காஞ்சிபுரத்தில் தெருமுனைக் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 7, 2024

காஞ்சிபுரத்தில் தெருமுனைக் கூட்டம்

featured image

காஞ்சிபுரம், மார்ச் 7- காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் 13ஆவது வார்டு சக்தி வேல் திருமண மண்டபம் அருகில் 2-03-2024 சனிக்கிழமை மாலை 5.45 க்கு மாவட்டஇளைஞர் அணி அமைப்பாளர் வி.கோவிந்தராஜ் தலைமையில்,மாமன்ற உறுப்பினர் சரஸ்வதி பாலமுருகன், முன் னிலையில் திராவிடர் கழகத்தின் சார்பில் தெரு முழக்கம்! பெரு முழக்கம்! செய்து தெருமுனைக்கூட்டம் தொடங் கியது.

முன்னதாக அனைவரையும் வர வேற்றும் தலைமையுரையும் வி.கோவிந்த ராஜ் நிகழ்த்தினார்.உரையாற்றியோர்;- பா.இளம்பரிதி,பெ.சின்னதம்பி, மு.ஆறு முகம், க.சேகர், சீத்தாவரம் ஆ.மோகன், காரை.அருளானந்தம், காஞ்சி.அமுதன், அறிவு வளர்ச்சி மன்ற பொறுப்பாளர். நாத்திகம் நாகராசன், தலைவர் ச.வேலா யுதம், மாவட்ட செயலாளர் கி.இளைய வேல், தலைமைக்கழக அமைப்பாளர் பு.எல்லப்பன் ஆகியோர் உரையாற்றினர்.

முன்னதாக கழக பாடல்களை காஞ்சி உலக ஒளி சிறப்பாக பாடினார். இறுதியாக மாவட்ட தலைவர் அ.வெ.முரளி சுமார் 45 நிமிடம் பாசிச பா.ஜ.க.வின் ஆபத்தை விளக்கி உரையாற்றினார்.கடைசியாக பெரியார் பெருந்தொண்டர் சுப்பிரமணி நன்றி கூறினார்.அப்பகுதி மக்கள் பாராட் டும் வண்ணம் தெருமுனை பிரச்சாரம் அமைந்தது.

No comments:

Post a Comment