Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
உச்சநீதிமன்றத்தின் கடிவாளம்!
March 03, 2023 • Viduthalai

இந்திய தலைமைத் தேர்தல் அதிகாரிகளை ஒன்றிய அரசு தன்னிச்சையாக அறிவித்து வந்த  நிலையில், அதற்கு உச்சநீதிமன்றம் ஒரு தடையைப் போட்டுள்ளது. பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கொண்ட குழுவின் பரிந்துரையின்பேரில்தான் தேர்தல் ஆணை யாளர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என அதிரடி ஆணை பிறப்பித்துள்ளது.  தற்போது நடைமுறையில் உள்ள 3 தேர்தல் ஆணையர் களையும், இதன்படிதான் இனிமேல் தேர்வு செய்ய வேண்டும் என்று  உச்சநீதிமன்றம்  உத்தரவிட்டு உள்ளது.

ஒன்றிய அரசின் தலையீடு இன்றி சுதந்திரமாக செயல்படும் அமைப்புகளில் முதன்மையானதாக இருப்பது தேர்தல் ஆணையம். நாடாளுமன்ற தேர்தல், மாநிலங்களின் தேர்தல்களை நடத்துவதும் அரசியல் கட்சிகளைக் கட்டுப்படுத்துவதும் தேர்தல் ஆணையமே!

ஆனால், இது போன்ற நியமனங்களை ஒன்றிய அரசே தீர்மானிக்கும் நிலைதான் இருந்து வருகிறது.

 தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர்களில் ஒருவராக இருப்பவர் அருண் கோயல்.  தான் வகித்து வந்த ஒன்றிய அரசின் பதவிக்கு விருப்ப ஓய்வு கொடுத்த மறுநாளே தேர்தல் ஆணையராக அருண் கோயல் நியமனம் செய்யப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு,  நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஒன்றிய அரசின் நடவடிக்கையைக் கடுமையாக சாடியுள்ளனர்.  ஆனால், ஒன்றிய அரசின் தரப்பில்,  வாதாடிய தலைமை வழக்குரைஞர் ஆர்.வெங்கடரமணி, உச்சநீதிமன்றம் ஒன்றிய அரசின் அதிகார வரம்பிற்குள் தலையிட முடியாது  என்று கூறி, இதனை விரிவாக அலச வேண்டும் என்றார்.

இந்த வழக்கின் காரசாரமான விசாரணை களைத் தொடர்ந்து, தற்போது உச்சநீதிமன்றம் மிகச் சரியான  தீர்ப்பு வழங்கிக் கடிவாளம் போட்டுள்ளது - வரவேற்கத்தக்கதாகும்.

மேலும், நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சி தகுதிக்கு - எந்தவொரு கட்சியும் தகுதி பெறவில்லை என்றால், அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சியின் தலைவரைக் குழுவில் இணைத்து, தேர்வு செய்ய வேண்டும் எனவும் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், இது தொடர்பாக ஒன்றியஅரசு முறையாக  சட்டம் இயற்றும் வரை இந்தக் குழு செயல்படும் என்று அறிவித்துள்ளது.

தன்னதிகாரம் படைத்த அமைப்புகளை எல்லாம் தன் அதிகாரக் கட்டை விரலுக்கும் கீழ்க் கொண்டு வந்து எதேச்சதிகாரத்தின் உச்சியில் மோடி அரசு ஆட்டம் போட்டது. இப்பொழுது உச்சநீதிமன்றம் வலுவான மூக்கணாங் கயிறைப் போட்டு விட்டது.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில், மசூதியை இடித்தவர்களிடத்திலேயே, ராமன் கோயில் கட்டும் உரிமையை வழங்கிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி - ஓய்வு பெற்ற ஈரம் காய்வதற்கு முன்பே மாநிலங்களவை உறுப்பினர் ஆக்கப்பட வில்லையா?

உச்சநீதிமன்றத்தின் இந்தத்  தீர்ப்புக்குப் பிறகாவது நல்ல புத்தி வருமா ஒன்றிய அரசுக்கு?


Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
காரைக்குடி என்.ஆர்.சாமி இல்ல மணவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியரின் கொள்கையுரை
March 27, 2023 • Viduthalai
Image
இளைஞர்களே, மாவீரன் நாத்திகன் பகத்சிங்கைப் பின்பற்றுவீர்! அது உங்களை ''சொக்க சுயமரியாதைக்காரர்'' ஆக்கும்!
March 23, 2023 • Viduthalai
Image
ஓடப்பராக இருக்கும் ஏழையப்பர், உதையப்பர் ஆக வேண்டியதில்லை! ஓட்டப்பராகிவிட்டால் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாசிசம் வீழ்ந்துவிடும்!
March 27, 2023 • Viduthalai
Image
வேளாண் துறைக்கென்று தனி பட்ஜெட் - 'திராவிட மாடல்' ஆட்சியின் புதிய அணுகுமுறை விவசாயம் 'பாவ தொழில்' என்பது மனுதர்மம் - விவசாயிகளைக் கைதூக்கி விடுவது திராவிடம்
March 22, 2023 • Viduthalai
Image
தமிழ்நாட்டில் விளையாட்டு நகரத்திற்கு இரண்டு இடங்கள் தேர்வு
March 22, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இரங்கல் அறிக்கை இளைஞர் அரங்கம் உடற்கொடை உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn