மீனவர் நல பாதுகாப்பு மாநாடு அம்மாப்பட்டினத்தில் கடைவீதி வசூல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 9, 2023

மீனவர் நல பாதுகாப்பு மாநாடு அம்மாப்பட்டினத்தில் கடைவீதி வசூல்

ஏப்ரல்-14இல் ஜெகதாப்பட்டினத்தில் நடைபெறும் தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து 7.4.2023 அன்று இரவு 8 மணியளவில் அம்மா பட்டினத்தில் கழக இளைஞரணி மாநில செயலாளர் 

த.சீ.இளந்திரையன் தலைமையில், கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் முன்னிலையில் அழைப்பிதழ் வழங்கி கடைவீதி வசூல் பிரச்சாரத்தில் கழகத்தோழர்கள் ஈடு பட்டனர். அழைப்பிதழை பெற்றுக்கொண்டு வணிக பெருமக்கள் மாநாட்டுக்கு நன்கொடையை மகிழ்வுடன் வழங்கினர். உடன்: மாவட்டத் தலைவர் க.மாரிமுத்து, மாநில இளைஞரணி துணைச்செயலாளர் ச.குமார், மண மேல்குடி ஒன்றிய இளைஞரணி செயலாளர் ஆ. யோவான் குமார், பகுத்தறிவாளர் கழக மாநில துணை தலைவர் அ.சரவணன், மண்டல இளைஞரணி செயலா ளர் க.வீரையா, மாவட்ட இளைஞரணி தலைவர் மகா ராசா, பீ.அறிவுச்செல்வன், விமல்ராஜ், ஆகாஸ், கதிர் வேல், ரித்திக்ரோசன்.


No comments:

Post a Comment