நன்னிலம் ஒன்றிய கழக மேனாள் செயலாளரும், முதுபெரும் பெரியார் பெருந் தொண்டருமான அச்சுத மங்கலம் தி.க.கணேசன் (வயது 89) மூப்பின் காரண மாக நேற்று (23.12.2022) மறை வுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம்.
நன்னிலத்தில் நடைபெற்ற மாவட்ட ஜாதியொழிப்பு மாநாட்டிலும், தந்தை பெரியார் முழுவுருவ சிலைத் திறப்பிலும் முக்கிய பங்காற்றியவர். தந்தை பெரியார் காலத்திலிருந்தே கழகம் அறிவித்த போராட்டங்களில் கலந்து சிறை சென்றுள்ளார். அவருக்கு நான்கு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அவரது மகன் பாண்டியன் நன்னிலத்தில் வழக்குரைஞராக உள்ளார்.
அவரது பிரிவால் வருந்தும் குடும்பத்தினர் மற்றும் கழகத் தோழர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி,
(தலைவர், திராவிடர் கழகம்
24.12.2022
தொடர்புக்கு: 9443490158
No comments:
Post a Comment