பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படம் அனுமதியின்றி திரையிட பல்கலைக் கழக மாணவர்கள் உறுதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 26, 2023

பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படம் அனுமதியின்றி திரையிட பல்கலைக் கழக மாணவர்கள் உறுதி

புதுடில்லி,ஜன.26- பிரதமர் மோடி, குஜராத் முதலச்சராக இருந்தபோது நடை பெற்ற மதக்கலவரம் குறித்து ‘இந்தியா: மோடி கேள்விகள்’ என்ற ஓர் ஆவணப்படத்தை பிபிசி வெளியிட்டிருந்தது. குஜராத் கலவர வழக்கில் பிரதமர் மோடிக்கு எதிரான எந்த சாட்சியமும் இல்லை என்று கூறி அவரை குற்றச் சாட்டுக்களில் இருந்தும் உச்ச நீதிமன்றம் விடுவித்தது.

இந்நிலையில், டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் (ஜேஎன்யு) நேற்று முன்தினம் (24.1.2023) இரவு 9.00 மணிக்கு இந்த ஆவணப் படம் திரையிட இருப்பதாக மாணவர் பேரவை தலைவர் அயிஷா கோஷ் அறிவித்தார். இதற்கு பாஜக மாணவர் அமைப்பான ஏபிவிபி கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இதையடுத்து தங்களிடம் அனுமதி பெறவில்லை என்று கூறி ஜேஎன்யு நிர்வாகம் திரையிட தடை விதித்தது. ஆனால் மாணவர்களில் ஒரு பகுதியினர் இதை பொருட் படுத்தாமல் மாணவர் பேரவை அலுவலகம் முன் கூடியிருந்தனர்.

இந்நிலையில் 15 நிமி டங்கள் முன்பாக அப்பகுதி யில் மின்சாரம் துண்டிக்கப் பட்டது. எனினும் பதிவிறக்கமான அப்பதிவை மாணவர்கள் க்யூஆர் குறியீடு உதவியால் தங்கள் கைப் பேசிகள், மடிக்கணினிகளில் காணத் தொடங்கினர்.

இந்நிலையில் இரவு சுமார் 10.30 மணிக்கு பதிவை பார்த்து வந்த மாணவர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அயிஷா கோஷ் தலைமையில் மாண வர்கள் போராட்டம் நடத் தினர். ஏபிவிபி மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். ஆனால் தங்கள் மீதான புகாரை ஏபிவிபி மாணவர்கள் மறுத் துள்ளனர். இந்த விவகாரம் குறித்து பல்கலை.நிர்வாகம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

அய்தராபாத்தில்....

இதற்கு முன் அய்தராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் பிபிசி பதிவு முதல்முறையாக திரையிடப்பட்டது. எதிர்ப்பை மீறிபல்கலை.யின் சகோதரத் துவ இயக்கம் எனும் மாணவர் அமைப்பினர் இதை திரையிட்டனர். இதுகுறித்து ஏபிவிபி சார்பில் காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.

கேரளாவில்....

கேரள அரசு சட்ட கல்லூரியிலும் எதிர்ப்புக்கு மத்தியில் இப்பதிவு திரையிடப்பட்டது. இங்கும் விசா ரணை தொடர்கிறது. இந் நிலையில் மேற்குவங்க மாநில பல்கலைக்கழகங்களிலும் இப்பதிவு திரையிடப்பட இருப்பதாக மாணவர்கள் அறிவித்துள்ளனர்.

கடந்த 20.1.2023 அன்று ஒன்றிய அரசின் உத்தரவின் படி, யூடியூப், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங் களில் இருந்து பிபிசி பதிவு நீக்கப்பட்டது. எனினும் இப்பதிவின் வேறுசில வெளி நாட்டு இணையத் தொடர்பு களை திரிணமூல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கள் பகிரத்தொடங்கினர்.

ஜனவரி 26-இல் குடியரசு நாளன்று, கேரளாவில் மாநில, மாவட்டத் தலைநக ரங்களிலும் இப்பதிவை திரையிட இருப்பதாக மாநில காங் கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. 

No comments:

Post a Comment