“இடம் கொடுத்தும் ஆதிச்சநல்லூர் அருங்காட்சியக பணியை ஒன்றிய அரசு இன்னும் தொடங்கவில்லை” கனிமொழி எம்.பி., சாடல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 30, 2023

“இடம் கொடுத்தும் ஆதிச்சநல்லூர் அருங்காட்சியக பணியை ஒன்றிய அரசு இன்னும் தொடங்கவில்லை” கனிமொழி எம்.பி., சாடல்

தூத்துக்குடி,ஜன.30-தூத்துக்குடி அருகே கடம்பா குளத்தில் உபரி நீர் கால்வாய் சீர்அமைத்து தூர்வாரும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மக்களவை உறுப்பினர் கனிமொழி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். 

தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் அடுத்துள்ள பெரிய குளமான கடம்பா குளத்தில் இருந்து வெளியேறும் உபரி நீரை கால்வாய் சீரமைக்கப்படாமல் இருந்து வந்தது. இதனால் மழை வெள்ள காலங்களில் மழைநீர் வெளியேற முடியாத நிலைஇருந்து வந்தது. இதைத்தொடர்ந்து நீர்ப்பாசன துறை சார்பில் சுமார் 34 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உபரிநீர் கால்வாய் தூர்வாரும் பணி மேலும் நான்கு குளங்களை சீரமைக்கும் பணி இதுபோல், கரைகளை பலப் படுத்துவது உள்ளிட்ட பணிகள் செய்வதற்கு உத்தரவிடப்பட்டு இதைத்தொடர்ந்து இதன் தொடக்க விழா  நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தி.மு.க துணை பொது செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி  “மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு இந்த பணிகளை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதைத் தொடர்ந்து பேசிய மக்களவை உறுப்பினர் கனிமொழி   விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை யான இந்த கால்வாயை தூர் வாருவதற்கான பணிகள் சுமார் 34 கோடி ரூபாய் மதிப் பீட்டில் துவங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தப் பகுதியில் உள்ள கால்வாய்கள் சீரமைக்கப் பட்டு குளங்களும் சீரமைக்கப்படும் என தெரிவித்தவர்.

இந்த பகுதியில் உள்ள பல்வேறு சாலைகள் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைத்து புதிய சாலைகள் அமைப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இதுபோல் இந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கடம்பா குளம் தூர் வருவதற்கான நடவடிக்கைகளும் விரைவில் எடுக்கப்படும். நீண்ட நாள் கோரிக் கையை உடனே நிறைவேற்றி தந்த தமிழ்நாடு அரசுக்கும் கனிமொழி எம்.பி.க்கும் விவசாயிகள் நன்றி தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து செய்தியா ளர்களிடம் பேசிய மக்களவை உறுப்பினர் கனிமொழி  ஆதிச்சநல் லூரில் அகழ்வாராய்ச்சி பணிகள் ஒன்றிய அரசு மூலம் நடைபெற்று தற்போது நிறைவு பெற்றுள்ளது. இந்த பகுதியில் ஒன்றிய அரசு சார்பில் அருங்காட்சியகம் அமைக் கப்படும் என தெரிவிக் கப்பட்டது. 

அதற்கான இடத்தையும் தமிழ் நாடு அரசு தேர்வு செய்து வழங்கி விட்ட நிலையில், தற்போது வரை அந்த பணிகள் நடைபெறவில்லை, இது குறித்து வருகிற நாடா ளுமன்ற கூட்டத்தொடரில் கேள்வி எழுப்ப உள்ளளேன்.

மேலும் ஒன்றிய அமைச்சரிடமும் இதுகுறித்து கோரிக்கை மனு அளிக்க உள்ள தாகவும்   தெரிவித்தார். இதைத்தொடர்ந்து புன்னை காயல் கிராமத்தில் செயல் பட்டு வந்த கிளை அஞ்சல் நிலையத்தை துணை அஞ்சல் நிலையமாக தரம் உயர்த்தப்பட்டது. இந்த அஞ்சல்  நிலை யத்தை திறந்துவைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி   அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர். இதைத் தொடர்ந்து ஒட்டப் பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளை ஊராட்சியில் உள்ள உப்பாத்து ஓடையில் ஓடக்கூடிய தண்ணீரின் நிறம் மாறி சிவப்பு நிறமாக உள்ளது என   புகார் வந்தது.  இதை தொடர்ந்து, அந்த பகுதியில் நேரில் ஆய்வு மேற்கொண்டு தண்ணீர் மாற்றத்திற்கான காரணம் குறித்து அதிகாரியிடம் கேட்டறிந்தனர். இது குறித்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டனர்



No comments:

Post a Comment