பாதுகாப்புப் படையில் 322 காலியிடங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 10, 2023

பாதுகாப்புப் படையில் 322 காலியிடங்கள்

ஒன்றிய ஆயுத காவல் படையில் காலியிடங்களுக்கு யு.பி.எஸ்.சி., அமைப்புத் தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

காலியிடம்: எல்லை பாது காப்பு படை (பி.எஸ்.எப்.,) 86, மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.,) 55, தொழில் பாதுகாப்பு படை 91, இந்தோ - திபெத் எல்லை போலீஸ் படை (அய்.டி.பி.பி.,) 60, சகஸ்ட்ர சீமா பால் (எஸ்.எஸ்.பி.,) 30 என மொத் தம் 322 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்தி ருக்க வேண்டும்.

வயது : 1.8.2023 அடிப்படையில் 20 - 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, உடல்தகுதி தேர்வு, நேர்முகத் தேர்வு.

தேர்வு மய்யம் : தமிழ்நாட்டில் சென்னை, மதுரை மட்டும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக் கட்டணம்: ரூ200. பெண்கள், எஸ்.சி., /எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள் : 16.5.2023

விவரங்களுக்கு: upsc.gov.in

No comments:

Post a Comment