மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 11, 2023

மறைவு

அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் ஒன்றியம் நரசிங்கம் பாளையம் பெரியார் பெருந் தொண்டர் ஆசிரியர் பிச்சமுத்து (வயது 88) 9.3.2023 அன்று இரவு வயதுமுதிர்வின் காரணமாகவும் உடல்நலக்குறைவு காரணமாகவும் மறைந் தார்.  அவரது உடலுக்கு மாவட்ட தலைவர் விடுதலை. நீலமேகன் தலைமையில் மாவட்ட செயலாளர் கசிந்தனைச் செல்வன், மண்டல செயலாளர் சு.மணிவண்ணன் ஆகியோர் முன்னி லையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இறுதி ஊர்வலம் நேற்று (10.3.2023) மாலை நடைபெற்றது. 

கழகப் பொறுப்பாளர்கள் மாவட்ட அமைப்பாளர் இரத்தின. ராமச்சந்திரன் ஆண்டிமடம் ஒன்றிய தலைவர் இரா.தமிழரசன், ஒன்றிய செயலாளர் தியாக.முருகன், ஒன்றிய அமைப்பாளர் கோ. பாண்டியன், மாவட்ட இளைஞ ரணி தலைவர் க.கார்த்திக், ஜெயங்கொண்டம் ஒன்றிய தலைவர் மா கருணாநிதி, கவரப்பாளையம் இரா.எ. இராம கிருட்டிணன், த.கு. பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்கள் பங் கேற்றனர்.

No comments:

Post a Comment