இந்தியாவில் ஆண்டுக்கு 20 கோடி பேர் கொடிய வெப்ப அலைக்கு ஆளாக நேரிடும்! உலக வங்கி தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 4, 2022

இந்தியாவில் ஆண்டுக்கு 20 கோடி பேர் கொடிய வெப்ப அலைக்கு ஆளாக நேரிடும்! உலக வங்கி தகவல்

புதுடெல்லி, டிச.4- இந்தியாவில் 2030க்குள் ஆண்டுதோறும் 20 கோடி பேர் கொடிய வெப்ப அலைக்கு ஆளாக நேரிடலாம் என்ற உலக வங்கி அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளது.

காலநிலை மாற்றம் உள் ளிட்ட பிரச்சினைகளால் உலக ளாவிய வெப்பம் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் வெப்பத்தின் அளவு கூடிக் கொண்டே போகிறது.

இந்த நிலையில் உலக வங்கி, இந்தியாவின் குளிரூட்டும் துறையில் கால நிலை முதலீட்டு வாய்ப்புகள் என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட் டுள்ளது.

அதில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:-

2030ஆம் ஆண்டுக்குள் ஆண்டுதோறும் 16 கோடி முதல் 20 கோடிப்பேர் இந்தியா வில் கொடிய வெப்ப அலை களுக்கு ஆளாகிற அபாயம் உள்ளது.

இந்தியாவில் காலநிலை மாற்றம் காரணமாக தொடர்ந்து வெப்பத்தின் அளவு அதிகரிக் கிறது. மாற்று முறை மற்றும் புதுமையான ஆற்றல் திறன் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இடங்களை குளிர்ச் சியாக வைத்திருப்ப தற்காக 2040ஆம் ஆண்டு வாக் கில் 1.6 டிரில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.131 லட்சம் கோடி) முதலீட்டு வாய்ப்பு உருவாகும்.

அதிக ஆற்றல் கொண்ட பாதைக்கு மாறுவது, அடுத்த இரு பத்தாண்டுகளில் கார் பன்டை ஆக்சைடு அளவை மிகவும் குறைப்பதற்கு வழி வகுக்கும்.

 மேலும் பசுமைக்குடில் வாயுக்கள் அளவையும் குறிப் பிடத்தக்க அளவுக்கு குறைக்க முடியும். 37 லட்சம் வேலை வாய்ப்புகளையும் உருவாக்க முடியும்.

போக்குவரத்தின் போது வெப்பத்தால் உணவு இழப்பு ஆண்டுக்கு 13 பில்லியன் டாலர் (சுமார் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 600 கோடி) அளவுக்கு ஏற் படலாம்.

தற்போதைய அளவுடன் ஒப் பிடுகையில் 2037ஆம் ஆண்டுக் குள் குளிரூட்டும் தேவை 8 மடங்கு அதிகரிக்கும். அதாவது ஒவ்வொரு 15 வினாடிக்கும் ஒரு குளுகுளு சாதன (ஏ.சி.எந்திரம்) தேவை ஏற்படும். இதனால் அடுத்த இரு பத்தாண்டுகளில் பசுமைக்குடில் வாயுக்கள் உமிழ்வு 435 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

இவ்வாறு அந்த அறிக் கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment