தமிழ்நாட்டில் ஜூலை 26, 27-இல் கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மய்யம் எச்சரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 25, 2022

தமிழ்நாட்டில் ஜூலை 26, 27-இல் கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மய்யம் எச்சரிக்கை

சென்னை, ஜூலை.25 தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் வரும் 26, 27-ஆம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.

 இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மய்ய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

தமிழ்நாட்டை நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 25, 26, 28-ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், 27-ஆம் தேதி பெரும் பாலான இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.வரும் 26-ஆம் தேதி வட தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்கள், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

வரும் 27-ஆம் தேதி தென் தமிழ்நாடு மாவட்டங்கள், நீலகிரி, கோவை,திருப்பூர், கிருஷ்ணகிரி, தருமபுரி,சேலம், நாமக்கல், திருச்சி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.


No comments:

Post a Comment