இதுதான் ஒன்றிய பிஜேபி அரசு கிராமப்புற வேலை உறுதித்திட்டம் தர வேண்டிய கூலி 4 மாதம்; தந்ததோ 4 வாரம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 10, 2023

இதுதான் ஒன்றிய பிஜேபி அரசு கிராமப்புற வேலை உறுதித்திட்டம் தர வேண்டிய கூலி 4 மாதம்; தந்ததோ 4 வாரம்!

சென்னை, நவ. 10 - கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தில், ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டின் விவசாயத் தொழிலா ளர்களுக்கு வழங்க வேண்டிய 4 மாத கூலி பாக்கியை முழுமையாகத் தராமல், 4 வார காலத்திற்கான கூலியை மட்டும் விடுவித்துள்ளது. 

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் வேலை செய்த 90 லட்சம்  தொழிலாளர்களுக்கு கடந்த 4 மாதமாக ஒன்றிய பாஜக அரசு ஊதியம் வழங்கவில்லை. மேலும் நூறுநாள் வேலைத் திட்டத்தை முடக்கும் நோக்கத்துடனேயே மோடி தலை மையிலான ஒன்றிய  அரசு, பொறுப்பேற்ற நாள் முதல் தற் போது வரை திட்டத்தின் நிதியை குறைத்ததோடு வேலை யையும் கூலியையும் குறைத்துவந்துள்ளது.  

இந்த நிலையில் தமிழ்நாட்டில் வேலை செய்த தொழி லாளர்களுக்கு சுமார் ரூ.3000 கோடிக்கு மேல் ஊதியம் பாக்கி இருக்கும் நிலையில் அதனை தருவதற்கான எந்த நடவடிக்கையும் ஒன்றிய அரசு எடுக்கவில்லை. உடனடி யாக 4 மாத ஊதிய பாக்கியை ஒன்றிய அரசிடம் பெற்றுத் தர வேண்டும் என்று, அகில இந்திய விவசாயத் தொழி லாளர்கள் சங்கத்தின் தலைவர்கள் தமிழ்நாடு முதலமைச் சரை நேரில் சந்தித்து வலியுறுத்தினர். 

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இப்பிரச் சினை தொடர்பாக ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதினார். எனினும், ஊதிய பாக்கியை வழங்கிட ஒன்றிய அரசின் கவனத்திற்கு தொடர்ந்து வலியுறுத்தியும் பலனில்லை.   இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் ஒரு மாத காலம் ஆர்ப்பாட்டம், மறியல், முற்றுகை என தொடர் போராட் டத்தில் விவசாயத் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். 

ஊதியம் கொடுக்கப்படாத சூழலில் நவம்பர் 6 அன்று தமிழ்நாட்டில் 200க்கும் மேற்பட்ட மய்யங்களில் ஒன்றிய அரசின் அலுவலகம் முன்பு  ஒப்பாரிப் போராட்டம் நடத்தி னர்.  தொடர் போராட்டத்தின் பின்னணியில், 4 வாரங்களுக் கான கூலியை ஒன்றிய அரசு விடுவித்துள்ளது. கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு பல லட்சம் கோடி ரூபாயை ஒரே நாளில் அள்ளித் தரும் மோடி அரசு, தொழி லாளர்களின் கூலி  பணத்தை முழுமையாக வழங்காமல் இழுத்தடிப்பு செய் வது நியாயமல்ல என்று விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான எம். சின்னத்துரை, மாநிலப் பொதுச் செயலாளர் வீ.அமிர்த லிங்கம் கூறியுள்ளனர். ஏழை கூலித் தொழிலாளர் களின் ரூ.3000 கோடியை தராமல் இருப்பது எந்த வகை யிலும் ஏற்க முடியாதது;  இது, கிராமப்புறங்களின் பொருளா தாரத் தையும்  நலிவடையச் செய்கிறது. ஆகவே ஒன்றிய அரசு உடனடியாக முழுமை யாக  கூலி பாக்கியை வழங்க வேண் டும் என வலியுறுத்தி யுள்ளனர்.

No comments:

Post a Comment