ஒன்றிய பி.ஜே.பி. ஆட்சிக்கு எதிரான ‘கவுண்ட் டவுன்' தொடங்கிவிட்டது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 2, 2023

ஒன்றிய பி.ஜே.பி. ஆட்சிக்கு எதிரான ‘கவுண்ட் டவுன்' தொடங்கிவிட்டது!


மும்பை,செப்.2-
நேற்று (1.9.2023) மும்பையில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் மூன்றாவது கூட்டத்தின் கூட்டுச் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அளித்த அறிக்கையின் விவரம் வருமாறு:

அனைவருக்கும் வணக்கம். இந்தியாவைக் காப்பாற்றுவதற்காக உருவாக்கப்பட்ட ‘இந்தியா' கூட்டணியைச் சேர்ந்த அனைத்துத் தலைவர் களுக்கும் வணக்கம். பாட்னாவில் கூடும் போது 19 கட்சிகள் - பெங்களூரில் கூடும் போது 26 கட்சிகள் - மும்பையில் கூடிய இன்று 28 கட்சிகள் - என ‘இந்தியா' கூட்டணி நாளுக்கு நாள் வலிமை அடைந்து வருவதை ஊடகவிய லாளர்களாகிய நீங்கள் அறிவீர்கள்.

எங்கே சென்றாலும் - எங்கே பேசினாலும் தன்னுடைய ஆட்சியின் சாதனைகளைச் சொல்லாமல் - எங்களைப் பற்றியே பேசி எங்கள் கூட்டணிக்கு சிறந்த 'பப்ளிக் ரிலேஷன் ஆபீஸ ராக' 'பிரைம் மினிஸ்டர்' அவர்களே செயல்பட்டு வருகிறார்.  இந்தியா கூட்டணியை பாப்புலர் ஆக்கியதற்காக அவருக்கு நான் நன்றி தெரிவித் துக் கொள்கிறேன்.

9 ஆண்டுகள் ஆட்சி செய்தும் சொல்வதற்கு சாதனைகளே இல்லாத ஆட்சி ஒன்றிய பா.ஜ.க ஆட்சிதான். சி.ஏ.ஜி. அறிக்கை சுட்டிக்காட்டி யுள்ள 7.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முறைகேடுகள் பற்றிப் பேசாமல் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அமைதி காக்கிறார். மோடி ஆட்சி நாளுக்குநாள் ‘unpopular’  ஆகி வருகிறது. இந்தியா கூட்டணி ஒவ்வொரு நாளும் ‘popular’  ஆகி வருகிறது. இது ஒரு தேர்தலில் வெற்றி பெறுவதற்கான கூட்டணி மட்டும் அல்ல. இந்திய நாட்டையும் 140 கோடி இந்தியர் களின் எதிர்காலத்தையும் காப்பாற்றுவதற்கான கூட்டணி...

இது கட்சிகள் தங்கள் தேவைக்காக உருவாக்கிய கூட்டணி அல்ல; மாறாக, மக்கள் விருப்பத்தால் உருவாகி இருக்கிற மகத்தான அணி. எதிர்க்கட்சிகள் ஒன்றுபட மாட்டார்களா என ஏங்கிய இந்திய மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்காக உருவாகி இருக்கிற அணி.

மராட்டிய மக்கள் இந்த அணிக்கு இன்று பரிபூரணமான ஆதரவை தெரிவித்து இருக் கிறார்கள். இன்றைய கூட்டம், திருப்திகரமாக மட்டுமல்ல, திருப்புமுனையாகவும் அமைந் திருக்கிறது. இந்தியா கூட்டணிக்கான ஆதரவும், எங்கள் மீதான எதிர்பார்ப்பும் நாட்டு மக்களி டையே நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

பா.ஜ.க.வின் ‘கவுண்ட் டவுன்' ஆரம்பம்!

பொய்களையும் அவதூறுகளையும் வெறுப் பையும் முதலீடாக வைத்து பா.ஜ.க நடத்திவரும் பாசிச ஆட்சிக்கு எதிரான 'கவுண்ட் டவுன்' ஆரம்ப மாகி உள்ளது.  ஒன்பது ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சி யில் ஜனநாயகத்துக்குத் துளியும் மதிப்பில்லை. தற்போது அது இந்தியாவின் ஜனநாயகத்துக்கே அச்சுறுத்தலாக இருக்கிறது. மக்களாட்சியில் தன்னாட்சி அமைப்புகளையும், மரபுகளையும் சிதைத்த அரசாக; தங்களது எதிரான கட்சிகளின் மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட அரசைக் கவிழ்த்த அரசாக மோடி அவர்கள் தலைமை யிலான அரசு வரலாற்றில் பதியப்படும். அதற்கு மகாராஷ்ராவே சிறந்த சாட்சி.

