மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.25 ஆயிரம் கோடி கடன் பெற்றுத் தர நடவடிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 10, 2023

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.25 ஆயிரம் கோடி கடன் பெற்றுத் தர நடவடிக்கை

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.25 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக வங்கிகளில் கடன் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் தெரிவித்தார்.

சென்னை, கலைவாணர் அரங்கில் சாராஸ் மேளாவை நேற்றுதொடங்கி வைத்த அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், 75-வதுசுதந்திர தினத் தையொட்டி தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள அமுதப் பெருவிழா சிறப்பு மலரையும் வெளியிட்டார்.

நிகழ்வில் அவர் பேசியதாவது: கிராமம் முதல் நகரம் வரை சீரான வளர்ச்சி பெறவே கடந்த 1989ஆம் ஆண்டு - மறைந்த மேனாள் முதலமைச்சர் கலைஞரால் மகளிர் சுய உதவிக் குழுக்களை உருவாக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது 1 கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் சுய உதவிக் குழுக்களில் உறுப்பினர்களாக உள்ளனர்.

அவர்களுக்கு கடந்த ஆண்டு ரூ.20 ஆயிரம் கோடி வங்கிக் கடன் பெற்றுக் கொடுக்க வேண்டும் என முதலமைச்சர் கூறியிருந்தார். அதையும் தாண்டி ரூ.21,360 கோடி கடன் வாங்கிக் கொடுத்து முதல்வரிடம் பாராட்டு பெற்றோம்.

இந்த ஆண்டும் ரூ.25 ஆயிரம் கோடி வங்கிக் கடன் பெற்றுக் கொடுக்க வேண்டும் என முதலமைச் சர் உத்தரவிட்டுள்ளார். அந்த இலக்கையும் தாண்டி அதிக கடன் பெற்றுக் கொடுப்போம். இவ்வாறு அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேசினார்.

No comments:

Post a Comment