Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
மதச் சார்பின்மை, ஜனநாயகம், கூட்டாட்சி, சமூகநீதி, சமத்துவத்தை சிதைக்கும் பா.ஜ.க.
January 21, 2023 • Viduthalai

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு

கம்மம், ஜன.21- தெலங்கானாவின் சிவந்த பூமியாம் கம்மம் நகரில் இருந்து, தேசத்தின் விடுதலையைப் பாது காப்பதற்கான ஒன்றுபட்ட போராட்டம் தொடங்கியது. உரிமைப் போராட்டத்திற்காக, விவசாயிகளின் ரத்தத்தாலும், வியர்வையாலும் சிவந்த  மண், வகுப்புவாத - பாசிச சக்திக்கு எதிராக ஓங்கி ஒலித்தது. எதிர்கட்சிகளின் உரத்த குரலாக கம்மம் நகரில் கடந்த 18.1.2023 அன்று மாலை நடந்த மாபெரும் பேரணி - பொதுக் கூட் டத்தை கேரள முதலமைச்சர் பின ராயி விஜயன் தொடங்கி  வைத்தார். 

டில்லி விவசாயிகள் போராட் டத்திற்குப் பிறகு நாட்டிலேயே அதிக அளவில் திரண்ட மக்கள் கூட்டம் இது என அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்தனர். 

தெலங்கானாவின் கம்மம் நகரில் பாரத் ராட்டிர சமிதி (பிஆர்எஸ்) ஏற்பாடு செய்த இப்பேரணி எதிர்க் கட்சித் தலைவர்களின் கூட்டமாக வும் மாறியது. மாலையில் கூட்டம்  தொடங்கிய பிறகும், தெலங்கானாவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இளை ஞர்கள் மற்றும் முதியவர்கள் மைதானத்தில் குவிந்தனர். பேரணி யில், பாஜகவுக்கு எதிராக ஒன்று பட்ட போராட்டம் என்ற முழக்கம் எழுப்பப்பட்டது.

பினராயி விஜயன்

பொதுக் கூட்டத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பேசியதாவது: சுதந்திரப் போராட் டத்தின் போது பெற்ற உரிமை களைப் பாதுகாக்க ஒன்றுபட்ட போராட்டம் அவசியம்.    சுதந்திரப் போராட்டத்தின் மூலம் நாம் பெற்ற மதச்சார் பின்மை, ஜனநாய கம், கூட்டாட்சி, சமூக நீதி, சமத் துவம் என அனைத்து உரிமைகளை யும் பாஜக சிதைக் கிறது. நாட்டின் இந்த பின்தங்கிய நிலையை எதிர்த் துப் போராடுவது நமது பொறுப்பு. மக்கள் போராட்ட வரலாற்றைக் கொண்ட தெலுங்கானாவின் கம்மம் மண்ணில் இருந்து இதற்கான கூட்டு எதிர்ப்பு துவங்குகிறது.

ஆளுநர்களின் அட்டூழியம்

ஆளுநர்களைப் பயன்படுத்தி மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் முயற்சி நடைபெறுகிறது. உயர்கல்வித்துறையின் மேம் பாட்டை ஆளுநர் தவறாக பயன் படுத்துகிறார். மாநில  சட்டமன்றங் களில்  நிறைவேற்றப்பட்ட மசோ தாக்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. ஜனநாயகத்தையும் நாட்டையும் காப்பாற்ற, இதுபோன்ற நடவடிக் கைகளை ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும். ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது.  ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அர சுகள் குதிரை பேரம்  மூலம் கவிழ்க் கப்படுகின்றன. வேற்றுமையில் ஒற்றுமை என்பது முத்திரையாக இருக்கும் நமது நாட்டில் ஹிந்தியை திணிக்கும் முயற்சி நடக்கிறது. நீதித்துறையின் சுதந்திரம் கூட தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.  

 ஒன்றிய அரசின் பிளவு படுத்தும் கொள்கைகளுக்கு எதிரான மக் களின் கோபத்தை திசை திருப்பும்  வகையில் இந்துத்துவ வாதத்தை முன்னிறுத்தி நாட்டில் வகுப்புவாத பிளவை ஏற்படுத்த முயற்சி மேற் கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு எதிராக மக்கள் ஒற்றுமையாக இருக்கவேண்டும்.  

இவ்வாறு பினராயி விஜயன் பேசினார்.

கே. சந்திரசேகர ராவ்

தெலுங்கானா முதலமைச்சர் 

கே. சந்திரசேகர ராவ், பேசியதாவது: ''பிரதமர் நரேந்திர மோடிக்கு நேரடி யாகவே நான் இதைச் சொல்கிறேன். இந்த தேர்தலுடன் நீங்கள் வீட்டுக்குச் செல்ல வேண்டும். ஏனெனில், தனி யார்மயம்தான் உங்கள் கொள்கை. தேசியமயமாக்குவதுதான் எங்கள் கொள்கை.'' என தெரிவித்தார்.

 நிகழ்ச்சியில் பேசிய அகிலேஷ் யாதவ், ''2024 தேர்தலுக்கு இன்னும் 400 நாட்கள்தான் உள்ளன. பாஜக தனது நாட்களை எண்ணத் தொடங்கி உள் ளது. தற்போதைய ஆட்சியின் காலம் முடிந் ததும் அது கூடுதலாக ஒரு நாள் கூட ஆட்சியில் இருக்காது.'' என குறிப் பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலமைச்சர்கள்  அரவிந்த் கெஜ்ரிவால், பகவந்த் சிங் மான், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகி லேஷ் யாதவ், சிபிஅய் பொதுச்செய லாளர் து.ராஜா, தெலங்கானா மாநில சிபிஅய்(எம்) செயலாளர் தம்மினேனி வீரபத்ரம் உள்ளிட் டோர் பேசினர்.


Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
காந்தியாரின் 76 ஆவது நினைவு நாள் இன்று!
January 30, 2023 • Viduthalai
Image
முதலமைச்சர் மோடியைப் பார்த்து, பிரதமர் வாஜ்பேயி ''ராஜதர்மத்தைக் காப்பாற்றுங்கள்'' என்று சொல்லவேண்டிய அவசியம் என்ன?
January 27, 2023 • Viduthalai
Image
அதானி நிறுவன ஊழல்
January 28, 2023 • Viduthalai
பதிலடிப் பக்கம்
January 27, 2023 • Viduthalai
Image
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை உடனே செயல்படுத்த வலியுறுத்திய மதுரை திறந்தவெளி மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் முழக்கம்!
January 28, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn