Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
24 கோடி முஸ்லிம்களை கடலில் வீசுவீர்களா, சீனாவுக்கு அனுப்புவீர்களா? வெகுண்டெழுந்தார் ஃபரூக் அப்துல்லா
March 15, 2023 • Viduthalai

சிறீநகர், மார்ச் 15- 24 கோடி முஸ்லிம்களை என்ன  செய்வார்கள்? கடலில் வீசுவார்களா  அல்லது சீனாவுக்கு அனுப்புவார்களா? என்று நரேந்திர மோடி அரசின் நடவடிக்கைகளுக்கு, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். 

தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா தலைமையில் பாஜக அல்லாத கட்சிகளின் கூட்டம், ஜம்மு - காஷ்மீரில் நடைபெற்றது. பரூக் அப்துல்லா வீட்டில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் எம்.ஒய். தாரிகாமி, மக்கள் ஜனநாயக கட்சியின் அம்ரிக் சிங் ரீன், ஆம்  ஆத்மி உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்பு களின்  பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்றனர். 

இந்தக் கூட்டத்தில், ஜம்மு - காஷ்மீருக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்துவது மற்றும், அதன் மாநில சிறப்புத் தகுதியை மீட்டெடுப்ப தற்காக டில்லியில் தேர்தல் ஆணையத்தை சந்திப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது. 

கூட்டத்திற்குப் பின், பரூக் அப்துல்லா செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். 

அதில் அவர் கூறியிருப்பதாவது:

“மத அடிப்படையில் நாட்டை பிளவுப் படுத்த வேண்டாம். 22 முதல் 24 கோடி முஸ்லிம்களை என்ன  செய்வார்கள்..? கட லில் வீசுவார்களா, அல்லது சீனாவுக்கு அனுப்புவார்களா..? சமூகங்களை ஒருவருக் கொருவர் எதிரெதிராக நிறுத்தக் கூடாது. 

பயம் மற்றும் வெறுப்பு அரசியல் புதிதல்ல. காந்திஜி ராமராஜ்யம் பற்றி பேசினார். ராம ராஜ்ஜியம் என்பதன் மூலம் அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை அனுபவிக்கும் மற்றும் யாருக்கும் பாகுபாடு காட்டாத பொது நல அரசு என்று அவர் அர்த்தப்படுத்தினார். காந்தியாரின் கொள்கைகளை நாம் அனை வரும் பின்பற்ற வேண்டும்.  ஜம்மு - காஷ் மீரை முழு அளவிலான மாநிலத்திலிருந்து யூனியன் பிரதேசமாக மாற்றுவது தேசத்தின் சோகம். 

எனவே, ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில சிறப்புத் தகுதி கோருவது மற்றும் மக்களின் ஜனநாயக உரிமைகளைக் காக்க பேரவைத் தேர்தலை முன்கூட்டியே நடத்த தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக தேர்தல் ஆணையத்தை சந்திக்க நாங்கள் டில்லிக்கு செல்வோம். தேசிய எதிர்க்கட்சி தலைவர் களையும் சந்திப்போம். 2024 தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் அதன்பிறகு, யார் பிரதமர் என்பதை முடிவு செய்ய வேண்டும்.” 

 இவ்வாறு பரூக் அப்துல்லா கூறியுள்ளார்.

Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
இளைஞர்களே, மாவீரன் நாத்திகன் பகத்சிங்கைப் பின்பற்றுவீர்! அது உங்களை ''சொக்க சுயமரியாதைக்காரர்'' ஆக்கும்!
March 23, 2023 • Viduthalai
Image
தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையாருக்கு கருஞ்சட்டையின் கடிதம்!
March 19, 2023 • Viduthalai
Image
அவாளுக்காக அவாளே போட்டுக்கொண்ட தலைப்பு....
March 21, 2023 • Viduthalai
Image
தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் அடுக்கடுக்கான திட்டங்கள் அறிவிப்பு!
March 20, 2023 • Viduthalai
Image
வேளாண் துறைக்கென்று தனி பட்ஜெட் - 'திராவிட மாடல்' ஆட்சியின் புதிய அணுகுமுறை விவசாயம் 'பாவ தொழில்' என்பது மனுதர்மம் - விவசாயிகளைக் கைதூக்கி விடுவது திராவிடம்
March 22, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இரங்கல் அறிக்கை இளைஞர் அரங்கம் உடற்கொடை உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn