பெங்களுரு, ஜன.6 கருநாடக மாநிலத்தில் உள்ள பெலகாவி மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் ஆறு பேர் உயிரி ழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 23 பேர் கொண்ட பக்தர்கள் குழு ஒன்று கோவிலுக்கு சென்று வேனில் திரும்பிக் கொண்டிருந்தது. அப்போது ஹுல்குண் டாபகுதி அருகே வந்த போது கட்டுப் பாட்டை இழந்த அந்த வேன் அங்கிருந்த மரத்தில் வேகமாக மோதி விபத்துக்குள் ளானது. இந்த மோசமான விபத்தில் ஆறு பக்தர்கள் நிகழ்வு இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்த நிலையில் 16 பேர் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட் டுள்ளனர். இந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment