Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
கல்லக்குறிச்சியில் எழுச்சியுடன் நடைபெற்ற பெரியார் - 1000 பரிசளிப்பு விழா
December 04, 2022 • Viduthalai

கல்லக்குறிச்சி, டிச. 4- கல்லக்குறிச்சி பேருந்து நிலையம் அருகில் உள்ள ஏ.கே.டி. கூட்டரங்கில் 21.11.2022 அன்று மாலை 4.30 மணிக்கு கல்லக் குறிச்சி மாவட்டத்தில் பெரியார் 1000 தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

பெரியார் - 1000 தேர்வு, பெரியார் மணியம்மை பல் கலைக்கழகமும், பெரியார் சிந் தனை உயராய்வு மய்யமும் நடத் தியது.

விழுப்புரம் மண்டல கழகத் தலைவர் வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர் தலைமை வகித்தார். மாநில மருத்துவரணி செயலா ளர் மருத்துவர் கோ.சா. குமார், மாவட்ட தலைவர் ம.சுப்பரா யன், பொதுக்குழு உறுப்பினர் த.பெரியசாமி, மாவட்ட பகுத் தறிவாளர் கழக செயலாளர் வீ.முருகேசன், மாவட்ட பகுத் தறிவாளர் கழக அமைப்பாளர் சி.முருகன் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.

கல்லக்குறிச்சி மாவட்ட செயலாளர் ச.சுந்தரராஜன் வர வேற்புரை ஆற்றினார். பெரியார் -1000 தேர்வு எழுதிய 31 பள்ளி களின் ஆசிரியர்கள், மாணவர் கள் பங்கேற்ற இவ்விழாவில் தலைமை வகித்து பேசினார். 

மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000 அரசினர் பெண்கள் மேனிலைப் பள்ளி மாணவி டி.சோனாலிசா பெற்றார். இரண்டம் பரிசினை மு.வான் மதி, மூரார்பாளையம் அரசினர் மேனிலைப் பள்ளி மாணவி ரூ.3000 பெற்றார். மூன்றாம் பரிசினை அரசினர் மேனிலைப் பள்ளி மாணவி கீழ்ப்பாடி கே.சுவேதா பெற்றார்.

பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர் களுக்கு முறையே தங்கப்பதக்கம், வெள்ளிப்பதக்கம், வெண்கலப் பதக்கம் அணிவித்து புத்தகங்க ளும் பரிசாக அளிக்கப்பட்டன. மேலும் ஒவ்வொரு பள்ளிக்கும் பெரியார் மணியம்மை நிகர் நிலைப் பல்கலைக்கழகம் வழங் கப்பட்ட பெரியாரின் படம் நன் கொடையாக வழங்கப்பட்டது.

இவ்விழாவில் பள்ளிகளின் தலைமையாசிரியர், ஆசிரியர் கள், பெற்றோர்கள், மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர். மேலும் இவ்விழாவில் விழுப்பு ரம் மண்டல திராவிட மாணவர் கழக செயலாளர் திராவிடப்புகழ், கல்லக்குறிச்சி மாவட்ட பகுத் தறிவாளர் கழகத் தலைவர் பெ.எழிலரசன், மாவட்ட கழக மகளிரணித் தலைவர் பழனியம் மாள் கூத்தன், மாவட்ட கழக இலக்கிய அணித் தலைவர் செ.சயராமன், கல்லக்குறிச்சி நகர கழக செயலாளர் நா.பெரியார், மாவட்ட கழக இளை ஞரணித் தலைவர் அ.கரிகாலன், செல்வமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கல்லை நகரத் தலைவர் 

இரா.முத்துசாமி நன்றி கூறினார்.

Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
''அரசமைப்புச் சட்டமும் - ஆளுநரின் அதிகார எல்லையும்'' தி.மு.க. சட்டக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் முழக்கம்!
January 21, 2023 • Viduthalai
Image
பெரியார் நினைவிடத்தில் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் மரியாதை - தமிழர் தலைவர் வாழ்த்து
January 23, 2023 • Viduthalai
Image
ஒரத்தநாட்டில் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி
January 22, 2023 • Viduthalai
ஆசிரியர் விடையளிக்கிறார்
January 21, 2023 • Viduthalai
Image
நீட் விலக்கு மசோதா -ஆயுஷ் அமைச்சகம் கேட்ட விளக்கம் ஓரிரு வாரத்தில் அனுப்பப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
January 23, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn