திருச்சியில் மண்டல அளவில் பள்ளிகளுக்கு இடையிலான தற்காப்பு கலைப் போட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 27, 2023

திருச்சியில் மண்டல அளவில் பள்ளிகளுக்கு இடையிலான தற்காப்பு கலைப் போட்டி

திருச்சி, நவ.27சர்வதேச தற்காப்பு கலை சங்கம் சார்பில் மண்டல அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான கராத்தே போட்டிதிருச்சி கே.கே.நகரில் நேற்று நடந்தது. இதில் திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, கரூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டிகளை தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்க மாநில தலைவர் இளஞ்செழியன், சர்வதேச நடுவர் காளீஸ்செழியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதைத்தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில் தொழிலதிபர் சுடர்மணி கலந்து கொண்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பதக் கம், கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். 

போட் டிகளில் வெற்றி பெற்றவர்கள் வருகிற ஜனவரி மாதம் 6 மற்றும் 7-ந் தேதிகளில் திருச்சியில் நடைபெறும் தேசிய கராத்தே போட்டியில் விளையாட தேர்வு செய்யப்பட்டனர்.


No comments:

Post a Comment