைத்து திறன்களிலும் பெண்களால் சாதிக்க முடியும் என்று நிரூபிக்க விரும்பி னேன். நான் எஸ்.எஸ்.எல்.சி. முடித்ததும் அதற்கான பயிற்சி பெற்றேன். அரசு பணியில் பெண்களுக்கான வாய்ப்புகள் இருப்பது அறிந்து விண்ணப்பித்ததால் தேர்வானேன்.
இவ்வாறு இந்து பிரியா கூறினார்.
No comments:
Post a Comment