Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் பேட்டி
December 03, 2022 • Viduthalai

 மருத்துவத் தேர்வில்கூட, ஏறத்தாழ 2,400 இடங்களைப் பிற்படுத்தப்பட்டவர்களுக்குக் கொடுக்காமல் சமூக அநீதி நடைபெற்றுள்ளது!

சமூக அநீதிகளை எதிர்த்து அறப்போர் வியூகங்களை நடத்துவதுதான் திராவிடர் கழகத்தின் பணி!

சென்னை, டிச.3 சமூக அநீதிகளை எதிர்த்து, அறப்போர் வியூகங்களை நடத்துவதுதான் எங்களுடைய, திராவிடர் கழகத்தினுடைய, பெரியார் தொண்டர்களுடைய, திராவிட இயக்கத் தினுடைய பணியாக இருக்கும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

நேற்று (2-12-2022) காலை சென்னை அடையாறு இல்லத்தில், தனது 90ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி செய்தி யாளர்களுக்குப் பேட்டியளித்தார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

அவரது பேட்டி வருமாறு:

என்றென்றைக்கும் களப் போராளியாகவே இருக்கக்கூடிய அவசியம் தவிர்க்க இயலாதது!

இன்றைக்கு எனக்கு 90 வயது என்ற ஓர் அடையாளம் கொடுக்கப்பட்டாலும்கூட, என் றைக்கும் ஒரே தலைமை, ஒரே கொள்கை என்ற அடிப்படையில், தந்தை பெரியாரின் தொண்டனாக இருக்கக்கூடிய எங்களைப் போன் றவர்கள், என்றென்றைக்கும் களப் போராளி யாகவே இருக்கக்கூடிய அவசியம், கொள்கைப் பயணத்தில் தவிர்க்க இயலாததாக இருக்கிறது.

எனவே, அந்த வகையில், இந்த 90 ஆவது வயதில்கூட, சமூகநீதிக்கு சனாதன கும்பலால் மிகப்பெரிய சவால் விடப்பட்டு இருக்கிறது. இந்த சூழ்நிலையில், அவற்றை எதிர்கொண்டு, ‘திராவிட மாடல்’ ஆட்சியைப் பாதுகாக்கவும், இன்றைக்கு ‘சமூகநீதிக்கான சரித்திர நாயகர்’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடைய தொடர்ந்த நல்லாட்சிக்குப் பேராதரவாகவும் இருக்கக் கூடிய அளவில், சமூகநீதிக்கு எதிராக இன்றைக்கு மிகப்பெரிய ஒரு வியூகம் வகுக்கப்படுகிறது.

திராவிடர் கழகம் போன்ற, சமூகப் புரட்சி இயக்கங்களுடைய களப்பணி!

ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. போன்ற அமைப்புகள், தமிழ்நாட்டில் காலூன்றி, எந்த மண் சமூகநீதி மண்ணாக இருந்ததோ, அந்த மண்ணை மாற்ற வேண்டும் என்பதற்காக, காவி மயமாக ஆக்க வேண்டும் என்பதற்காக செய்யும் முயற்சிகளை முறியடிப்பதுதான், திராவிடர் கழகம் போன்ற, சமூகப் புரட்சி இயக்கங்களுடைய களப்பணி வேலையாகும்.

அதிலே முதல் தொண்டனாக என்னை அர்ப்பணித்துக் கொள்கிற நாளாகத்தான் இதை நான் கருதுகிறேன். மற்றபடி இதை ஒரு விழாக் கொண்டாட்டமாகக் கருதவில்லை.

உரிய இட ஒதுக்கீட்டை நிரப்பாமல், ஏமாற்றிக் கொண்டிருக்கக் கூடிய கொடுமை

10 சதவிகித இட ஒதுக்கீடு, முற்பட்ட சமுதாயத்தில், முன்னேறிய ஜாதிக்காரர்களில் உள்ள ஏழைகளுக்கு மட்டும்தான் என்று சொல்லக்கூடிய அந்தக் கொடுமையிலிருந்து, தனியார் மயம் என்ற பெயராலே, பொதுத் துறை நிறுவனங்களை ஆக்கிரமிக்கக் கூடியதும், அதேபோல, உரிய இட ஒதுக்கீட்டை நிரப்பாமல், ஏமாற்றிக் கொண்டிருக்கக் கூடிய கொடுமையும் நடந்துகொண்டிருக்கிறது.

அண்மையில், மருத்துவத் தேர்வில்கூட, ஏறத்தாழ 2,400 இடங்களைப் பிற்படுத்தப்பட்ட வர்களுக்குக் கொடுக்காமல், மறுக்கக் கூடிய சமூக அநீதி  நடந்துகொண்டிருக்கின்றது.

அறப்போர் வியூகங்களை 

நடத்துவதுதான் எங்களுடைய பணி!

எனவே,  இந்த சமூக அநீதிகளை எதிர்த்து, போர் வியூகங்களை நடத்துவதுதான், அறப்போர் வியூகங்களை நடத்துவதுதான் எங்களுடைய, திராவிடர் கழகத்தினுடைய, பெரியார் தொண்டர்களுடைய, திராவிட இயக்கத் தினுடைய பணியாக இருக்கும்.

மக்கள் போராட்டத்தை 

திராவிடர் கழகம் நடத்தும்!

அந்த வகையில், சட்டத் துறையில், சட்டப் போராட்டத்தைத் தமிழ்நாடு அரசு நடத்தினாலும், மக்கள் போராட்டத்தை திராவிடர் கழகம் போன்ற சமூகநீதி அமைப்புகள் போராளியாகக் களத்தில் நின்று நடத்தும் என்பதுதான் இன்றைய செய்தி!

நன்றி, வணக்கம்!

 - இவ்வாறு தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.

Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
ஆழந்தெரியாமல் காலை விட்டு அவதிப்படாதீர்! ‘இந்து' ஏட்டின் ஆசிரியர் மாலினிக்கு எச்சரிக்கை!
February 02, 2023 • Viduthalai
Image
தமிழ்நாடு அரசு குறிப்பாக உயர்கல்வித் துறை தலையிட்டு உடனே தடுக்கட்டும்! தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை
February 06, 2023 • Viduthalai
Image
இனமலரின் ஈன புத்தி
February 05, 2023 • Viduthalai
Image
திராவிடர் கழகத் தலைவர்மீது வன்முறையை தொடர்ந்து தூண்டும் 'தினமலர்!'
February 05, 2023 • Viduthalai
ஈரோடு முதல் கடலூர் வரை சுற்றுப்பயணம்
February 02, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn