சேலம் பெரியார் பல்கலைக்கழகம் ஜாதி பற்றிய கேள்வித்தாள் 3 பேர் கொண்ட குழு விரைவில் அறிக்கை! அமைச்சர் க.பொன்முடி பேட்டி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 20, 2022

சேலம் பெரியார் பல்கலைக்கழகம் ஜாதி பற்றிய கேள்வித்தாள் 3 பேர் கொண்ட குழு விரைவில் அறிக்கை! அமைச்சர் க.பொன்முடி பேட்டி!

சென்னை, ஜூலை 20- சேலம் பெரியார் பல்கலைக்கழக கேள்வித்தாள் சர்ச்சை தொடர் பாக 3 பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அக்குழு ஒரு வாரத்திற்குள் அறிக்கையை தாக்கல் செய்யும் என்றும் அமைச்சர் முனைவர் க.பொன்முடி தெரிவித்துள்ளார். 

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, ஒன்றிய அரசின் தரவரிசைப் பட்டியலில், தமிழ்நாட்டில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களே முதலிடம் பிடித்துள்ளதை குறிப்பிட்டார். தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் தரத்தை உயர்த்த ஆஸ்திரேலிய நாட்டுடன் இணைந்து செயல்பட வுள்ளதாக அவர் தெரிவித்தார். 

மேலும், சேலம் பெரியார் பல்கலைக்கழக கேள்வித்தாள் சர்ச்சை தொடர்பாக 3 பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அக்குழு ஒரு வாரத்திற்குள் அறிக்கையை தாக்கல் செய்யும் என தெரிவித்த அமைச்சர் பொன்முடி, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள்மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டார். கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் முறை கேடாக கவுரவ விரிவுரையாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தேர்வு எழுதி வெற்றி பெற்றால் மட்டுமே பணியில் தொடரமுடியும் என்றும் அமைச்சர் க.பொன்முடி தெரிவித்தார்.


No comments:

Post a Comment