எதிர்க்கட்சிகளை பிளவுபடுத்துவதும், முறை கேடாக சம்பாதித்த பணத்தைக் கொட்டி, விசாரணை அமைப்புகளை ஏவி அவர்களது ஆட்சியைக் கவிழ்ப்பதும் பா.ஜ.க.வின் முழு நேரத் தொழிலாக மாறிவிட்டது. தன்னை எதிர்ப்பவர்களே அரசியலில் இருக்கக்கூடாது என நினைப்பதும் செயல்படுவதும் சர்வாதிகாரம். இந்தியாவில் தற்போது அரசியல் சர்வாதிகாரம் நடந்து கொண்டிருக்கிறது.

இந்த ஆட்சியில் நாடாளுமன்றத்துக்கும் மதிப்பு இல்லை, நீதிமன்றங்களுக்கும் மதிப் பில்லை. தேர்தல் ஆணையம் இந்த அரசின் தலையாட்டி பொம்மையாக ஆகிவிட்டது. E.D., C.B.I., I.T., என எல்லா உயர் அமைப்புகளின் சுதந்திரத்தையும் பறித்துவிட்டு, கூட்டணிக்கு ஆள் பிடிக்கிற - அரசியல் எதிரிகளை அச் சுறுத்துகிற - தங்களுக்கு விருப்பத்துக்கேற்ப செயல்படும் ஏவல் அமைப்புகளாக மாற்றிவிட் டார்கள்.

நரேந்திர மோடி என்கிற தனிநபரிடம் இருந்து ஆட்சி அதிகாரத்தை பறிப்பது எங்கள் நோக்கம் அல்ல, யார் மீதும் தனிப்பட்ட வெறுப்போ வன்மமோ எங்களுக்கு இல்லை. மீண்டும் பா.ஜ.க.விடம் ஆட்சியைக் கொடுத்தால் நாம் பார்த்த இந்தியாவே இனி இருக்காது. அதனால் எதிர்க்கிறோம்.

தனித்தனி கட்சிகளாக இருந்தாலும் - தாய் நாடான இந்தியாவைக் காப்பாற்றுவது ஒன்றே எங்களது இலக்கு. அரசியல் லாபங்களுக் காக நாங்கள் அணி சேரவில்லை. இந்தியாவின் இறையாண்மையை - மாண்பை - மதச்சார்பின் மையை - சமூகநீதியை - சகோதரத்துவத்தைக் காப்பாற்றுவதற்காக சேர்ந்திருக்கிறோம். அந்த இலட்சியத்தை மக்கள் சக்தியோடு நாங்கள் வெல்வோம். பா.ஜ.க வீழ்த்த முடியாத சக்தி அல்ல, வெவ்வேறு மாநிலங்களில் தனித்தனியாக வீழ்த்தப்பட்ட கட்சிதான் பா.ஜ.க

பெருமுதலாளிகளுக்குத் துணை போகும்....

மிருக பலம் எனப்படும் 'brute majority'  இருந்தும் ஏழை, எளிய மக்களுக்கு மோடி ஆட்சியால் எந்த நன்மையும் வரவில்லை. மக் களின் வாழ்க்கைத்தரம் உயரவில்லை.  தற்போது அதிகரித்து வரும் வெறுப்பரசியல் சூழலால், சராசரி இந்திய குடிமகனின் எதிர்காலம் - அப்பாவி மக்களின் உயிருக்கும் உடைமைக்கு மான பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது.  பா.ஜ.க முன்னெடுக்கும் வெறுப்பு அரசியலாலும், வகுப்பு மோதல்களாலும், தங்களுக்கு வேண்டிய பெருமுதலாளிகளுக்குத் துணைபோகும் செய லாலும் உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு குறைந்திருக்கிறது.

ஒரு நாடு ஒரு வரி, ஒரு நாடு ஒரு மொழி, ஒரு நாடு ஒரே கல்வி, ஒரு நாடு ஒரே தேர்தல், ஒரு நாடு ஒரே கட்சி என ஒற்றையாட்சியை - ஒற்றைக் கட்சி நாடாக இந்தியாவை மாற்ற நினைக்கும் பாஜகவுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் இது.

இந்தியாவை பாதுகாக்கிற மகத்தான அரசி யல் களத்தில், கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை உள்ள எதிர்க்கட்சிகள் தங்களை ஈடு படுத்திக் கொண்டு உள்ளன. இந்திய மக்கள் ஒவ்வொருவரும் - இந்தியாவைக் காக்கிற போரில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டி கேட்டுக்கொண்டு ஊடகங்களான உங்கள் ஆதரவையும் கேட்டு விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்!

-இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment