Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
பில்லி சூனியத்தால் ஏற்பட்ட பெருங்கேடு!
January 07, 2023 • Viduthalai

ஆந்திரப் பிரதேசத்தில் பில்லி சூனியத்திற்குப் பயந்து 2 ஆண்டுகளாக பகல் பொழுதில் தாய் மற்றும் மகள் வீட்டை விட்டு வெளியே வராமல் குளிக்காமல் இருந்ததால் கடுமையான உடல் நிலை பாதிக்கப்பட்டு காவல்துறையினரால் பெரும் போராட்டத்திற்குப் பிறகு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஆந்திரப் பிரதேசத்தில், காக்கிநாடா மாவட்டத்தில், கொய்யூரு கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வருபவர் சூரிபாபு. இவரது மனைவி மற்றும் மகள் இருவரும் கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் இருந்து தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக வீட்டிலேயே முடங்கிக் கிடந்து உள்ளனர்.

தாய், மகள் இருவருமே கடுமையான மூட நம்பிக்கை வாதிகள், சாலையில் செல்லும் போது சிவப்பு நிறக் கல் இருந்தாலும் உடனே வீட்டிற்கு வந்து தீட்டுக்கான பூஜைகள் செய்வார்கள்; இதனை அவரது கணவரும் கண்டித்துள்ளார். ஆனால் தாய், மகள் இருவருமே கேட்டபாடு இல்லை. 

இந்த நிலையில் கரோனா பெருந்தொற்று, அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட முழு அடைப்பால் இருவரும் நிரந்தரமாக ஓர் அறைக்குள் மட்டுமே இருக்கத்தொடங்கி விட்டனர்; அந்த அறையை விட்டு வெளியே வர மறுத்து விட்டனர். நன்றாக இருட்டிய பிறகுதான் இயற்கை உபாதைகளுக்கு வெளியே வந்துள்ளனர். குடும்பத் தலைவர் சூரிபாபு இவர்களுக்கு எல்லா உதவிகளையும் செய்துவந்தார். நீண்ட நாள் குளிக்காமல், உடை மாற்றாமல் இருந்ததால் அவர்கள் இருக்கும் அறையிலிருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் இவர்களின் உறவினர்களும் அவர்களின் வீட்டிற்கு வருவதை நிறுத்தி விட்டார்கள்.

இந்நிலையில், அவரது மனைவிக்குத் தோல் நோய் ஏற்பட்டு உடலின் மேல்பகுதியில் கருப்பாக தடிப்புகள் ஏற்பட்டு, வலியால் துடித்துள்ளார். இருப்பினும் மருத்துவ மனைக்குச் செல்லாமல் தனது கணவனே தனக்கு செய்வினை வைத்துவிட்டார் என்று கூறி,  கணவர் சூரிபாபுவையும் வெளியே போக விடாமல் அவர்கள் தடுத்துள்ளனர். இதனால், நிலைமை கைமீறிப் போகிறது என உணர்ந்த அவர் காவல்துறைக்கு தொலைப்பேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் அந்த வீட்டுக்குச் சென்றுள்ளனர். 

வீடு முழுவதும் துர்நாற்றம் மற்றும் வீடு எங்கும் பூஜைப்பொருட்கள், கெட்டுப்போன அழுகிய பூக்கள், பழங்கள் போன்றவை இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் தாய், மகள் இருவரையும் வெளியே கொண்டுவர முயற்சித்த போது,  "நீங்களும் எங்கள் மீது பில்லி, சூனியம் வைத்து விடுவீர்கள் - எங்களிடம் கரோனா வைரஸ் உள்ளது, உங்கள் மீது ஏவி விடுவோம்" என்று மிரட்டி உள்ளனர். அதன்பின்பு காவல்துறையினர், மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அவர்களுக்கு மனநல ஆலோசனைகள் கூறியும் கேட் காத நிலையில், அவர்களை பெரும் போராட்டத்திற்குப் பின்பு  வெளியே கொண்டு வந்து காக்கிநாடா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து உள்ளனர். மருத்துவமனையில் தாய், மகள் இருவரின் உடலை தூய்மைப்படுத்தவே பல மணி நேரம் ஆகிவிட்டது என்று செவிலியர்கள் கூறினர்.

மதம் - அதன் குட்டிகளான பில்லி, சூனியம், பேய் இன்னோரன்னவை அறிவை அழிவுச் சேற்றில் தள்ளி, அவர்களின் வாழ்வையே சிதறடிக் கும் கொடுமையை என்னவென்று சொல்லுவது!

இதைப்பற்றியெல்லாம் பொது வெளியில் பேசிட, திராவிடர் கழகத்தை விட்டால் வேறு நாதி உண்டா?

இந்திய அரசமைப்புச் சட்டம் 51-A(h) பிரிவு என்ன சொல்லுகிறது? மக்கள் மத்தியில் விஞ்ஞான மனப் பான்மையை வளர்க்க வேண்டியது ஒவ்வொரு குடி மகனின் கடமை என்று சொல்ல வில்லையா?

குடிமகன் செய்வது ஒருபுறம் இருக்கட்டும்; அர சாங்கமே செய்ய வேண்டாமா? இதற்கென ஒரு தனித் துறையையே ஏற்படுத்த வேண்டாமா?

எங்கே பார்ப்போம்!

Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
காந்தியாரின் 76 ஆவது நினைவு நாள் இன்று!
January 30, 2023 • Viduthalai
Image
முதலமைச்சர் மோடியைப் பார்த்து, பிரதமர் வாஜ்பேயி ''ராஜதர்மத்தைக் காப்பாற்றுங்கள்'' என்று சொல்லவேண்டிய அவசியம் என்ன?
January 27, 2023 • Viduthalai
Image
பதிலடிப் பக்கம்
January 27, 2023 • Viduthalai
Image
அதானி நிறுவன ஊழல்
January 28, 2023 • Viduthalai
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை உடனே செயல்படுத்த வலியுறுத்திய மதுரை திறந்தவெளி மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் முழக்கம்!
January 28, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn