ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 23, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

 23.12.2022

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* மோடி அரசை கண்டித்து, தெலங்கானா முழுவதும் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத் ராஷ்டிர சமிதி போராட்டம்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* தமிழ்நாட்டில் நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் சமூகத்தினருக்கு பட்டியல் பழங்குடி தகுதி வழங்கும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த இரண்டு சமூகங்களையும் மாநிலத்தின் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் பரிந்துரையை தொடர்ந்து இது முன்மொழியப்பட்டது. 

தி டெலிகிராப்:

* நடைப் பயணம் நிறுத்தப்படாது. பிரிவினைவாத அரசியலை இந்தியர்கள் ஆதரிக்க மாட்டார்கள் என்பதை இந்த நடைப்பயணம் தனக்கு கற்றுக் கொடுத்ததாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

* ராமர் சேது பற்றிய உறுதியான ஆதாரம் இல்லை. 'செயற்கைக்கோள் படங்கள் தீவுகள் மற்றும் சுண்ணாம்பு கற்களை மட்டுமே கைப்பற்றியுள்ளன' என நாடாளு மன்றத்தில் அரசு தகவல்.

- குடந்தை கருணா 


No comments:

Post a Comment