புதுடில்லி, ஜன.26- பாஜக அரசின்
9 ஆண்டு கால ஆட்சியில் ஒவ்வொரு இந்தியர் மீதான கடன் ரூ.1.09 லட்சமாக இரண்டரை மடங்கு அதிகரித்திருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது.
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கவுரவ் வல்லப் டில்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஒன்றியத்தில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்று, கடந்த 9 ஆண்டு கால ஆட்சியில் ஒவ்வொரு இந்தியர் மீதான கடன் ரூ.43,124 இருந்து ரூ.1 லட்சத்து 9 ஆயிரத்து 373 ஆக அதிகரித்துள்ளது. 2014இல் இருந் ததைவிட கிட்டத்தட்ட இரண்டரை மடங்கு கடன் அதிகரித்துள்ளது. அதாவது, கடந்த 9 ஆண்டில் மட்டும் ஒவ்வொரு இந்தியரின் கடன் ரூ.66,249 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 1947 முதல் மார்ச் 31, 2014ஆம் ஆண்டு வரை இந்திய அரசின் மொத்தக் கடன் ரூ.55.87 லட்சம் கோடியாக இருந்தது.
இது கடந்த 9 ஆண்டில் 2.77 மடங்கு அதிகரித்து ரூ.155.31 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது ஏன்?” என கேள்வி எழுப்பி உள்ளார்.
No comments:
Post a Comment