வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் தகவல் தொழில்நுட்ப சிறப்பு மய்யம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 13, 2022

வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் தகவல் தொழில்நுட்ப சிறப்பு மய்யம்

சென்னை, ஜூலை 13 படித்த இளைஞர்களுக்கு உள்ளூரில் வேலைவாய்ப்புகளை அளிக்கும் வகையில் உலகளாவிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான 3அய் இன்ஃபோடெக் லிமிடெட், தொழில்துறையின் எதிர்கொள்ளும் மிகப்பெரிய திறன் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கத்துடன் ஆரக்கிள் அப்ளிக்கேஷன்ஸ் மேம்பாட்டிற்கான தனது முதல் சிறப்பு மய்யத்தை திருநெல்வேலி மாவட்டத்தில் தொடங்கியுள்ளது.

இதுகுறித்து இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தாம்சன் ஞானம் கூறியிருப்பதாவது:

உள்ளூர் திறமையாளர்களுக்கு தொழில் துறைக்கு தயாராக அனைத்து வசதிகள், அறிவு மற்றும் வாய்ப்புகளை வழங்க விரும்புகின்றோம். இது உண்மையிலேயே, சூழலை வழங்கும் - புதுமை மற்றும் படைப்பாற்றலை வளர்க்கும் என தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment