Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி
January 06, 2023 • Viduthalai

 நமது மூத்த முதுகுடிமக்கள் ("Super Agers") அறிக! அறிக!!   (2)

மூத்த முதுகுடிமக்கள் என்று ஆய்வில் தரப்படுத்தப்பட்டுள்ள  - 'Super Agers' என்ப வர்கள் நினைவாற்றலை தக்க வைத்துக் கொள்ள முக்கிய காரணிகளாக அவர்கள் ஆய்வின்மூலம் கண்டறிந்தவைகள் நான்கு ஆகும்.

முதலாவது,

பொதுவாகவே, வயது ஏறினாலும்கூட எப்போதும் சுறுசுறுப்புடன் இருக்கும்படி அன்றாட வாழ்க்கையை அமைத்துக் கொள்வது மிக நல்ல பழக்கமாகும் - சரியான வாழ்க்கை முறையும்கூட!

சுறுசுறுப்பாக   உடல் அவயங்கள் அன்றாடம் இயங்கிக் கொண்டே இருந்தால், அதன்மூலம் நாம் சுவாசிக்கும் உயிர்க் காற்று (பிராண வாயு) அதிகமாகும். வயதுக்கேற்ற உடற்பயிற்சிகள் நமது இதயம், தசைகள், முதலியவற்றை பலப்படுத் துவதுடன் நாம் அந்த வயதில் அடிக்கடி கீழே தடுமாறி விழுவதற்குரிய வாய்ப்புகளைப் பெரிதும் குறைக்கின்றன.

தினமும்   உடலுக்கேற்ற மென்மையான உடற் பயிற்சிகள் அவசியமானதாகும். (பெரும்பாலும் நடைப் பயிற்சியே போதுமானதாகும்).

நமது உடல் அளவு பொதுவாக எவ்வளவு இருந்தால் நல்லது - பாதுகாப்பானது என்பதை அறிய  ''BMI-Body Mass Index'' என்பதின்படி பார்த்துக் கொள்வது நல்லது.

உடல் எடையும்கூட நமக்கு முக்கியம். அதிக கூடுதல் எடை விரும்பத்தக்கதல்ல. மூத்த முது குடிமக்கள் இதனைப் பூர்த்தி செய்தவர்கள் ஆவார்கள்.

இரண்டாவது, 

ஒவ்வும் உடற்பயிற்சி எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியத்துவம், மனதிற்கான வேலைகளும் முக்கியம் - மூளைக்கும் பயிற்சி தருவது முக்கியமல்லவா? அதுவே பிரச்சினைகள் வரும்போது எதிர் கொண்டு தீர்வு காணும் நல்ல மனவள உறுதிப் பயிற்சியாகும்!

'சொடுக்கு' (Sudoku) என்ற கணிதப் பயிற்சி சரியாக வரவில்லையே என்று சில முதுமை யாளர்கள் கவலைப்படுவதுண்டு. அதுவில்லா விட்டால் மற்றவை உண்டே  - ஏன் கவலைப் படுகிறீர்கள்? உங்களுக்குப் புதிதாக, அரியதாக உள்ள ஒரு விடயம் குறித்து மனதால் ஆய்வு செய்து அறிந்துகொள்ளும் பயிற்சியில் ஈடுபட்டுப் பாருங்கள், புதியன புலப்படும். பழைய உறுப்புகள் -  மூளை போன்றவை பலமும் பெறும். மூளையைத் தூண்டும் அதிக வேலையைச் செய்ய புத்தெழுச்சியும் மூளைக்குக் கிடைக்கும். கிடைக்க வேண்டும்.

மூன்றாவது,

மூத்த முதுகுடிமக்கள் தனிமையில் இருப் பதைத் தவிர்த்து மற்றவர்களுடன் கலகலப்புடன் பழகும் வாய்ப்புகளை அதிகம் ஏற்படுத்திக் கொள் ளுகிறவர்களானால், அதுவே அவர்களை நினை வாற்றல் மிக்கவர்களாக்கிட பெரிதும் துணைக் கருவிபோல உதவக் கூடும்!

டாக்டர் ரோகல்ஸ்கி கூறுகிறார்: "மற்றவர்கள் மூளை சுருக்கமாகி விடுகிறது; இவர்களின் மூளையோ விரிவடைகிறது" என்பதை ஆய்வின் மூலம் கூறுவதுடன் - "வயதானவர்களுக்கு வரும் சுருக்கமும், குறைவும் இத்தகையவர்களுக்கு பெரிதும் பல ஆண்டுகள் கழித்தே வருகிறது" என்றும் கண்டறிந்தார்.

உதாரணமாக 80 வயது மூத்த முதுகுடி மக் களுக்கு 50, 60 வயது அளவுக்குள் தேய்மானமாவது (ஓர் உதாரணத்திற்கு புரிவதற்காக இப்படிக் கூறுகிறோம்) குறைவான அளவுதான்!

'எக்னோமோ நியூரான்ஸ்' (Economo Neurons)  என்பது நிறையக் கிடைக்கின்றன  - சமூக கலந்துரையாடல் நடப்புகளை ஊக்கப்படுத்த இவை பெரிதும் உதவுகின்றன. இப்படிப்பட்ட மூத்த முதுகுடிமக்கள் இறந்த பிறகு அவர்களது மூளையைப் பற்றி ஆய்வு செய்தால், அதில் மேற்சொன்ன 'எக்னோமோ நியூரான்ஸ்' 4, அல்லது 5 மடங்கு - மற்ற 80 வயதுக்காரர்களை விட கூடுதலாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது! அதனால்தான் நீங்கள் அதிகமாக மக்களோடு கலந்து சமூகப் பணி செய்து சுறுசுறுப்புடன் இயங்கி வந்தால், உங்களை அல்ஷைமர்ஸ் என்ற மறதி நோய் தாக்காது என்றும் கூறப்படுகிறது! இது வேடிக்கையாகக் கூறப்படுவதல்ல ஆய்வு மூலம் டாக்டர் ரோகல்ஸ்கி கண்டறிந்த உண்மையாகும்.

நான்காவது,

இது பெரிதும் மேலை நாட்டு அனுபவம் என்றாலும், நம் நாட்டிலும் அப்பழக்கம் வெகுவாக பரவி விட்டதால் மிதமாக குடிப்பவர்களுக்கு மறதி நோய் தள்ளி வரலாம் அல்லது தவிர்க்கப்படலாம். மற்றவர்களைக் காட்டிலும் 23 சதவிகிதம் இத்த கையவர்களுக்குக் கூடுதல் வாய்ப்பு (மறதி நோய் தவிர்த்தல்) என்பதும் கூட அவர் கூறுவதுவே! 

பொது உண்மை - எதுவும் அளவோடு இருப்பது நல்லதுதானே!

கடைசியானது நமக்கு முக்கியமா? மற்றவை களை மூத்த முதுகுடி மக்கள் பட்டியலில்  'Super Agers'  ஆகிவிட்ட 80 வயதுக்கும்  மேற்பட்டோரே - முயற்சி செய்யுங்கள்!

அப்படி ஒரு சங்கம் வைக்க வாரீர்களா? நல்லது, வரவேற்போம்.

Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
தமிழ்நாடு அரசு குறிப்பாக உயர்கல்வித் துறை தலையிட்டு உடனே தடுக்கட்டும்! தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை
February 06, 2023 • Viduthalai
Image
ஆழந்தெரியாமல் காலை விட்டு அவதிப்படாதீர்! ‘இந்து' ஏட்டின் ஆசிரியர் மாலினிக்கு எச்சரிக்கை!
February 02, 2023 • Viduthalai
Image
இனமலரின் ஈன புத்தி
February 05, 2023 • Viduthalai
Image
சமூகநீதி கோரி வரும் 11 ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்!
February 07, 2023 • Viduthalai
Image
திராவிடர் கழகத் தலைவர்மீது வன்முறையை தொடர்ந்து தூண்டும் 'தினமலர்!'
February 05, 2023 • Viduthalai

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn