Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
பிற இதழிலிருந்து...
February 28, 2023 • Viduthalai

ஒரு நூற்றாண்டு கழித்து பெரியாரின் கோரிக்கையை ஏற்ற காங்கிரஸ்!

இரண்டு நாள்கள் முன்பு சத்தீஸ்கரிலுள்ள நவ ராய்ப்பூரில் நடைபெற்ற 85ஆவது காங்கிரஸ் உயர்மட்டக் கூட்டத்தில் தாழ்த்தப்பட்ட, பிற் படுத்தப்பட்ட, பழங்குடி இனத்தவர், பெண்கள், இளைஞர் மற்றும் சிறுபான்மையினருக்கு காங்கிரஸ் செயற்குழுவில் 50 சதவீத இடங்கள் வழங்கப்பட வழி செய்யும் வகையில் காங்கிரஸ் கட்சியின் சட்டதிட்டங்களில் மாற்றம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. சுமார் 100 ஆண்டு களுக்கு முன்பே, அப்போது காங்கிரஸ் தலைவராக பெரும்பணியாற்றிய பெரியார் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற முயன்றதும், அவருடைய முயற்சி ஒவ்வொரு முறையும் அக்கட்சியிலிருந்த பார்ப்பன ஆதிக்கத்தால் தடுக்கப்பட்டதும் வரலாறு ஆகும். ஆக, பெரியாரின் கோரிக்கையை காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைமை ஒரு நூற்றாண்டு கழித்து ஏற்றுக்கொண்டுள்ளது.

ராஜகோபாலாச்சாரியின் (ராஜாஜி) வேண்டு கோளை ஏற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்த பெரியார், சென்னை மாகாண காங்கிரஸ் கட்சியின் தலைவராக 1922-2023, 1924 மற்றும் செயலாளராக 1925 ஆகிய ஆண்டுகளில் பொறுப்பு வகித்தார். 1920இல், கட்சிப் பொறுப் புகள் அனைத்து வகுப்பினருக்கும் விகிதாச்சார முறைப்படி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முதன்முதலாக காங்கிரஸ் கட்சியின் திருநெல்வேலி மாநாட்டில் பெரியார் தீர்மானமாகக் கொண்டு வந்தார். அந்தத் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. அதன் பின்னர் தஞ்சாவூர், திருப்பூர், சேலம் மற்றும் திருவண்ணாமலையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாடுகளில் இந்த விகிதாச்சார ஒதுக்கீடு கோரிக்கையை அவர் முன் வைத்தபோது அது தொடர்ந்து நிராகரிக்கப்பட்டது.

1925இல் நடைபெற்ற காஞ்சிபுரம் மாநாட்டில் ’பொது நலன் கருதி’ அனுமதி மறுக்கப்படுகிறது என்று கூறி இந்த இட ஒதுக்கீடு கோரிக்கை அடங்கிய பெரியாரின் தீர்மானத்திற்கு அப் போதைய கட்சித் தலைவரான திரு.வி.கலியாண சுந்தரம் அனுமதி அளிக்க மறுத்துவிட்டார். தீர்மானத்தை அனுமதிக்கும் நிபந்தனையின்படி பெரியார் ஆதரவாளர்களால் 50 உறுப்பினர் களின் ஆதரவுக் கையெழுத்து பெறப்பட்டிருந் தும், அம்மாநாட்டில் தீர்மானத்தைப் படிக்கக் கூட அனுமதி வழங்கப்படவில்லை. இதைக் கண்டித்து பெரியார் தனது ஆதரவாளர்களுடன் கூட்டத்தை விட்டு வெளியேறி, அதே காஞ்சிபுரத்தில் மாற்றுக் கூட்டத்தை நடத்தினார். சுய-மரியாதை இயக்கத்திற்கு இந்த கூட்டமே வித்தாக மாறியதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்னர் காங்கிரசில் இணைய பெரியாரை சிலர் ஒப்புக்கொள்ள வைத்தபோது, அவர் உறுதி யுடன் இருந்த சமூக நீதிக் கொள்கைக்கு செயல் வடிவம் கொடுக்க காங்கிரஸ் தகுந்த தளமாக அமையும் என்று அவரிடம் கூறப்பட்டிருந்தது. ஆனால் கட்சியின் அதிகார மய்யங்களில் பொறுப்பேற்று செயல் படும் நிலையில் கூட, தன்னுடைய சமூக நீதிக் கொள்கையை சிறிதும் முன்னெடுக்க இயலாத படி அவர் முடக்கப்பட்ட அனுபவமே அவருக்கு ஏற்பட்டது. கட்சிப் பொறுப்புகளை இட ஒதுக் கீட்டு அடிப்படையில் அனைத்து வகுப்பின ருக்கும் விகிதாச்சார முறையில் வழங்க வழி செய்ய முனைந்த அவருக்கு, காங்கிரஸ் கட்சிக் குள் போதிய ஆதரவைத் திரட்ட இயலவில்லை.

ஆகவே, பெரியார் 1925இல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, சுய-மரியாதை இயக் கத்தைத் துவங்கினார். அதைத் தொடர்ந்து நீதிக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்க அவர் அழைக்கப்பட்டு, தமது சுய-மரியாதை இயக் கத்தை நீதிக் கட்சியுடன் இணைத்து, 1944இல் அதன் பெயரை ‘திராவிடர் கழகம்’ என்று மாற் றினார். திராவிடர் கழகத்திலிருந்து 1949இல் கிளைத்த திராவிட முன்னேற்றக் கழகம், அதிலிருந்து 1972இல் துவங்கப்பட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இரு கட்சிகளும், 1967இல் இருந்து தமிழ் நாட்டைத் தொடர்ந்து அடுத்தடுத்து ஆட்சி செய்து வருகின்றன. பின்னர் தோன்றிய பல சிறிய திராவிட கட்சிகளும் உ:ள்ளன. திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளின் ஆட்சியின் விளைவாக, மக்கள் நல ஆட்சி முறையைக் குறிக்கும் ‘திராவிட மாடல்’ என்ற சொற்றொடர் புதிதாக பயன் பாட்டிற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

98 ஆண்டுகளுக்கு முன்பு பெரியார் முன் வைத்த கோரிக்கையை இன்று காங்கிரஸ் கட்சி ஏற்றுள்ளதை, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் ”இது சமூக நீதிக்குக் கிடைத்த வெற்றி. ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வகுப்புவாதக் கோரிக்கை என்று கூறி புறந்தள்ளப்பட்ட அதே கோரிக்கையை, ஏற்கப்பட வேண்டிய கோரிக்கையாக இப்போது காங்கிரஸ் பார்க்கிறது. இது வரவேற்கப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

(நன்றி: டெக்கான் கிரானிக்கில் - 27.2.2023)


Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
காரைக்குடி என்.ஆர்.சாமி இல்ல மணவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியரின் கொள்கையுரை
March 27, 2023 • Viduthalai
Image
இளைஞர்களே, மாவீரன் நாத்திகன் பகத்சிங்கைப் பின்பற்றுவீர்! அது உங்களை ''சொக்க சுயமரியாதைக்காரர்'' ஆக்கும்!
March 23, 2023 • Viduthalai
Image
ஓடப்பராக இருக்கும் ஏழையப்பர், உதையப்பர் ஆக வேண்டியதில்லை! ஓட்டப்பராகிவிட்டால் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாசிசம் வீழ்ந்துவிடும்!
March 27, 2023 • Viduthalai
Image
வேளாண் துறைக்கென்று தனி பட்ஜெட் - 'திராவிட மாடல்' ஆட்சியின் புதிய அணுகுமுறை விவசாயம் 'பாவ தொழில்' என்பது மனுதர்மம் - விவசாயிகளைக் கைதூக்கி விடுவது திராவிடம்
March 22, 2023 • Viduthalai
Image
தமிழ்நாட்டில் விளையாட்டு நகரத்திற்கு இரண்டு இடங்கள் தேர்வு
March 22, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இரங்கல் அறிக்கை இளைஞர் அரங்கம் உடற்கொடை உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn