இந்தியன் எக்ஸ்பிரஸ்:
கருநாடகாவில் நடைபெற்ற இந்து ஜாக்ரன் வேதிகே மாநாட்டில் பேசிய மாலேகான் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட பாஜக எம்.பி. பிரக்யா தாக்கூர், மிஷனரிகளால் நடத்தப்படும் நிறுவனங்களில் தங்கள் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க வேண்டாம் என்று பெற்றோர்களுக்கு அறி வுறுத்தினார்.
எஸ்.டி.க்களுக்கு 32%, ஓபிசிக்கு 27%, எஸ்.சி.க்களுக்கு 13% மற்றும் இ.டபிள்யூ.எஸ். 4% இடஒதுக்கீடு வழங்கும் சட்டீஸ்கர் சட்டசபை கொண்டு வந்த இட ஒதுக்கீடு திருத்த மசோதாக்களில் கையெழுத்திட ஆளுநர் அனுசுயா உய்கே மறுத்துவிட்ட நிலையில் அவரை எதிர்த்து காங்கிரஸ் பேரணி நடத்திட முடிவு.
தி டெலிகிராப்:
சீன ஊடுருவலை ஒப்புக்கொள்வது, அவர் கூறும் வலிமையான நபருக்கு நேர்மாறான பிரதமரைக் காண்பிக்கும் என்பதால் அப்பிரச்சினை குறித்து மவுனம் சாதிப்பதாக கூறுகிறது தலையங்க செய்தி.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment